Sunday, July 03, 2016

உயிர் - 1995 Kalki Second Prize winning Short story


உயிர்
-------------------------------------------------------------------------------------------------------
     - ராமையா அரியா

மனதைச் சுண்டி இழுக்கும் ஓலத்தைக் கேட்டு அலமந்து போய் நிமிர்ந்து உட்கார்ந்தான் சித்தார்த்தன். மனம் மறுநாளுக்குப் போட்ட கணக்குகளைத் தப்பி, பிரசவ வார்டில் இருக்கும் மனைவியின் மேல் குவிந்தது. அவன் திடுக்கிட்டதைப் பார்த்து எதிர் பென்ச் மாமி, "இப்போ தான் தொடங்கியே இருக்கு," என்றாள். கணவனிடம் சொல்லி விட்டு சித்து கவனிக்கிறானா என்று பார்த்தாள்.
ஹர்யான்விகளுக்கு மத்தியில் சண்டிகாரின் ஒரு பிரபலமான, பணக்காரத்தனமான தனியார் மருத்துவமனையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் இந்த சித்து ஒரு தமிழன் தான்.
ஐந்து வயதில் அனாதையான இந்த சித்துவிற்கு ஹரியானாவில் தமிழ் மனைவி வாய்த்தது அதிர்ஷ்டம் தான்.
ஐந்து வயதில் இருந்து உறவினர் தயவை எதிர்பார்த்து, முட்டி மோதி மேலே படித்து நாயாய் அலைந்து லோன் வாங்கி, கடை வைத்து சகலத்துக்கும் சண்டை போட்டுச் சலித்த வாழ்வில், என்ன விபரீதம் நடக்குமோ என்று பயந்து, காதலியைப் பெண் கேட்கப் போன இடத்தில், "சித்தார்த்! நீங்க எந்த ஜாதின்னு எல்லாம் நாங்க கவலைப்படலை. எங்க பேமிலி கொஞ்சம் முற்போக்கு. நீங்க இப்ப ஒரு ஸ்டோர் வைச்சு நடத்தறீங்க. உங்களுக்கு இருக்கிற திறமைக்கு பின்னால பெரிய பிசினஸ்மேன் ஆயிடுவீங்க. கல்யாணத்துக்கு எங்களுக்குச் சம்மதம்," என்ற பஞ்சாபகேசன், இவன் மாமனார்.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சித்துவிற்குச் சிரிப்பு வந்தது. மாமா நம்பியது வீண் போகவில்லை. ஒரு ஸ்டோரில் இருந்து, பல ஸ்டோர்கள் சண்டிகார் முழுதும், ஹரியானா முழுதும், இந்தியா முழுதும் என்று அவர் போட்ட கனக்குத் தான் தப்பியது. கவர்மெண்ட் வேலையில், கிளார்க்காக இருக்கும் மாமாக்களுக்கு ஒரு பிசினஸ் துறையில் இருந்து மற்றொன்றுக்குத் தாவுவது என்பது விபரீதமாகத் தோன்றுகிறது. இவ்வளவு சீக்கிரம் பெண்டாட்டியின் முதல் பிரசவத்தை இந்த மேன்மையான தனியார் மருத்துவமனையில் நடத்துமளவு தான் உயர்ந்ததற்குக் காரணம், தன்னுடைய பிசினஸ் மாற்றமே என்று உறுதியாக நம்பினான் சித்து. அவன் மாமா அப்படி நினைக்கவில்லை. அதனால் தான் எதிர் பெஞ்சில் உட்கார்ந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது அலறல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, சிந்துவின் முகம் வெளிறியது. அருகில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சர்தார்ஜி,"சில பேரால இந்தச் சத்தத்தைப் பொறுக்க முடியாது. ரொம்ப மென்மையான மனசு," என்று பஞ்சாபியில் தான் பக்கம் இருந்த மகனுக்கு விளக்கம் கொடுத்தார்.
நர்ஸ் ஒருத்தி சிந்துவின் கலவர முகத்தைப் பார்த்து அருகில் வந்து,"எல்லாம் நல்லா நடக்கும். கவலைப்படாதீர்கள்," என்றால் ஹிந்தியில்.
சித்து எழுந்து வெளியே வந்தான். முதல் மாடியில் இருந்து இருந்த உலகத்தைப் பார்த்துச் சோம்பல் முறித்தான். சற்று மனம் சாந்தமாக இருந்தது. கரம்சந்த் நினைவுக்கு வந்தான்.

*

"சித்து, நீ எனக்குத் தம்பி மாதிரி. அதான் இந்த பிளான் உன்கிட்ட எடுத்துட்டு வரேன். உன்னை விட எனக்கு நம்பகமான ஆள் வேறு யார் உண்டு?"
"சொல்லுங்க அண்ணே."
"நம்ம ரத்தன் சேட் தெரியுமில்ல.அந்தாள் பேமிலியோட குஜராத் போறான். இங்க பிசினஸ் பிடிக்கலையாம். சொத்து வேற நிறைய இருக்கு. குஜராத் போய் வேற பிசினஸ் பிடிக்கப் போறானாம். இங்க லோக்கல்ல அவன் ப்ராஜக்டை நம்மளுக்குக் குடுக்க அவன் ரெடி. முழுசா நானே பாத்துக்கறதுக்குப் பதில் உன்னையும் சேத்துக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்ற?"
கரம்சந்த் பெரிய புள்ளி. அவனே பார்ட்னர்ஷிப் அழைப்பது பெரிய கௌரவம் என்று கனக்குப் போட்டான் சித்து.
"என்ன பிசினஸ்?"

