Saturday, September 04, 2021

திராமில் - ஒரு ஆய்வு - சிறுகதை


 "சில நாட்களுக்கு முன்னால் என் மேற்பார்வையில்  ஆய்வு செய்யும்  ஆனந்த் என்பவன் ஒரு புதிர் ஒன்றைக் கொண்டு வந்தான்," என்றார் மேக்னஸ்.

பெரும் auditorium. கிரேக்க Colosseum போல  அமைக்கப்பட்டிருந்தது.  நடுவே அடித்த சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றார் மேக்னஸ். அவர் பின்னால்  இருந்த திரையில் வடிவம் புரியாத எழுத்துக்கள் தெரிந்தன. 

"இருபத்தியோராம் நூற்றாண்டின் முதலில் பிரபலமாக இருந்த பேஸ்புக் என்னும் இணைய தளத்தின் பழைய source code  மறைந்த கலிபோர்னியா மாகாணத்தின் இடிபாடுகளில் இருந்து  சென்ற வருடம் எடுக்கப்பட்டது. ஆய்வாளர்களால் அந்த கணினி மொழியில் இருந்து லட்சக்கணக்கான பேஸ்புக் பதிவுகளை மீட்க முடிந்தது. "

திரையில் பல வரிவடிவங்கள் ஓடி பின் ஒன்று நிற்கிறது.

"ஆனந்த் பழைய தென்னிந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில்  உள்நாட்டுப் போரில் இருந்து  தப்பித்த அவனுடைய பாட்டனாரின் பாட்டனாரின் குடும்பம் அகதிகளாகப் பின்லாந்திற்கு வந்து சேர்ந்தது. சென்ற நான்கு தலைமுறைகளாக ஃபின்னிஷ் மொழி பேசும் அவர்கள், அதற்கு முன் ஆங்கிலம் பெரிதும் கலந்த ஒரு மணிப்பிரவாள மொழியைப் பேசி வந்தார்கள்.

"அந்த மறைந்த மொழியின் வரி வடிவமே நீங்கள் பின்னால் பார்ப்பது."

திரையில் வெள்ளைப் பின்னணியில் சில வரிகள் மிளிர்கின்றன.

"இந்த இறந்த மொழியின் பல ஆயிரக்கணக்கான பக்கங்கள், மீட்டெடுத்த பேஸ்புக்கின் தளத்தில், புதிய ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன. அவற்றின் சில புகைபடங்கள் மேலே. இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியவர் யாரும் தற்போது உயிருடன் இல்லை."

அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒரு முணுமுணுப்புப் பரவியது. மேக்னஸ் திரும்பி ஓரமாக நின்ற ஆனந்தைப் பார்த்துப் புன்னகைத்தார். 

"நீங்கள் நினைப்பது சரியே. சிந்து சமவெளியின் எழுத்துக்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னே தம் ரகசியத்தை கைவிட்டன. இது என்ன பிரமாதம்? இல்லையா?"

"ஆனந்தும் நானும் இந்த மொழியின் முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்தோம். எஞ்சி இருக்கும் தென்னிந்தியாவில் இந்த மொழியை யாரும் பேசுவதில்லை. பேராசிரியர் கார்லோஸ் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்த மொழியை கடைசியாகப் பேசிய வயதானவர் ஒருவரை ஒலிப்பதிவிட்டார். அந்தப் பதிவு இதோ."

அரங்கின் ஒலிபெருக்கிகள் கரகரத்தன. முனகும் குரலில் யாரோ ஒருவர் பேசுவது கேட்டது. கீழே திரையில், "டென் ருபீஸ் ...." என்று  வந்தது. 

"பெரியவர் முதலில் சொல்வது ஆங்கிலம்," என்றார் மேக்னஸ். "இந்திய பணமான ரூப்யா என்பதைச் சொல்கிறார். டென் என்பது ஆங்கிலச் சொல் - பத்து என்று பொருள். பத்து ரூப்யா என்று அவர் சொல்வது புரிகிறது. பிறகு? பல முயற்சிகளுக்குப் பின்னும் அவர் கடைசியில் சொல்வது என்ன என்று புரியவில்லை. அது இந்த மர்ம மொழியாகவும் இருக்கலாம். அல்லது ஆங்கிலமாகவும் இருக்கலாம். "

"இந்த நேரத்தில் தான் பேஸ்புக்கின் அகழ்வாராய்ச்சி நமக்கு உதவுகிறது. இது போன்ற இறந்த மொழிகளை மட்டுமின்றி, அதைப் பேசியவர்களின் வாழ்க்கையைக் குறித்தும், அவர்கள் ஆசாபாசங்களைக் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. கடைசியில் ஆனந்துக்கு இது ஒரு வகை தனிப்பட்ட வெற்றி.

"ஆனந்தின் வீட்டில் இந்தப் பழைய மொழியை திராமில்  என்று அழைத்தார்கள். இந்த மொழி மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாகவும், ஆனால் இதில் ஒரு வரி கூடப் படிக்கத் முடியாதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான நிலை. இருபதாம் நூற்றாண்டில், இந்த திராமில் மொழி புழக்கத்தில் இருக்கும் போது இந்நிலை  கட்டாயம் இருந்திருக்காது."

"ஆனந்த், வா," என்றார் மேக்னஸ்,

ஆனந்த் வந்து அவருக்கு அருகில் இருந்த மைக்கை எடுத்துக் கொண்டான். அவன் குடும்பத்தில் பின்லாந்தினருடன் கலப்பு இருந்திருப்பது நன்கு தெரிந்தது. 

"திராமில் மொழியில் நமது காவியமான கலேவலாவிற்கு நிகராக பல காவியங்கள் இருந்ததாக என் தாத்தா சொல்வார். அந்தக் காவியங்களைக் குறித்தும் அவற்றின் ஆராய்ச்சியிலும்  பேஸ்புக்கில் பல விவாதங்கள் நடந்திருக்கும் என்பது என் அனுமானமாக இருந்தது. 

"சுத்தமாக வடிவம் தெரியாத இந்த மொழியை decode செய்ய நான் முதலில் கையில் எடுத்தது பேஸ்புக் அகழ்வாராய்ச்சியில் பழக்கமான ஒரு technique.பொதுவாக பேஸ்புக்கில் நடக்கும் விவாதங்களில் 'பேஸ்புக்" என்னும் சொல்லே பல முறை வருவதை அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு கணிப்பின்படி கிட்டத்தட்ட இரண்டு  சதவிகிதம் சொற்கள் சராசரியாக  பேஸ்புக் என்றே வருகின்றன.

"திராமில் மொழியை இது போல ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மேலே இரண்டு சதவிகிதம் வரும் சில வரிவடிவங்களைக் கொடுத்திருக்கிறேன்."

திரையில், 

"முகநூல்"

"துரோகி"

"பெரியார்"

"தமிழன்"

"வந்தேறி"

என்று புரியாத வரிவடிவங்கள் வருகின்றன. 

"முதலாவதான 'முகநூல்' என்னும் வரிவடிவத்தை Facebook என்று எடுத்துக் கொண்டால் திராமிலில்  நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன. Facebook ஆங்கிலச் சொல்லிலும் நான்கு மாத்திரைகள் இருக்கின்றன. இது நல்ல candidate என்று எண்ணி "மு" என்பதே Pe என்னும் syllable என்று கருதினோம். ஆனால் விரைவில் இது தவறு என்று தெரிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத உழைப்பு வீணாகிற்று. "

"அப்பொழுது என் பாட்டி தம் சிறு வயதில் நினைவு கூர்ந்ததை வைத்து திராமில் மொழியில் ஆங்கில பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கும் பழக்கம் உண்டு என்று தெரிவித்தார். பாட்டி இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம்."

அரங்கில் சிரிப்பு பரவியது. 

"இந்த மொழியை எளிதில் உடைக்க முடியாது என்று தெரிந்து கொண்டோம். பேஸ்புக்கில் பழைய திராமிலர்கள் ஒளித்து வைத்துள்ள ரத்தினங்களைப் பெற முடியுமா என்று பரிதவித்தேன். அப்போது பேராசிரியர் ஆண்ட்ரூவை இங்கிலாந்தில் போய்ப் பார்த்தேன்.

"ஆண்ட்ரூ பேஸ்புக்கில் விளிம்பு நிலை  என்னும் புத்தகத்தை எழுதியவர். அவர் ஒரு முக்கியமான கோட்பாட்டை முன்வைத்தார் - அதாவது இருபத்தியோராம் நூற்றாண்டின் சமூக வலைத்தளங்கள், ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சரணாலயமாக இருந்தன. ஒரு சர்வாதிகார நாட்டில்  இந்த ஒடுக்கப்பட்டவர்கள் பொதுவாக ஜனநாயகத்திற்குப் போராடுபவர்கள். ஆனால் ஒரு ஜனநாயகத்தில்? நான் ஆய்வு செய்த காலத்தில், ஜனநாயக இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த திராமிலரில்,  யார் ஒடுக்கப்பட்டவர்கள்? அவர்களுடைய பதிவுகளே பேஸ்புக்கில் பெரிதும் இருக்கும். 

"நான் திரும்ப பின்லாந்து வரும் போது யோசித்தபடி வந்தேன். ஜனநாயக இந்தியா என்றார் ஆண்ட்ரூ. ஆனால் இந்தியா அப்போது வெறும் ஜனநாயகம் அல்ல. மதசார்பற்றது!"

கூட்டத்தில் பலர் தலையை ஆட்டினர்.

"என்னுடைய தியரி உண்மையானால் மதசார்பற்ற நாட்டில் மத நம்பிக்கையுள்ளவர்களே அல்லவா ஒடுக்கப்பட்டவர்கள்? ஆனால் இதை எப்படி நான் ருசுப்படுத்துவது? 

"இங்கே எனக்கு இந்தியாவின் மற்றொரு அம்சம் உதவியது. இந்தியாவின் பழைய அரசியல் சட்டம் இந்தியாவைப் பொதுவுடைமை நாடு என்றும் அழைத்தது. அப்படியானால் பொதுவுடைமைக்கு எதிரான முதலாளித்துவ ஆதராவளர்களே அப்போது பெரிதும் பேஸ்புக்கில் எழுதி வர வேண்டும். அதிர்ஷ்ட வசமாக முதலாளித்துவர்கள், முதலீடு அறிவுரை செய்பவர்கள் பலர் ஆங்கிலத்தில் எழுத கூடியவர்கள்.

"சென்ற கிறிஸ்துமஸ்  இரவு பேஸ்புக்கில் இது போன்ற ஆங்கிலப் பதிவுகள் எந்த அளவுக்கு முதலாளித்துவ ஆதரவு என்று பார்த்தேன். மறு நாள் விடை தெரிந்தது. கிட்டத்தட்ட  தொண்ணூறு சதவிகிதம் நான் நினைத்தது போலவே இருந்தது. இந்த விடையை எடுத்துக் கொண்டு பேராசிரியர் மேக்னஸை அணுகினேன்."

மேக்னஸ் இப்போது தொடர்ந்தார். 

"புதிரை அவிழ்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். மதசார்பற்ற இந்தியாவில் மத நம்பிக்கை உள்ளவர்களே பெரும்பாலும் பேஸ்புக்கில் திராமில் மொழியில் எழுதுபவர்கள். அவர்களுடைய பதிவுகளை இந்த ஞானத்தோடு அணுகினால்,  ஐம்பது சதவிகிதம் அவர்கள் பயன்படுத்தும் சொற்களை புரிந்து கொண்டு விடலாம். இந்த அடிப்படையில் திரையில் உள்ள சொல்லே திராமிலின் "Pa" என்னும் syllable.முதலில் நாம் decode செய்தது இதுவே."

"ப" என்று திரையில் வந்தது. 

கரகோஷம் அரங்கில் எழுந்தது. 

"இது "na"," என்றார் மேக்னஸ்.

"ன" என்று திரையில் வந்தது. 

அரங்கில் ஒருவர் கையில் மைக் எடுத்தார்.

"மேக்னஸ், ஆனந்த், உங்கள் கணிப்புப்படி அதிக சதவிகிதம் வந்த சொற்கள் அவர்களுடைய மதம் குறித்த சொற்களா? அது என்ன மதம்? அவை என்ன சொற்கள்?"

மேக்னஸ் தலையாட்டினார்.

"நாற்பது சதவிகிதம் வந்த சொற்கள் என்று கீழே உள்ள இரண்டையும் சொல்லலாம்."

திரையில் 

"பார்ப்பான்"

"பார்ப்பனீயம்" 

என்று வந்தது. 

ஆனந்த், "பாட்டி சொன்னது போல அவர்கள் தம்மையே பெரிதும் refer செய்து கொள்கிறார்கள். முதலாவது அவர்கள் இனத்தின் பெயர் - பார்ப்பான். அத்துடன் "ஈயம்" என்னும் விகுதி சேர்ந்தால் அது "பார்ப்பான்களின் வழி," அல்லது "நெறி" என்று கொள்ளலாம்.  பழைய திராமிலர்களின் பேஸ்புக் பயன்பாடு வைத்து நாம் தெரிந்து கொள்வது இதுவே- அவர்கள் பார்ப்பனீயத்தை பின்பற்றியவர்கள். அதனிடம் பெரும் பக்தி கொண்டவர்கள்"

மறதி - சிறுகதை


 சண்டை போடும்  போது எனக்கும் என் மனைவிக்கும் இருக்கும் நினைவுக் கூர்மை ஆச்சரியம் அளிக்கும். வகையில் அதிகமாகி வந்தது. 

2000-த்தில் திருமணம் முடிந்த மறு நாள் கட்டுசாதக் கூடை எல்லாம் முடிந்து என் அப்பா சாமான்களை வேனில் ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார். பெண் வீட்டார் சிலர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மூட்டையை எடுத்து வைத்து விட்டு அப்பா அவர்களைப் பார்த்து, "Can you not help? Don't you have any manners?" என்று கத்தினார்.

இதை 2021-ம் வருடம் ஆவணி மாதம் முதல் தேதிச் சண்டையில் சொல்லிக் காட்டினாள் பிரேமா. 

"பெண் வீட்டுக்காரங்கள்னா அவ்வளவு இளக்காரம். வெளியில தான் liberal-னு நடிப்பு," என்றாள். 

"அவர் English-ல தான கத்தினார். உங்க குடும்பத்துக்குத் தான் புரியாதே," என்றேன் நான். 

இந்தச் சண்டையின்  முடிவில் இரண்டு பக்கமும் நன்றாகக் குத்திக் கிளறிய பின், இரவு பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகள் இருவரும் தூங்கி விட்டார்கள்.  

"நாம ரெண்டு பேருக்கும் நிறைய history இருக்கு, " என்றேன் நான்.  "அதான் இப்படிச் சண்டை வருது."

"நான் ஒரு article படிச்சேன். ஏதோ ஒரு unresolved issue நமக்குள்ள இருக்கு," என்றாள் அவள். "அதை நீங்க முதல்ல டாக்டர் கிட்ட போய் கண்டுபிடிக்கணும்."

"நான் எதுக்கு போகணும்? அதுவும் பையித்தியக்கார டாக்டர் கிட்ட?" என்றேன் நான். 

சில நாட்கள் சென்ற பின் மற்றொரு சண்டையில் தட்டுக்கள் எல்லாம் பறக்க ஆரம்பித்த பின் இருவரும் நிஜமாகவே ஒரு மனோதத்துவ நிபுணரை online-ல் பார்த்தோம்.  ஒரு மணி நேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய். மேலே ஒவ்வொரு அரை மணிக்கும் ஆயிரம் ரூபாய். 

"ரொம்ப பழசெல்லாம் போட்டுக் கிளர்ரா மேடம். ரெண்டு வாரம் முன்னாடி எங்க கல்யாணத்துக்கு  மறு நாள் வரைக்கும் போயிட்டா," என்றேன் நான். 

"இவருக்கு தேதி, டைம்  எல்லாம் நினைவிருக்கு மேடம். இவ்வளவு தூரம் பழசை எல்லாம் நினைவு வச்சிருந்தா அவரோட mental health-க்கு நல்லதில்லையே?" 

எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது. 

"There is some unresolved issue," என்றாள் பிரேமா மறுபடி. 

நிபுணரைச் சில முறை சந்தித்த போதும் சண்டைகள் குறையவில்லை. 

ஒரு முறை அவர் சொன்னார், "நீங்க ரெண்டு பேரும் ஒரு pattern-ல set ஆயிட்டீங்க. கல்யாணம் ஆன புதுசுலையே வந்திருந்தீங்கன்னா இவ்வளவு bad memories accumulate ஆயிருக்காது."

நாங்கள் நிஜமாகவே வருத்தமடைந்தோம். பிள்ளைகள் இருவரும் இப்போது நாங்கள் கத்திக் கொள்ளும் போது ஒரு மாதிரி வேறு ஏதோ உலகத்திற்குப் போய் விடுவது தெரிந்தது. 

"Hypnosis முயற்சி பண்றீங்களா?" என்றார் நிபுணர். 

"அதுல எப்படி இதை சரி பண்ணுவீங்க?" என்று கேட்டாள் பிரேமா. 

"புது research இது பத்தி வந்திருக்கு. உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் உள்ள தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட கசப்பான நினைவுகளை மறக்கடிக்க suggestion கொடுக்கலாம்."

பிரேமா அந்த ஆராய்ச்சிக் கட்டுரை  வாங்கிப் படித்துப் பார்த்தாள். 

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் HR, hypnosis மூலமாக வேலை பார்ப்பவர்களின் negative நினைவுகளை மறக்கடித்திருந்தார்கள். இப்போது எல்லோரும் அந்தக் கம்பெனியில் மிகவும் மகிழ்ச்சியாக  இருப்பதாகத் தெரிவித்தாள்.  எல்லோரும் ஒரு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

"எனக்கு hypnosis work ஆகாது," என்றேன்.

"ஏன்?"

"எனக்கு மனோபலம் அதிகம்." 

"ஐயே!"

மனோதத்துவ நிபுணரிடம் சம்மதம் தெரிவித்தோம். 

"Hypnosisல தேதி அடிமனதுக்குத் தெரியாது. நீங்க ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவம், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவானது, கொண்டு வாங்க. அந்த சம்பவத்துக்கு முன்னால எல்லாத்தையும் மாத்திரலாம்." 

அடுத்த வாரம் நேரில் போவதற்கு நாள் குறித்துக் கொண்டோம்.

"முடிஞ்ச வரைக்கும் latest-ஆ ஏதாவது  choose பண்ணலாம். போன மாசம் உங்க cousin வீட்டு கல்யாணம் போயிருந்தோமே?" என்றாள் பிரேமா.

நான் யோசித்துப் பார்த்தேன். 

"ஆமா, ஆனா அதுக்கு அப்புறம் வந்த sunday நான் உன்னைப் பார்த்து கெட்ட  வார்த்தை சொல்லித் திட்டினேன்."

"அதுனால?" 

"அதுக்கு முன்னால எல்லாம் மறந்திட்டா நான் தான் இப்ப கெட்டவனா ஆயிருவேன். அது தான உன்னோட plan?"

"அப்படிப் பாத்தா நீங்க கெட்ட வார்த்தை சொல்லித் திட்டாத நாளே கிடையாது. அதுக்கு நான் என்ன பண்ண?"

"நீ என்ன பெசன்ட் நகர்ல டிரைவர் முன்னாடி அசிங்கம் பண்ணியே, அது தான் என் வாழ்க்கையிலேயே நான் publicல அவமானப்பட்டது. அதை நான் மறக்கிறதா இல்லை."

"அதுக்கு காரணம் உண்டு. நீங்க அன்னைக்கு என்ன பண்ணினீங்க?"

நான் ஒரு வினாடி நிதானித்து, "என்ன பண்ணேன்?" என்றேன். 

"நினைவில்லையா?" 

"நிஜமாவே இல்லடி!"

சற்று நேரம் இருவரும் மவுனமாக இருந்தோம். 

"இந்த இழவெல்லாம் எதுவும் வேண்டாம்," என்றேன் நான்.  


Saturday, August 28, 2021

Kerala COVID Numbers - why the pandemic is great for them


 Folks, I found why Kerala govt may be fine with Covid - they have lesser number of deaths in 2020 and 2021 WITH the pandemic than would have been without it! Follow my logic below.

The Kerala registry of births and deaths called the Civil Registration System (CRS) is here: https://cr.lsgkerala.gov.in/Pages/map.php
Every year, deaths in Kerala increase by an amount, because of population increase etc. Suppose you try to find by how much this increases, then you have:
Total deaths registered in Kerala 2015 - 2,36,883
2016 - 2,44,943 - up 8060 from previous year`
2017 - 2,52,131 - up 7188 from previous year
2018 - 2,55,624 - up 3493 from previous year
2019 - 2,64,186 - up 8562 from previous year
Ignoring 2018, when the rise in deaths is deviant, we can say that the deaths rise by between 7000 and 8000 every year.
So, WITHOUT THE PANDEMIC, in 2020, the deaths in Kerala should have been around 2,71,000 (2,64,000 + 7,000)
The actual deaths registered in CRS for 2020 was 2,43,601! That is Kerala had LESS people die with the pandemic than what would have been, without the pandemic! Maybe this is why they think the pandemic is great.
In fact, the Kerala govt has a propagandistic piece precisely saying this - that due to excellent management, their all-cause mortality dropped by 10% (link below). (They take care to take a potshot at developed countries and other states in India)
But Kerala’s former health secretary, Rajeev Sadhanandan has identified the reason why this is messed up - “"But soon, we realised that death registration, which used to be near 100% in Kerala, had come down due reduced mobility, reluctance to visit government offices, increase in the number of home deaths due to reluctance to visit hospitals, etc." (link below)
In other words, the Kerala govt is knowingly lying in that above piece.
More amazing results from Kerala are there.
For 2021, if you find the number of deaths reported in the CRS upto Aug 28, 2021, it is 1,64,804.
By our method above, the total deaths in 2021 should have been around 2,78,000 for the full year, without the pandemic.
Assuming deaths are distributed uniformly with months, upto August, Kerala's projections for deaths without the pandemic will be:
278000*(8/12) = 1,85,000.
Instead the actuals are 1,64,000 WITH THE SECOND WAVE! That is, in spite of the mayhem in May, June, Kerala has 20,000 LESSER deaths than would have been without the pandemic!
This is why Kerala administration do not want the pandemic to stop.
It is clear from this that the Kerala CRS is majorly screwed up OR as Sadanandan says, deaths are not accurately registered in Kerala, at least in the pandemic years.
Certainly, if this kind of discrepancy occurred in UP, we all know what the response and mocking will be about how irrational those Northies are.
But there is a very important corollary here - BBC wrote a laudatory article on Kerala, in which it claimed that Kerela has least deviation between actual COVID deaths; and “excess deaths”. This article was much circulated as an example of the Kerala model.
But this BBC article relies on an Indiaspend article to perform the actual analysis (all links below)
The Indiaspend article depended upon The Newsminute for this data for Kerala alone.
Using a slightly different (wrong) method, The Newsminute relied on the above CRS data to make the case that Kerala’s deviations in COVID numbers were low. Specifically, it claimed that the actual deaths in Kerala were a certain number.
(Actual Deaths Registered - Projected Deaths without pandemic) / Official Covid deaths = Deviation between official stats and reality.
This deviation, according to The Newsminute, was around 200% for Kerala.
But Newsminute’s actual death number calculation is wrong to rely on CRS data from Kerala at all, as we just saw (and as Sadanandan explained)! If most deaths were not captured by the CRS itself, then the real number of deaths could be much higher, making Kerala come in line with other states like Tamilnadu (750%).
So, basically this calculation based on unreliable stats from Kerala was laundered by these propagandists into BBC, the epitome of true reporting. This is what happens when you allow anti-fascist zeal to go into over-drive.
Newsminute article - https://www.thenewsminute.com/article/tnm-exclusive-kerala-reports-almost-14000-excess-deaths-till-end-may-2021-151124
Kerala govt note on drop in mortality in 2020 - https://health.kerala.gov.in/.../Technical-paper-All...

Friday, June 04, 2021

Indian Government has to regulate Facebook, Twitter and Google


 The US immigration system is notoriously unresponsive and unaccountable - if your visa gets rejected that is it.

Now, to some extent that is understandable - you are on foreign soil.
Facebook, Twitter and Google have created a system IN INDIA, that is equally or worse unaccountable and unresponsive. And our courts have gone along with them - let us see how.
There are four problems that immediately you can notice with them:
1. They do not allow collective appeals - you cannot band together as an affected party and report anything to them. You cannot identify patterns of usage or anything. You can report individual instances of violation that will NEVER be considered together.
2. Their content guidelines are decided by a group on top (because they are a private company) - they appear answerable to none. But they regularly show up in congressional hearings in the US and their guidelines are suited to western concerns.
When discussing hate speech, Facebook cites very specific items you cannot write - about Jews, Muslims and African Americans. These are concerns of the West; and people in far-flung places are supposed to guess at a level of abstract thinking about what will qualify as hate speech in their regions.
3. Their decisions on abusive speech are unappealable - and offer no explanation of why they decided something is not abusive speech.
As an example, the word பார்ப்பான் for Brahmins is derogatory - but repeated appeals to Facebook to ban such instances, under their OWN content guidelines are useless and there are no explanations.
4. Facebook does not have a solution to a situation like Tamilnadu - where the broader population is itself inured hate speech. This means content moderators who are selected to make decisions are also often from the same society, making decisions that cannot really be unbiased. It is like asking Nazi Germans to moderate hate speech themselves in 1938.
To solve these kind of problems, in 2011, the Government of India tried to bring in a system which required grievance officers and multi-level appealing process from IT intermediaries.
However, in 2015, the SC of India struck it down - in the judgement in Shreya Singhal vs Union of India, in case there is hate speech in social media you need to go to court; fight to have it classified as hate speech; and THEN go to the social media company to remove that instance, in case a decision is favorable to you!
That is, for each instance of hate speech you need to file a writ petition, folks!
Our own courts thus abandoned us to hate speech.
The current IT intermediary rules are going to suffer the same fate - because the courts do not understand that hate speech in high volume is different from writing about someone in a newspaper.
Meanwhile, we should note that the Western media has been running interference against our government's efforts to protect us, by calling the government itself as fascist and restricting free speech. At the same time, these people are cheering on their OWN government's efforts to regulate social media.
Someone has to fix this. We cannot allow these companies to poison the internet for us.

Monday, November 09, 2020

Tamil Short Story - அடைக்கும் தாழ்


 My new Tamil short story "அடைக்கும் தாழ்" appeared in solvanam.com Deepavali Malar. Please read.

பாட்டி சற்று மங்குவது தெரிந்தது. ப்ரியாவைப் பார்த்து, “குழந்தை பேர் என்ன?” என்றாள் மறுபடி.
“கிளம்பிடுங்கோ,” என்றார் தாத்தா. “கொஞ்ச நேரத்துல லங்கிணி ஆயிடுவள்.”
எனக்கு அவர் பேசுவது இன்னும் முழுக்கப் புரியவில்லை. லங்கிணி என்றால் என்ன? கீழ் வீட்டில் கேட்டேன்.
“ராமாயணத்துல அனுமார் தலையில குட்டுவரே, லங்கையோட காவல் தெய்வம்,” என்றாள் காயத்ரி.
எனக்கு இன்னும் புரியாததால், “பாட்டி சாமியாடுவாள்னு அர்த்தம்,” என்றாள்.

Thursday, March 19, 2020

COVID-19 in India and resource sharing


The COVID-19 virus is the first time in history that many large, federal countries like India, US, Iran are facing threats in ALL their states (provinces).
Even during war time, India has never faced a threat all across. The Southern states are protected from war, and that is one reason India has moved certain strategic assets south.
This means that for OTHER crises, when one state or a few are affected, the central and the remaining states marshal resources and send it to the affected few states.
That is not going to work now.
Take ventilators or other medical supplies - since the COVID-19 threat is all across India, states are going to be in COMPETITION with each other to get such scarce resources. Instead of helping each other, states are going to try to grab what they can get.
Given the suspicions caused by our diversity, this means that the Central govt has to come up with a resource sharing mechanism NOW, RIGHT NOW, so that these allocations are fair and do not cause tensions. This means a conference with all states and a speeded up process similar to the Finance Commission allocations.
Inevitably, some states are going to accuse others of cornering resources; some are going to be accused of emergency funds for their own pet projects. This fight is going to be ugly. It is also going to be fought in social media/online news media with disinformation and divide our country.
It is critical that the Central govt call a conference on this allocation process with states.

Gravity as an Occult force


Recently after attending a couple of classes on Indian AstroMath (By Rangarathnam Gopu), I have slowly started understanding how big a shift heliocentrism was for science. (Heliocentrism is the idea that the sun is at the center and earth revolves around it)
From the time of Aristarchus of Samos, who only suspected it, to Copernicus, around 1800 years passed as great men struggled to comprehend that what is common sense to a normal human (that the sun goes around the earth) is completely false.
In this path to heliocentrism, many, many Islamic scholars contributed (Copernicus cites them).
Now, I have also started reading up on some philosophy from 500 years back - and it is clear that there was this same radical shift in the study of philosophy itself in that same time. The shift in science and philosophy came together, and the scientists were philosophers and the philosophers were scientists.
Thus, you come upon a major problem that Galileo and Newton faced in the 17th century - gravity was being suspected as a "force", but the word "force" scared the scientists, because it sounded occult. Even after Newton's time, it was felt that he had simply introduced not a mathematical idea, but a "magical" concept that simply explained away why objects with mass attracted each other.
This accusation that Newton had introduced a non-scientific idea prevailed for a 100 years after him!
So, just as scientists before Copernicus tried to understand the universe with sparse tools of observation, philosophers also tried to understand the world through pure metaphysical concepts - this is the thread that runs through Hindu philosophy and its treatment of causality to the Aristotelian concepts of form and essence.
Descartes, for example, tries to make sense of the universe through mind-matter dualism. Atoms themselves were a purely philosophical construct, with no basis in empirical reality.
This is useful to understand how people thought 500 years back - it is difficult to wrap our minds around this, given our education and "prior" knowledge, but we have to situate ourselves as a person without these modern tools and try to understand the science and philosophy of the ancients.
This task is not easy, but it is very stimulating.

Thursday, March 01, 2018

Hate it to Quit it


In the novel "Flowers for Algernon", a mentally challenged man suddenly starts getting smarter after getting a medical procedure. He gets so extremely smart that he can "see" how everything is - and then his condition slowly reverts. Towards the end he loses all his intelligence, WHILE KNOWING that he is losing it.
That is my experience in the past 2 months after leaving FB. I could physically feel my brain cells rejuvenating. I could "see" how society is, the way Neo sees the Matrix. I had profound thoughts, although I shared them with no one.
And now I am posting again, slowly pulled back into the cesspool knowingly.
The best way to quit something is to hate it. 2 months back, a series of incidents led me to hate FB, which felt very good.
Now I try to bring back that hatred and it is not working.

Wednesday, February 07, 2018

Religion is here to stay


I have always been puzzled by the term "self-knowledge" mentioned in translations of various Upanishads, the Gita and Philosophical texts of India. I took it to mean "the knowledge OF self" - that is, the awareness that a self exists within us; and that it is linked to the larger "self" (God). 
Various texts I have read (casually) extol this as the highest knowledge; and they mention it repeatedly. I never understood why this is so praised, since it appears like a "fact" of Hindu philosophy. That is, let us say I "understand" that the self exists, what then? Why is this knowledge so special?
But today, thinking about this, it occured to me that what they mean by "self-knowledge" is really "personal knowledge". That is, knowledge about certain questions that make sense only within you. What they mean is that you need to find a truth to some questions about life only within yourselves.
This makes sense to me - modern psychotherapy is built much on the same idea. That an insight is gained by you into certain knots in a way that is "felt" rather than objectively obvious to all.
I think this is the main point of religion - it is not going to be solved by science, because science provides impersonal truths. But humans understand the world in a personal fashion; and each human has a world model that is different.
For example people who go through traumatic experiences with other people, but escape, often experience guilt. It is called survival guilt. You cannot "answer" survival guilt to a person by explaining the world is inherently random, which is a perfectly acceptable scientific truth.
The survivor needs to find a personal answer to this problem.
I think if this is the main role of religion, it is beneficial, it is complementary to science and also unlikely to be replaced by any amount of objective instruction. I think this is also why many intelligent people do not see any contradiction between being a man of science, and being deeply religious.

Sunday, July 03, 2016

உயிர் - 1995 Kalki Second Prize winning Short story


உயிர்
-------------------------------------------------------------------------------------------------------
     - ராமையா அரியா

மனதைச் சுண்டி இழுக்கும் ஓலத்தைக் கேட்டு அலமந்து போய் நிமிர்ந்து உட்கார்ந்தான் சித்தார்த்தன். மனம் மறுநாளுக்குப் போட்ட கணக்குகளைத் தப்பி, பிரசவ வார்டில் இருக்கும் மனைவியின் மேல் குவிந்தது. அவன் திடுக்கிட்டதைப் பார்த்து எதிர் பென்ச் மாமி, "இப்போ தான் தொடங்கியே இருக்கு," என்றாள். கணவனிடம் சொல்லி விட்டு சித்து கவனிக்கிறானா என்று பார்த்தாள்.
ஹர்யான்விகளுக்கு மத்தியில் சண்டிகாரின் ஒரு பிரபலமான, பணக்காரத்தனமான தனியார் மருத்துவமனையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் இந்த சித்து ஒரு தமிழன் தான்.
ஐந்து வயதில் அனாதையான இந்த சித்துவிற்கு ஹரியானாவில் தமிழ் மனைவி வாய்த்தது அதிர்ஷ்டம் தான்.
ஐந்து வயதில் இருந்து உறவினர் தயவை எதிர்பார்த்து, முட்டி மோதி மேலே படித்து நாயாய் அலைந்து லோன் வாங்கி, கடை வைத்து சகலத்துக்கும் சண்டை போட்டுச் சலித்த வாழ்வில், என்ன விபரீதம் நடக்குமோ என்று பயந்து, காதலியைப் பெண் கேட்கப் போன இடத்தில், "சித்தார்த்! நீங்க எந்த ஜாதின்னு எல்லாம் நாங்க கவலைப்படலை. எங்க பேமிலி கொஞ்சம் முற்போக்கு. நீங்க இப்ப ஒரு ஸ்டோர் வைச்சு நடத்தறீங்க. உங்களுக்கு இருக்கிற திறமைக்கு பின்னால பெரிய பிசினஸ்மேன் ஆயிடுவீங்க. கல்யாணத்துக்கு எங்களுக்குச் சம்மதம்," என்ற பஞ்சாபகேசன், இவன் மாமனார்.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சித்துவிற்குச் சிரிப்பு வந்தது. மாமா நம்பியது வீண் போகவில்லை. ஒரு ஸ்டோரில் இருந்து, பல ஸ்டோர்கள் சண்டிகார் முழுதும், ஹரியானா முழுதும், இந்தியா முழுதும் என்று அவர் போட்ட கனக்குத் தான் தப்பியது. கவர்மெண்ட் வேலையில், கிளார்க்காக இருக்கும் மாமாக்களுக்கு ஒரு பிசினஸ் துறையில் இருந்து மற்றொன்றுக்குத் தாவுவது என்பது விபரீதமாகத் தோன்றுகிறது. இவ்வளவு சீக்கிரம் பெண்டாட்டியின் முதல் பிரசவத்தை இந்த மேன்மையான தனியார் மருத்துவமனையில் நடத்துமளவு தான் உயர்ந்ததற்குக் காரணம், தன்னுடைய பிசினஸ் மாற்றமே என்று உறுதியாக நம்பினான் சித்து. அவன் மாமா அப்படி நினைக்கவில்லை. அதனால் தான் எதிர் பெஞ்சில் உட்கார்ந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது அலறல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, சிந்துவின் முகம் வெளிறியது. அருகில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சர்தார்ஜி,"சில பேரால இந்தச் சத்தத்தைப் பொறுக்க முடியாது. ரொம்ப மென்மையான மனசு," என்று பஞ்சாபியில் தான் பக்கம் இருந்த மகனுக்கு விளக்கம் கொடுத்தார்.
நர்ஸ் ஒருத்தி சிந்துவின் கலவர முகத்தைப் பார்த்து அருகில் வந்து,"எல்லாம் நல்லா நடக்கும். கவலைப்படாதீர்கள்," என்றால் ஹிந்தியில்.
சித்து எழுந்து வெளியே வந்தான். முதல் மாடியில் இருந்து இருந்த உலகத்தைப் பார்த்துச் சோம்பல் முறித்தான். சற்று மனம் சாந்தமாக இருந்தது. கரம்சந்த் நினைவுக்கு வந்தான்.

*

"சித்து, நீ எனக்குத் தம்பி மாதிரி. அதான் இந்த பிளான் உன்கிட்ட எடுத்துட்டு வரேன். உன்னை விட எனக்கு நம்பகமான ஆள் வேறு யார் உண்டு?"
"சொல்லுங்க அண்ணே."
"நம்ம ரத்தன் சேட் தெரியுமில்ல.அந்தாள் பேமிலியோட குஜராத் போறான். இங்க பிசினஸ் பிடிக்கலையாம். சொத்து வேற நிறைய இருக்கு. குஜராத் போய் வேற பிசினஸ் பிடிக்கப் போறானாம். இங்க லோக்கல்ல அவன் ப்ராஜக்டை நம்மளுக்குக் குடுக்க அவன் ரெடி. முழுசா நானே பாத்துக்கறதுக்குப் பதில் உன்னையும் சேத்துக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்ற?"
கரம்சந்த் பெரிய புள்ளி. அவனே பார்ட்னர்ஷிப் அழைப்பது பெரிய கௌரவம் என்று கனக்குப் போட்டான் சித்து.
"என்ன பிசினஸ்?"

*

கேரள-தமிழக எல்லையில் பாலக்காடு ரோடில் சூரியன் உதயமாகும் நேரம் நின்று கிழக்கே பார்த்தால், ஐந்து, ஆறாகச் சேர்த்துக் கட்டப்பட்டு, உணவும், நீருமின்றி எலும்புகள் தெரிய இருந்த, உயிரற்ற கண்களுடன் நடக்கும் துயர மூட்டைகளை அடிமாடுகள் என்பார்கள். நாட்டின் பல பகுதிகளில் இவற்றை லாரிகளில் ஏற்றி கசாப்புக்கு அனுப்புவார்கள்.
"இங்க லோக்கல்ல மாடு வாங்கி, அங்க கசாப்புக்கு அனுப்பணும். இங்க இருந்து பெங்கால் போகும். நம்ம இடையில. நான் சின்ன வயசுல கொஞ்ச நாள் இந்த வேலை பாத்திருக்கேன். புத்திசாலித்தனம் இருந்தா நிறைய லாபம். ஹரியானால பசு வதைத்த தடுப்பு வேற வரப்  போவுது. நல்ல சமயம் இது. இந்த ஹரியான்வி முட்டாப் பசங்களை ஏமாத்த உன்னோட மதராஸி மூளையும், என்னோட குஜராத்தி மூளையும் போதும்."
சேட் எல்லாம் ரெடியாக வைத்திருந்ததால் எளிதில் எடுத்துக் கொண்டார்கள்.
அதன் பயன் தான் இந்த வசதி என்று நினைத்தான் சித்து. வாரிசு உருவாகிறது என்றதும் தன்னுடைய சிறு வயது நினைவுகள் மனதுள் சலசலப்பது தனக்கு மட்டுமா அல்லது எல்லோருக்கும் பொதுவா? சித்து திரும்பி வார்டுக்கு வந்தான்.
எல்லோரும் கொஞ்சம் கவலையாக இருப்பது போல் பட்டது. அவனைக் கவலையோடு பார்க்க, பழைய இடத்தில் வந்து அமர்ந்ததும் மாமா முனகத் தொடங்கினார். அந்த நர்ஸ் அவனைத் தாண்டிப் போக, "என்ன ஆச்சு?" அவள் பதில் சொல்லாமல் போனாள். பக்கத்தில் சர்தார்ஜி, "ஏதோ சின்னப் பிரச்சினை. பயப்பட வேண்டாம்," என்றார். மாமாவின் முனங்கல் சத்தம் அதிகமானது. சித்து தரையைப் பார்த்துக் குனிந்து உட்கார்ந்தான்.

*

புது பிசினஸ் பற்றி முதலில் மனைவியிடம் சொன்ன போது அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவள் சொன்னாள்: "ஏங்க, வேற தொழிலே அகப்படலியா? ஏன் இதைப் போய்?"
"நீ வேற வியாபாரம் வேண்டாம்னு சொல்லப் போறன்னு பாத்தா...," என்று அவன் சிரித்தான். "பிஸினஸ்ல நல்லது கேட்டது கிடையாதும்மா. மத்த மனுஷனுக்குத் தொந்தரவில்லாம செய்றதே பெரிசு. அத்தோட, எப்படியும் கசாப்புக்குப் போற  மாட்டை நாங்க வாங்கி, விக்கிறோம். அவ்வளவு தான். நாங்களா மாட்ட வெட்டப் போறோம்? சீக்கிரம் நிறைய பணம் பாக்கலாம்."
"எங்க அப்பா கிட்ட சொல்லிப் பாருங்க."
அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று ரொம்ப நாள் கழித்துத் தான் தெரிந்தது.
அடிமாட்டு வியாபாரத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளன. பேரம் பேசி ஏரியாவில் மாடு விற்பவர்களிடம் மாடுகளை மொத்தமாக வாங்குவது. பிறகு பெங்காலில் உள்ள கசாப்பு சென்டருக்கு மாடுகளை ட்ரக்குகளில் ஏற்றி அனுப்புவது. ட்ரான்ஸ்போர்ட் மைதானம் போன முதல் நாள் நினைவு வந்தது. ரத்தன் சேட்டின் பழைய ஆட்கள் மாடுகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கரம்சந்த்  அவர்கள் வேலையைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு கத்தினான்.
"ஹலோ, யாருய்யா அது வண்டிய லோட் பண்றது?"
பழைய ஆட்கள் நின்று பார்த்தார்கள்.
"ஏய்யா, இவ்வளவு இடம் இருக்கு உள்ள. இன்னும் மாடு ஏத்துய்யா. மேல ரெண்டு ட்ரிப் போகணுமா?"
கொஞ்சம் சுமாராக உடுத்தி சூப்பர்வைசர் போல இருந்தவன் முன்னால்  வந்தான். "சார், லைவ்ஸ்டாக் ட்ரான்ஸ்போர்ட் ஆக்ட்படி, இவ்வளவு மாடு தான் இந்த சைஸ் ட்ரக்கில் ஏத்தலாம்னு..."
கரம்சந்த் அவனை முறைத்தான். பிறகு சித்துவைத் தனியே அழைத்துப் போய், "சித்து, இவங்க சரியில்லை. நான் இவங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, புது ஆளுங்க அனுப்பி வைக்கறேன்."
மறு நாள் ஆறு பேர் வந்தார்கள். ட்ரக்கில் இருந்த தடுப்புகள், மாடு சாப்பிட உள்ள சட்டிகள் என்று எல்லாவற்றையும் களைந்தார்கள். பிறகு மாடுகளை ஏற்றத் தொடங்கினார்கள். சித்து அவர்களை ஒருவிதமான கவர்ச்சியால் உந்தப்பட்டு, கண்கொட்டாமல் பார்க்க, முன்பு முப்பது மாடுகள் இருந்த இடத்தில் எண்பது மாடுகளை அடைத்து, அவை அசையக் கூடா வண்ணம் இருக்க ட்ரக்கின் பின்புறக் கதவை அறைந்து மூடினார்கள். அடைக்க முடியவில்லை.  கதவுடன் சற்றுப் போராடிய ஒருவன் கோபத்துடன் கதவைத் திறந்தான். அவர்கள் மத்தியில் தடிப்பாக இருந்தவன் சற்று எக்கி, மிக எளிதாக மாட்டின் முன்காலை முறித்தான். பின்காலையும் முறித்து, வளைத்து உள்ளே தள்ளி, ட்ரக் கதவை மூடி...

*

சித்து தலையை உலுக்கிக் கொண்டான். அது இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் நினைவு வருகிறது என்று அலுத்துக் கொண்டான். மாமாவின் முனகல் தாங்க முடியவில்லை. மீண்டும் வெளியே வந்து நின்றான்.
கரம்சந்திடம், "ட்ரான்ஸ்போர்ட் சைடு இன்னும் கொஞ்ச நாள் பாத்துக்கறேன். அதுல நிறைய விஷயம் இருக்கு. தெரிஞ்சுக்கணும்," என்றான்.
"அப்பப்ப ஏதாவது சிக்கலாச்சுன்னா உன்னைக் கூப்பிட்டு விடறேன்."
சிறிது காலத்திலேயே மாடுகளை அடைப்பதில் சித்து திறமைசாலியானான். அவனே அவ்வப்பொழுது வேலையில் இறங்கினான். "இன்னும் ரெண்டு இருக்கே, என்ன பண்றது?" என்ற வேலையாளைக் கெட்ட வார்த்தையால் திட்டி, அவன் உதவியுடன் அவற்றைக் கை, கால்களைக் கட்டி நிற்க இடமின்றி அடைந்த மாடுகளின் மேலே மூட்டை போலத்  தூக்கிப் போட்டான். ட்ரக்கின் விளிம்பில் நின்றவாறே உள்ளே திருப்தியுடன் பார்க்கும் போது அது நடந்தது. பெரிய மாட்டின் பக்கலில் இருந்த சிறியது உடல் மரத்து, எந்தப் பாகமும் அசைக்க இயலாமல், கழுத்தைச் சட்டென்று திருப்ப, அதன் கூரான கொம்பு பெரிய மாட்டின் கண்ணுக்குள் குத்திக் கிழித்து...

*

தலையை மறுபடி மறுபடி, அப்படியும் இப்படியும் ஆட்டினான் சித்து. இப்போது மனைவியின் பிரசவத்தை விடப் புது  பயம் பிடித்துக் கொண்டது. முன்னெப்போதும் இல்லாமல் இந்த நினைவுகள் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி வந்து அம்முகின்றன? ஆனால் அவை விடவில்லை. அவன் உத்தரவை எதிர் கொள்ளவில்லை. கலங்கி அடித்துக் கருப்பு வெள்ளமாகப் பெருக்கெடுத்தன.
லோடிங் முடிந்து ஓய்வாக ஒரு நாள் ஆட்களுடன் உட்கார்ந்து டீ குடித்த போது ஒருவன் சொன்னான்.: "சார், ஆனா நீங்க பெரிய ஆள். உங்கள மாதிரி யாரும் லோடிங் பண்ணி நான் பார்த்ததில்லை. செம வேலை."
சித்து பெருமையாகச் சிரித்துக் கொண்டான். "இது ஒரு சவால் மாதிரி இருக்கா. அதான் எனக்கு ஒரு இன்ட்ரஸ்ட்."
மனம் ஏன் குழம்புகிறது என்று வெளியே தெரிந்த டீக்கடைக்குக் கிளம்பும் போது விடை கிடைத்தது. தன் மாமனாரை நினைத்துப் பல்கலைக் கடித்தான்.
மனைவி கர்ப்பிணி என்று தெரிந்த முதல் சில உற்சாகமான நாட்களில் ஒரு நாள் வீட்டினுள் நுழையும் போது மாமனார் வந்திருப்பதைப் பார்த்தான்.
"வாங்க மாமா! கங்கிராட்ஸ்! நீங்க தாத்தாவாகப் போறீங்க."
"எனக்கு ஏற்கனவே ரெண்டு பேரப்  பிள்ளைங்க இருக்கு சித்து. உனக்கு நான் தான் கங்கிராட்ஸ் சொல்லணும்."
பேச்சு எங்கெங்கோ சென்ற போதும், கடைசியில் மாமா, "உன்னோட பிசினஸ் அவ்வளவு நல்ல தொழில் இல்லை சித்து."
"ஏன் மாமா, இவ உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா?"
"அவ எதுவும் சொல்ல வேண்டாம். நான் 'எஸ்.பி.ஸி.ஏ.'ல இருக்கேன். நான் சொல்றதைக் கேளு. உங்க பிசினஸ் எங்களோட கண்காணிப்புல இருக்கு. ரொம்பக் கொடுமை அது. வேற ஏதாவது பண்ணேன்?"
லேசாகக் கிளர்ந்தெழுந்த கோபத்துடன் சித்து அவரைப் பார்த்தான். "சட்டப்படி நாங்க மாடு ட்ரான்ஸ்போர்ட் பண்றதுல தப்பு எதுவும் இல்லை."
"யார் சொன்னது? நீங்க மாடுகளைக் கொடுமையா நடத்தறீங்க. ட்ரக்ல மாட்டுக்குச் சாப்பாடு வைக்கிறீங்களா?"
சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர், " சித்து, உங்க ட்ரக் நம்பரை நான் போலீசுக்குப் போன் போட்டுச் சொன்னா போதும். பிடிச்சு வச்சுடுவாங்க, தெரியுமா?"
"சும்மா மிரட்டாதீங்க. நாங்க மட்டும் தான் இதச் செய்யுறோமா, என்ன. உங்களால ஆனதைப் பாருங்க."
பஞ்சாபகேசன் எழுந்து போகும் போது, "உனக்கு முன்னாடி இங்க இருந்த  ரத்தன் சேட் ஏன் வித்துட்டுப் போனான்னு தெரியுமா? பசுவைத் துன்புறுத்தினா பாவம்; வம்சத்தையே அழிச்சிடும்," என்றார்.
மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்த சித்து, அவளது வெளுப்பான முகம் இன்னும் வெளிறுவதைக் கவனித்தான்.

*

சூடான டீ உள்ளே இறங்கினால் மனசு லேசாகும் என்று எதிர்பார்த்துக் கடையில் உட்கார்ந்த பொழுது, மனப்பாறையின் உள்ளே, ஒரு கரிய பிளவில் இருந்து  வெளிப்பட்டு நீந்தி மேலே வந்த வண்ணம், வேண்டாம், வேண்டாம் என்று அமுக்க, மேலே எதிர் கொண்டு எழும்பி அவன் கண் முன்னே மிதந்து வந்து நிலை பெற்றது.
கைகால் பதற திரும்பி மருத்துவமனைக்குள் வந்தான் சித்து. மாமியின் கண்களில் நீர். "ஈசுவரா," என்று புலம்பிக் கொண்டிருந்தாள். மாமா அவனைப் பார்த்து முனங்கவில்லை. அவர் முகம் இருண்டிருந்தது. விபரீதமாக அறைக்குள் இருந்து கிளம்பிய சப்தம் சகிக்காமல் அருகில் இருந்த தூண் மேல் சாய்ந்து, கண் மூடி...யாரை வேண்டுவது, என்னவென்று வேண்டுவது?
வீட்டுக்குக் கிளம்புமுன் கடைசி லோடுக்கு வேண்டியது எல்லாம் செய்து விட்டுப் பார்வையிடும் போது, ஒருவன், சற்றுப் புதியவன், அழைத்தான்.
"ஸாப், கதவு மூடவில்லை."
"காலை ஒடிப்பது தானே, முட்டாள்!"
"இல்லை ஸாப், அந்த மாடு..."
சிறிது அருகில் போய்ப் பார்த்த மாடு சினைப் பசு. "எந்த மடையன் இதைப் போய் வித்தது..." என்று முனங்கிய சித்து, "என்ன இருந்தாலும் சாகத்  தானே போகுது. காலை ஓடி," என்றான். தயங்கியவாறே ட்ரக்கின் உள்ளே ஏறியவனை யோசனையுடன் பார்த்துப் பிறகு, "இரு. நீ இறங்கு," என்று மேலே  ஏறி வேலையை முடித்து திரும்பி நடந்து மைதான எல்லைக்கு வரும் போது மனைவி நிற்பதைப் பார்த்தான்.
நர்ஸ் ஒருத்தி ஓடும் சத்தத்தால் திடுக்கிட்டு விழித்துப் பார்த்த போது கண்கள் பனித்திருப்பதை உணர்ந்தான். மீண்டும் தூங்கிப் போக...
கை, கால்கள் வளைந்து இருந்தன அவன் குழந்தைக்கு. வில் போன்று வளைந்த கால்களைப் பார்த்து விட்டு மேலே, முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடித்து, யாரோ தலையைப் பின்னால் இருந்து அழுத்த, குழந்தையின் முகத்தைப் பார்த்துக் குனிந்து, அதன் கண்ணைப் பார்த்து, ஐயோ! அந்தக் கண்...

*

"சித்து! சித்து!"
யாரோ எழுப்புவது உணர்ந்து, கனவு என்று தெளிந்து கண் திறந்தால் மாமா! "வா, உன் பெண்ணை வந்து பாரு," என்று இழுத்தார். வார்த்தை விபரீதமாய் அர்த்தம் செய்து கொண்டு முன்னே சென்று பயத்துடன் அவள் படுக்கையருகே போய்ப் பார்த்தான். பக்கத்தில் அலறி அழும் குழந்தையுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவன் அருமைப் பெண்டாட்டி.

*********************************************************************************

Trotsky Marudhu's Drawing for this short story is below:

Tuesday, April 26, 2016

மனைவி அமைவதெல்லாம் - Tamil Short Film Script 4


The below script is copyrighted to me. No one can use without my explicit written permission.

மனைவி அமைவதெல்லாம்

FADE IN:

உட்புறம் – முதலிரவு அறை – இரவு

கதவு திறக்கிறது. மாலா உள்ளே வருகிறாள். 25 வயது மதிக்கத் தக்க பெண். தலையில் பூ வைத்திருக்கிறாள். கட்டில் அலங்காரத்துடன் இருக்கிறது. சுற்றிப் பார்க்கிறாள்.
பாத்ரூமில் பிரதாப் குளிக்கும் சத்தம் கேட்கிறது.
மாலா சற்று நேரம் அறையில் அமர்ந்திருக்கிறாள். கண்களை மூடுகிறாள்.
Screen fades.
உட்புறம் – முதலிரவு அறை – இரவு

மாலா கண்களைத் திறக்கிறாள். உள்ளே குளிக்கும் சத்தம் கேட்கிறது. எழுந்து அமர்கிறாள். சற்று நேரம் தரையைப் பார்க்கிறாள்.

உட்புறம் – பிரதாப் வீட்டு வாசல் – பகல்

பிரதாப்பும் மாலாவும் வலது கால் எடுத்து வைத்து வீட்டில் நுழைகிறார்கள். பின்னால் அவன் அப்பா, அம்மா. வீட்டுக்குள் பாட்டி டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மாலா ஒரு நாற்காலியில் உட்கார்கிறாள். அம்மா உள்ளே செல்கிறாள். அப்பா உள்ளே அறைக்குச் செல்கிறார்.
பிரதாப்
நீ இரு. நான் குளிச்சிட்டு வந்திர்றேன்

அவன் உள்ளே போகிறான். மாலா குழப்பத்துடன் அவன் போவதையே பார்க்கிறாள்.
பாட்டி
வா. இப்பிடி வந்து உக்காரு.

மாலா
இல்ல...ஏதாவது வேலை இருந்தா.

பாட்டி
இன்னைக்கு உனக்கு லீவு

சொல்லி விட்டு “ஹா ஹா” என்று சிரிக்கிறாள்.

உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.
மாலா
நீங்க ஏன் ஒரு நாளைக்கு இவ்வளவு முறை குளிக்குறீங்க?
பிரதாப்
(ஆச்சரியத்துடன்)
எவ்வளவு முறை?
மாலா
இன்னைக்கு மட்டும் ஒன்பது முறை
பிரதாப்
(யோசித்து)
அப்போ ரவுண்டா பத்தாவது முறை குளிச்சிட்டு வந்திர்றேன்.
மாலா அவன் ஜோக்கடிப்பதாக நினைத்துச் சிரிக்கிறாள். ஆனால் பிரதாப் துண்டை மறுபடி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் போகிறான். மாலாவின் சிரிப்பு உறைகிறது.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.பிரதாப், மாலா, பாட்டி, அவன் அம்மா,
அப்பா எல்லோரும் தரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாலாவுக்குப் பின்னால் டி.வி. அதில் ஏதோ சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. பாட்டி அதையே உற்றுப் பார்க்கிறாள்.
விளம்பர இடைவெளியில் பாட்டி சுற்றிப் பார்க்கிறாள். “உம்” என்றாள்.
அப்பா
என்னடா, இன்னைக்கு ஆபீஸ் போலியா?
பிரதாப்
இல்லப்பா, இன்னைக்கு லீவு.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
மாலா எதுனா பேசு.
மாலா
(திடுக்கிட்டு)
வந்து...
டி.வியில் மறுபடி சீரியல் தொடங்குகிறது.
பாட்டி
சும்மா கிட
பிரதாப்
நான் குளிச்சிட்டு வரேன்.
அவன் எழுந்து போகிறான்.
மாலா
(தயங்கி)
இவர் ஏன் இத்தனை முறை குளிக்கிறார்?
அப்பா விட்டத்தைப் பார்க்கிறார். அம்மா தட்டைப் பார்க்கிறாள்.
பாட்டி
ஏன்? உங்க வீட்டுல யாரும் குளிக்க மாட்டீங்களோ?
மாலா
இல்லை...இவ்வளோ முறை குளிக்கிறாரே அதான்.
பாட்டி
அவன் தாத்தா மாதிரியே இருக்கான். அவரும் இப்பிடித் தான். ரொம்ப சுத்தம்.
சற்று நேர அமைதி.
மாலா
இல்ல.. ஏதாவது சைக்கலாஜிக்கல் பிரச்சினையோன்னு தான்...
பாட்டி
இன்னாது அது?
அப்பா
மனோதத்துவ நோய்
பாட்டி
(அம்மாவை பார்த்து)
இன்னாடி சொல்றா இவ?
அம்மா
உங்க பையனுக்கு மென்டலுன்றா.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
யாரு மெண்டல்?
ஆனால் சீரியல் பாட்டுக் கேட்கிறது. பாட்டி அமைதியாகிறாள்.
மாலா முகத்தில் கலக்கம்.
உட்புறம் – பிரதாப்பின் அறை – பகல்
பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். அழுது கொண்டிருந்தாள். அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து,
பிரதாப்
சீரியல்ல ஏதாவது பிரச்சினையா?
மாலா இன்னும் விசும்பி அழுகிறாள். பிரதாப்புக்கு ஒன்றும் புரியவில்லை.
பிரதாப்
பாட்டி எதுனா சொன்னாங்களா?
மாலா இல்லை என்று தலையாட்டுகிறாள்.
பிரதாப்
ஹனிமூனுக்குப் போலனு வருத்தப்படாத. இன்னும் ஒரு மாசத்துல குத்தாலத்துல சீஸன். போயிட்டு சுகமா குளிச்சுட்டே இருக்கலாம்.
மாலா
நீங்க ஏன் எப்ப பாத்தாலும் குளிச்சிட்டே இருக்கீங்க?
பிரதாப் மௌனமானான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரதாப்
(பரிதாபமாக)
இந்த வெய்யில்ல இது ஒரு கேள்வியா?
மாலா
எனக்குக் கவலையா இருக்கு. எதாவது டாக்டர் பாக்கலாமே
பிரதாப்
டாக்டரா? எதுக்கு? சுத்தமா இருந்தா தப்பா? எங்க தாத்தா கூட..
மாலா
அவருக்கும் எதாவது ப்ராப்ளமோ என்னவோ..
பிரதாப்புக்கு முதல் முறையாகக் கோபம் வருகிறது.
பிரதாப்
யாருக்கு பிராப்ளம்? உங்க பரம்பரையே பைத்தியம்
மாலா மெதுவாக அழுகிறாள்.
பிரதாப்
மாலா..இத பார். இப்பிடிப் பண்ணலாம். நாளைக்கு முழுசா குளிக்காம இருக்கேன். இருந்திட்டேன்னா டாக்டர் வேணாம்
மாலா தலையாட்டுகிறாள்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பாட்டி கால் மேல் கால் போட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராம ஜயம் எழுதிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டி
(வேலைக்காரியிடம்)
வீட்டுக்கு மருமவ வந்தாச்சு..நீ அடுத்த மாசத்துல இருந்து வர வேண்டாம்
பிரதாப் பல் தேய்த்துக் கொண்டே வருகிறான்.
அம்மா
என்ன குளிக்காம பல் தேய்க்குற?
பிரதாப்
இன்னைக்குக் குளிக்கல
சட்டென்று அறையில் ஒரு மாற்றம் தெரிகிறது. பாட்டி எழுதுவதை நிறுத்துகிறாள். வேலைக்காரி பெருக்குவதை நிறுத்துகிறாள்.
அம்மா
(கவலையுடன்)
ஏண்டா, காய்ச்சலா?
பிரதாப்
இல்லம்மா சும்மா தான்.
பாட்டி
மாலா ஏதாவது சொன்னாளா? மாலா, இங்க வாடி.
மாலா நடுங்கிக் கொண்டே வருகிறாள்.
பாட்டி
அவனக் குளிக்க வேண்டாம்னு சொன்னியா?
மாலா
இல்ல பாட்டி..
பாட்டி
என்ன நொள்ள பாட்டி?
அப்பா
விடும்மா.. தண்ணி மிச்சம்.
பாட்டி
எவ்வளவு நேரம்னு பாப்போம். இவங்க தாத்தா இப்பிடித் தான். வீரமா குளிக்கலடினுவாரு. மதியத்துக்குள்ள சேர்ந்து குளிக்கலாம் வாடிம்பாரு
SERIES OF SHOTS

கடிகாரம் மெதுவாக நகர்கிறது. பிரதாப் அங்குமிங்கும் நடக்கிறான். ஒரு அருவி விழுவது போன்ற சத்தம் மெதுவாகத் தொடங்கி கூடிக் கொண்டே போகிறது. தலையைப் பிடித்துக் கொள்கிறான்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
நண்பகல். எல்லோரும் வழக்கம் போல சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். பாட்டி மாலாவை முறைத்தவாறு இருக்கிறாள்.
பாட்டி
எங்க காலத்துல புருசனுக்குச் சரியா உக்கார்ந்து பேசக் கூட மாட்டோம்
பிரதாப்
பாட்டி...சும்மா இரு
அவன் அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொள்கிறான். பிறகு சட்டென்று எழுந்து,
பிரதாப்
நான் குளிக்கப் போறேன்
அவன் உள்ளே போகிறான். மாலா அவனையே பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்குகின்றன.
உட்புறம் – டாக்டர் கிளினிக்கில் – இரவு
நான்கைந்து நாற்காலிகளில் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு வரிசையாக. மாலாவும் பிரதாப்பும் இரு நாற்காலிகளில். டாக்டர் தன்ராஜ், Psychiatrist என்று போர்ட் தெரிகிறது.
அறையின் உள்ளே இருந்து ஒருவர் சிரித்தவாறே வெளியே போகிறார். உள்ளே ஒருவர் எழுந்து போகிறார்.
பிரதாப்
(பக்கத்தில் இருந்தவரிடம்)
உங்களுக்கு என்ன பிராப்ளம்?
அவர் முறைக்கிறார். பிறகு முகத்தை திருப்பிச் சுற்றிப் பார்க்கிறார்.
பக்கத்து சீட்காரர்
நான் எனக்காக வரல. ஒரு ஃபிரண்டுக்காக வந்தேன்
பிரதாப்
ஓஹோ
முன்னால் அமர்ந்திருப்பவர்
இங்க எல்லோரும் ஃபிரண்டுக்காகத் தான் வந்திருக்கோம்.
பஸ்ஸர் அடிக்கிறது.
உட்புறம் – டாக்டர் அறை – பகல்
டாக்டர் அறை மிதமான வெளிச்சத்தில் இருக்கிறது. பிரதாப்பும் மாலாவும் அமர்ந்திருக்கிறார்கள்.
டாக்டர்
சொல்லுங்க...என்ன விஷயம்?
மாலா
இவர் ஒவ்வொரு நாளும் நிறைய முறை குளிக்கிறார்
டாக்டர்
குணப்படுத்திரலாம்
பிரதாப் அதிர்சியாகிறான்.
பிரதாப்
டாக்டர், இதெல்லாம் ஒரு தப்பா? நான் சொல்றதக் கேளுங்க.
டாக்டர்
ஒரு நாளைக்கு எவ்வளோ முறை குளிக்குறீங்க?
பிரதாப்
பத்து முறை தான்
டாக்டர்
சின்ன வயசுல இருந்தா?
பிரதாப்
இல்ல டாக்டர்...இருபது வயசுல இருந்து...
டாக்டர்
குளிக்காம இருக்க முடியலை...இல்லையா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
டாக்டர்
சில டெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு Obsessive Compulsive Disorder இருக்கலாம். கவலப்படாதீங்க. நான் குடுக்கிற மாத்திரை சாப்பிட்டா சீக்கிரமா குணமாயிடும்
பிரதாப் முகம் பேயறைந்தது போல ஆகிறது.
டாக்டர்
நூத்துல அஞ்சாறு பேருக்கு வரது தான் இது. பரம்பரைல யாருக்காவது வந்தா உங்களுக்கும் வர ரிஸ்க் இருக்கு.
வெளிப்புறம் – சாலை – இரவு
பிரதாப்பும் மாலாவும் அமைதியாக நடக்கிறார்கள். சாலையில் வாகனங்கள் கடந்து போகின்றன. மஞ்சள் நிற விளக்கு வெளிச்சம்.
மாலா
ஃபீஸ் இவ்வளவு கேப்பாங்க தெரியாது.
பிரதாப் மவுனமாக இருக்கிறான். மாலா அவன் கையைத் தொட்டு,
மாலா
என் மேல கோபமா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
மாலா
கவலப்படாதீங்க..ஒரு மாசத்துலயே பலன் தெரியும்னாரே டாக்டர்
பிரதாப் சட்டென்று நிற்கிறான்.
பிரதாப்
நீ என்ன டைவர்ஸ் பண்ணிரு மாலா
மாலா புன்னகைக்கிறாள்.
மாலா
அதுக்குள்ள போரடிக்குதா?
பிரதாப் கண்களில் நீர் பளிச்சிடுகிறது.
பிரதாப்
டாக்டர் சொன்னாரு பாரு. பரம்பரையா வரலாமாம். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு
மாலா
வரலாம் தான சொன்னாரு. பிள்ளைங்கள குளிக்கவே விட மாட்டேன்..கவலப்படாதீங்க
பிரதாப்
இல்ல மாலா..என்ன டைவர்ஸ் பண்ணிரு
மாலா மறுபடி நடக்கத் தொடங்குகிறாள்
மாலா
முதல்ல சரியாப் போகட்டும். அப்புறம் டைவர்ஸ் தான்
சில வினாடிகள் கழித்து
மாலா
பாட்டி கிட்ட சொல்லணுமா?
பிரதாப்
வேண்டாம்...பெரிய ரகளையாயிடும்
INSET – சில தினங்கள் சென்ற பின்
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – இரவு
பிரதாப்பும் மாலாவும் வீட்டுக்குள் நுழைகிறார்கள். பாட்டி, அம்மா, அப்பா மூவரும் ஒரே சோபாவில் நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்னை என்று தெரிகிறது.
அப்பா
ஏண்டா..எதோ டாக்டர் கிட்ட போறியாமே?
பிரதாப்
இல்லியே..
அம்மா விசும்புகிறாள்
அம்மா
ஐயோ பொய் வேற சொல்றானே...
அப்பா
நுங்கம்பாக்கத்துல நீ ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போன போது எங்க ஆஃபீஸ் சுப்பிரமணி பார்த்திட்டான்
பிரதாப்
(கவலையுடன்)
அவர் அங்க எதுக்கு வந்தாராம்?
அப்பா
எதோ ஃபிரண்டுக்காகப் போனானாம். நீ ஏண்டா பைத்தியக்கார டாக்டரெல்லாம் பாக்குற?
பிரதாப்
மாலாவுக்கு தொண்ட கட்டு. அதான் போனோம்
அப்பா
ஏண்டா பொய் சொல்ற?
பாட்டி
ஏ மாலா..இங்க வாடி. டாக்டராண்ட போனீங்களா?
மாலா
(தயக்கத்துடன்)
இவருக்குத் தான்
அம்மா மாலாவை முறைக்கிறாள்.
பாட்டி எழுந்து நிற்கிறாள். கைகளைத் தூக்கிச் சோம்பல் முறிக்கிறாள்.
பாட்டி
அதான் இவன் கொஞ்ச நாளா கம்மியாக் குளிக்கிறானா?
மாலா
ஆமாம்
அம்மா
அடிப் பாவி..எம் புள்ளயப் பைத்தியமாவே ஆக்கிட்டீங்களே
பாட்டி
தா....சும்மா கிட.
(beat)
இவன் தாத்தாவும் அந்தக் காலத்துல எல்லா டாக்டரும் பாத்தாரு. அப்பல்லாம் மாத்திரை ஒண்ணுமில்லை. இப்ப இருக்கு. நல்லதாப் போச்சு
பிரதாப்
(தைரியமாக)
அம்மா, சும்மா பைத்தியம் அது இதுனாத. அங்க வர எல்லாரும் ரொம்ப டீஸன்ட். நீ வேணா வந்து பாரேன். ஜாலியா இருக்கும்
இருவரும் அறைக்குள் செல்கிறார்கள்
உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் கதவுக்குத் தாளிடுகிறான்.
பிரதாப்
பாட்டி வாழ்க
மாலா
மெதுவாப் பேசுங்க
அவன் அவளை நெருங்கி வருகிறான்.
பிரதாப்
டைவர்ஸ் பண்ணலாமா?
மாலா முகம் சுளிக்கிறாள். அவனைப் பிடித்துத் தள்ளி
மாலா
இப்பல்லாம் குளிக்கிறதே இல்லையா? போய்க் குளிச்சிட்டு வாங்க

THE END




Monday, April 25, 2016

தட்டுங்கள் திறக்கப்படும் - Tamil Short Film Script - 3


The below script is copyrighted to me. No one can use without my explicit written permission.

தட்டுங்கள் திறக்கப்படும்



FADE IN:

உட்புறம் – சுரேஷ் வீட்டு அறை – இரவு

ஒரு மஞ்சள் டேபிள் லேம்ப் வெளிச்சம். மேஜை. மேஜையில் லேப்டாப் கம்ப்யூட்டர். பக்கத்தில் பிரிண்டர். நாற்காலியில் சுரேஷ். முப்பத்தி இரண்டு வயதிருக்கும்.
கேமிரா அவன் பின்னால் நோக்கி நகர்கிறது. கடிகாரம் மணி இரவு இரண்டு என்று காட்டுகிறது. கம்ப்யூட்டர் திரை தெரிகிறது. கூகிள். “How to get a ration card” என்று தேடியிருக்கிறார்.
பிரிண்டர் கிளிக் ஆகும் சத்தம். கேமிரா அவரைத் தாண்டி பிரிண்டரைக் காட்டுகிறது. வரிசையாகப் பேப்பர் வருகிறது. Camera zooms on the paper.

உட்புறம் – சுரேஷ் வீட்டு ஹால் – பகல்

வாசல் கதவு திறந்திருக்கிறது. காலை வெளிச்சம். சுரேஷ் ஷூ அணிந்து எழுகிறான். கையில் ஒரு கத்தை பேப்பர். தோளில் ஒரு லேப்டாப் பை. வெளியே போகக் காலடி எடுத்து வைக்கிறான்.
Offscreen குரல் கேட்கிறது.
சுரேஷ் மனைவி
(O.S)
நாம யூ.எஸ்ல இருந்து வந்திருக்கோம்னு சொல்லிறாதீங்க. பைசா ஜாஸ்தியா கேக்கப் போறாங்க

சுரேஷ் மேலே உள்ள பிள்ளையார் படத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வெளியே போகிறான்

வெளிப்புறம் – மயிலாப்பூர் ரேஷன் அலுவலகம் வாசல் – பகல்

Establishing shot: Shot of Ration office board.
பல வாகனங்கள் சென்று வரும் ஓசை. ஹாரன் சத்தம். நல்ல வெயில்.
சுரேஷ் நின்று அலுவலகம் இருக்கும் மாடியை நிமிர்ந்து பார்க்கிறான். மாடிப்படி தெரிகிறது.
உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

ஒரு மேஜை போட்டிருக்கிறது. அதன் பின்னால் அதிகாரி-1 அமர்ந்திருக்கிறார். அவர் முன் வரிசையாக மூன்று பேர் நிற்கிறார்கள். கடைசி ஆளாக சுரேஷ்.
ஹாலில் அடுத்த பக்கம் ஓரிரு கவுண்டர்கள் இருக்கின்றன. அதன் பின்னால் ஓரிரு பெண் அலுவலர்கள். நிறைய பேப்பர்; பைல்கள். சற்றே பழைய கட்டிடம் என்று தெரிகிறது.
சுரேஷ் வேர்வையைத் துடைத்துக் கொள்கிறான். பதட்டமாக இருக்கிறான். மறுபடி மறுபடி கையில் உள்ள பேப்பர்களைச் சரி பார்க்கிறான்.
அதிகாரி-1
Next?

சுரேஷ் தன் கையில் உள்ள கத்தை பேப்பரை அவர் மேஜை மேல் வைக்கிறான். பழைய ரேஷன் கார்டை எடுத்து கொடுக்கிறான். அவர் அதைத் திறந்து பார்க்கிறார். சுரேஷ் அவரையே பார்த்தபடி இருக்கிறான்.
அதிகாரி-1
அட்ரஸ் மாறியிருக்கா? ப்ரூப் வச்சிருக்கீங்களா?

சுரேஷ்
(படபடப்புடன்)
வச்சிருக்கேன் சார்.

அதிகாரி-1 ஏதோவொரு ரேஜிஸ்தரைப் பார்த்து விட்டு
அதிகாரி-1
ஸ்டாப் சப்ளை போட்டிருக்கு?

சுரேஷ் திருதிருவென்று முழிக்கிறான்.
சுரேஷ்
சார்?

அதிகாரி-1
சப்ளை பார்க்க certificate வேணுமே.

சுரேஷ் கையில் உள்ள பேப்பர்களைப் புரட்டி பார்க்கிறான். அவனுக்கு எதுவும் புரியவில்லை.

அதிகாரி-1
வெளியூர்ல இருந்தீங்களா?

சுரேஷ் அவரைக் கவனிக்காமல் கையில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தள்ளி வருகிறான்.


வெளிப்புறம் – ரேஷன் அலுவலகம் வெளியே – பகல்

சுரேஷ் போனில் பேசுகிறான்

சுரேஷ்
ஆமா மாமா. என்னமோ certificate கேக்குறான்.

போனில் மாமாவின் குரல்
காசு எதிர்பாப்பாங்க. யூ.எஸ்ல இருந்து வந்தேன்னு சொன்னீங்களா?

சுரேஷ்
இல்ல மாமா...

போனில் மாமாவின் குரல்
கொஞ்சம் ரூவா வெட்டுங்க

சுரேஷ்
யார் கிட்ட கொடுக்கணும்?

போனில் மாமாவின் குரல்
(அவன் பேசுவதைக் கவனிக்காமல்)
காசு கொடுத்தா எல்லாம் சரியாயிடும்..என்ன?

சுரேஷ்
சரி மாமா. ஆனா யார் கிட்ட...எவ்வளவு

போனில் மாமாவின் குரல்
சரி..நான் அப்புறம் பேசுறேன்.

சுரேஷ்
மாமா? ஹலோ?

போன் கட்டாகிறது. சுரேஷ் சலிப்புடன் கையில் உள்ள பர்சை எடுத்துப் பார்க்கிறான். இரு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் தெரிகின்றன. பர்சில் இருந்து எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைக்கிறான். சுற்றிப் பார்க்கிறான்.
சற்றுத் தள்ளி படியருகே ஒரு சிறு ஸ்டூலில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். வயதானவர். ஒரு லெட்டர் பேடை வைத்துக் கொண்டு மனு எழுதிக் கொடுப்பவர். அவர் எதிரே இரண்டு வயதானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சுரேஷ் அவரை உற்றுப் பார்க்கிறான்.
மெதுவாக அவர் அருகே போய் நின்று கொள்கிறான். அவர் சற்று நேரம் கழித்து அவனை நிமிர்ந்து பார்க்கிறார். பிறகு தம் வேலைக்குத் திரும்புகிறார்.
ஒரு சில வினாடிகள் கழித்து

மனு எழுதுபவர்
தம்பி, என்ன விஷயம்?

சுரேஷ்
இல்ல.... ரேஷன் கார்டு வாங்கணும்

மனு எழுதுபவர்
உள்ள போங்க...தருவாங்க

சுரேஷ் வேறு வழியில்லாமல் மேலேறி போகிறான்

உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

வரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். ஹாலின் நடுவில் நன்றாக உடை உடுத்தி ஒருவர் நிற்கிறார். சுரேஷ் அவரை சற்று நேரம் பார்க்கிறான். பிறகு அவர் அருகே சென்று நிற்கிறான். அவர் அவனை விநோதமாகப் பார்க்கிறார்.

சுரேஷ்
நல்ல வெயில்

பாக்கெட்டில் உள்ள ஐநூறு ரூபாய் நோட்டை தெரிவது போல வைக்கிறான். பிறகு அவர் முகத்தை உற்றுப் பார்க்கிறான்.

நடுவில் நிற்பவர்
ம்ம்.

சுரேஷ்
(தணிவான குரலில்)
கார்டு தருவாங்களா?

நடுவில் நிற்பவர்
(அதே தணிவான குரலில்)
ஏன்? ஏதாவது பிரச்சினையா?

சுரேஷ்
எவ்ளோ தள்ளணும்?

நடுவில் நிற்பவர் அவனைப் புரியாமல் பார்க்கிறார்.

அதிகாரி-1
வாங்க. லைன்ல வாங்க.

நடுவில் நிற்பவர் போய் கியூவில் நின்று கொள்கிறார். சுரேஷுக்கு அப்போது தான் அவரும் கார்ட் வாங்க வந்தவர் என்று புரிகிறது.
சுரேஷ் சற்று நேரம் அங்கே நின்றபடி சுற்றிப் பார்க்கிறான். எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்து வருகிறார்கள். மேலே பேன் சுற்றும் சத்தம்.

வெளிப்புறம் – ரேஷன் அலுவலக காரிடார் – பகல்

சுரேஷ் போனில் பேசுகிறான்.

சுரேஷ்
டேய், உனக்கு ஹைதரபாத்ல யாரோ எம்.பி தெரியும்னு சொன்னயில்ல? அவர் கூட பேசணும்.

போனில் நண்பன் குரல்
எதுக்கு? என்ன விஷயம்?

சுரேஷ்
மயிலாப்பூர் ரேஷன் ஆபீஸ்ல இருக்கேன்டா. இங்க எவனுக்கு லஞ்சம் தரணும் தெரியல. எவ்வளோ தரணும்னும் தெரியலை. கொஞ்சம் கேட்டு சொல்றியா?

ஒரு பாட்டி மெதுவாகத் தாண்டிப் போகிறாள். சுரேஷ் அவளையே பார்க்கிறான்.

போனில் நண்பன் குரல்
அதுக்கு எவனாவது ஹைதரபாத் எம்.பி கிட்ட போயி கேப்பானா? ஏதாவது அறிவிருக்கா உனக்கு?

சுரேஷ் போனை கட் செய்து விட்டு சற்று நேரம் தரையைப் பார்க்கிறான். பிறகு உள்ளே செல்கிறான்.

உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

உள்ளே வரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். சுரேஷ் அவர்களுடன் போய் நிற்கிறான்.

அதிகாரி-1
Next?

சுரேஷ்
(தைரியமாக)
சார், ஸ்டாப் சப்ளைன்னா என்ன?

அதிகாரி-1
வெளியூர்ல இருந்தீங்கன்னா கார்டு கேன்சல் பண்ணனும். இல்லைன்னா ஒரு லெட்டர் எழுதிக் கொடுங்க, போதும்.
(beat)
சுரேஷ்
(ஆச்சரியத்துடன்)
அவ்ளோ தானா?

அதிகாரி-1
அவ்வளவே தான். Next?

BEGIN FAST MOTION

SERIES OF SHOTS

A. Upbeat music. Fast motion.
B. சுரேஷ் லெட்டர் எழுதுகிறான்.
C. அதிகாரியிடம் கொடுக்கிறான்.
D. “டக், டக்” என்று நாலு சீல் அடிக்கப்படுகிறது
END FAST MOTION

வெளிப்புறம் – ரேஷன் கடை காரிடார் – பகல்

சுரேஷ் போனில் பேசிக் கொண்டே போகிறான்

சுரேஷ் மனைவியின் குரல்
எப்போ வரும்னு ஏதாவது சொன்னாங்களா?

சுரேஷ்
ஒரு மாசம் தான்.
(beat)
By the way
(beat)
ஒரு பைசா கொடுக்கல.

THE END




Wednesday, July 23, 2014

How I got arrested and had to spend many minutes in Prison


I went to the fast conducted by Satta Panchayath Iyakkam (SPI), a remarkable NGO (no foreign funding, so relax). It was to submit 10 demands to the TN state, most important to remove the State Chief Information Commissioner, Mr.Sreepathi IAS from the commission. The TN state information commission is, in general, doing a really bad job.
Anyways, at the end of it the activists decided to proceed with a lock to symbolically "lock" the office of the Information Commission. Police were there in massive numbers.
I stood in a corner, gaping at the spectacle, while my head was swimming from the 8 hours fast. I have no idea how people do this for many days. I wanted, craved, sambar idli for some strange reason.
Suddenly the police came marching in our direction, asking all of us to get into the van. I stayed still, hoping they could not see me. But there was nothing to hide behind, and an Inspector who looked like a Software Project Manager came in my direction with a few constables.
He said, "Why are you standing here?"
I said, "I came here for the fast."
"Do you want to get arrested or leave?" he said, like Bruce Willis.
I said "Leave" without ANY hesitation.
"Then go," he said, as if a massacre was about to happen.
But as I ran to one side of the road, it was blocked! I run to the other side and that is blocked too! So I run from one to another like a caged rat, thinking, "That Inspector WAS a software PM, because he gave me a command and closed all ways of executing it."
By this time everyone was in the vans and they were all basically watching me go from one end to another. So, with as much dignity as I could muster, I went into the van.
We were taken to the Chepauk guest house through a circuitous route so that nobody could follow us. This place is like a open air jail. I think they call it "guest house" as a joke, because the MRTS train passes right above you every 20 minutes. No man could survive there.
We all sat in plastic chairs. There was a nice breeze.The walls were high and i thought my only chance of escape was to time the MRTS trains over the next 10 days and get on the last car somehow, like Papillon.
But then they asked us to sign something and leave. The signing sheet said "Arrest detail" so then I understood I was actually arrested.
My only advice to you is to get arrested with 60,70 people - that too pumped up activists, because then nobody cares about your sorry, timid self.

Monday, June 16, 2014

தந்திப் புரட்சி - ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்


My Tamil short story in solvanam.com, தந்திப் புரட்சி  - ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்
Excerpt:
ஆறு மாதங்கள் முன்பு தான் திருநெல்வேலி கலெக்டர் ஆஷை வாஞ்சி ஐயர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருந்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரராகவன் தூத்துக்குடியில் நடத்திய அதிரடிப் புலனாய்வில் பதினாலு பேர் மாட்டியிருந்தார்கள். எல்லோருக்கும் பின்னால் சூத்ரதாரியான  நீலகண்ட ஐயர், ஒரு ரகசிய சதிக் கூட்டம் நடத்தியதாகக் கேள்வி. படிக்கப் படிக்க மர்மக் கதை போல இருந்த இந்த சதியைப் பற்றி நாலணா நாவல்கள் கூட வந்து விட்டன. கேஸ் முடியும் தருவாயில் இருந்தது. பதினாலு பேருக்கும் மொத்தமாகக் தூக்கு என்று என் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அவ்வப்போது பிரிட்டிஷ் விசுவாசி. ரிப்பன் கட்டிடத்தில் சில அறைகளுக்கு வயரிங் செய்ய காண்டிராக்ட் பிடித்து விட்டார்.
*
“ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் கொன்னதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் ஆறுமுகம். நம்பியார் மேல்துண்டை வைத்து விசிறிக் கொண்டார்.
“சரியான கேள்வி அது இல்லை,” என்றார் வாசு. “துரை கொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கேள்வி.”
- See more at: http://solvanam.com/?p=33633#sthash.ahNmHCCA.dpuf