*

கேரள-தமிழக எல்லையில் பாலக்காடு ரோடில் சூரியன் உதயமாகும் நேரம் நின்று கிழக்கே பார்த்தால், ஐந்து, ஆறாகச் சேர்த்துக் கட்டப்பட்டு, உணவும், நீருமின்றி எலும்புகள் தெரிய இருந்த, உயிரற்ற கண்களுடன் நடக்கும் துயர மூட்டைகளை அடிமாடுகள் என்பார்கள். நாட்டின் பல பகுதிகளில் இவற்றை லாரிகளில் ஏற்றி கசாப்புக்கு அனுப்புவார்கள்.
"இங்க லோக்கல்ல மாடு வாங்கி, அங்க கசாப்புக்கு அனுப்பணும். இங்க இருந்து பெங்கால் போகும். நம்ம இடையில. நான் சின்ன வயசுல கொஞ்ச நாள் இந்த வேலை பாத்திருக்கேன். புத்திசாலித்தனம் இருந்தா நிறைய லாபம். ஹரியானால பசு வதைத்த தடுப்பு வேற வரப்  போவுது. நல்ல சமயம் இது. இந்த ஹரியான்வி முட்டாப் பசங்களை ஏமாத்த உன்னோட மதராஸி மூளையும், என்னோட குஜராத்தி மூளையும் போதும்."
சேட் எல்லாம் ரெடியாக வைத்திருந்ததால் எளிதில் எடுத்துக் கொண்டார்கள்.
அதன் பயன் தான் இந்த வசதி என்று நினைத்தான் சித்து. வாரிசு உருவாகிறது என்றதும் தன்னுடைய சிறு வயது நினைவுகள் மனதுள் சலசலப்பது தனக்கு மட்டுமா அல்லது எல்லோருக்கும் பொதுவா? சித்து திரும்பி வார்டுக்கு வந்தான்.
எல்லோரும் கொஞ்சம் கவலையாக இருப்பது போல் பட்டது. அவனைக் கவலையோடு பார்க்க, பழைய இடத்தில் வந்து அமர்ந்ததும் மாமா முனகத் தொடங்கினார். அந்த நர்ஸ் அவனைத் தாண்டிப் போக, "என்ன ஆச்சு?" அவள் பதில் சொல்லாமல் போனாள். பக்கத்தில் சர்தார்ஜி, "ஏதோ சின்னப் பிரச்சினை. பயப்பட வேண்டாம்," என்றார். மாமாவின் முனங்கல் சத்தம் அதிகமானது. சித்து தரையைப் பார்த்துக் குனிந்து உட்கார்ந்தான்.

*

புது பிசினஸ் பற்றி முதலில் மனைவியிடம் சொன்ன போது அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவள் சொன்னாள்: "ஏங்க, வேற தொழிலே அகப்படலியா? ஏன் இதைப் போய்?"
"நீ வேற வியாபாரம் வேண்டாம்னு சொல்லப் போறன்னு பாத்தா...," என்று அவன் சிரித்தான். "பிஸினஸ்ல நல்லது கேட்டது கிடையாதும்மா. மத்த மனுஷனுக்குத் தொந்தரவில்லாம செய்றதே பெரிசு. அத்தோட, எப்படியும் கசாப்புக்குப் போற  மாட்டை நாங்க வாங்கி, விக்கிறோம். அவ்வளவு தான். நாங்களா மாட்ட வெட்டப் போறோம்? சீக்கிரம் நிறைய பணம் பாக்கலாம்."
"எங்க அப்பா கிட்ட சொல்லிப் பாருங்க."
அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று ரொம்ப நாள் கழித்துத் தான் தெரிந்தது.
அடிமாட்டு வியாபாரத்திற்கு இரண்டு பகுதிகள் உள்ளன. பேரம் பேசி ஏரியாவில் மாடு விற்பவர்களிடம் மாடுகளை மொத்தமாக வாங்குவது. பிறகு பெங்காலில் உள்ள கசாப்பு சென்டருக்கு மாடுகளை ட்ரக்குகளில் ஏற்றி அனுப்புவது. ட்ரான்ஸ்போர்ட் மைதானம் போன முதல் நாள் நினைவு வந்தது. ரத்தன் சேட்டின் பழைய ஆட்கள் மாடுகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கரம்சந்த்  அவர்கள் வேலையைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு கத்தினான்.
"ஹலோ, யாருய்யா அது வண்டிய லோட் பண்றது?"
பழைய ஆட்கள் நின்று பார்த்தார்கள்.
"ஏய்யா, இவ்வளவு இடம் இருக்கு உள்ள. இன்னும் மாடு ஏத்துய்யா. மேல ரெண்டு ட்ரிப் போகணுமா?"
கொஞ்சம் சுமாராக உடுத்தி சூப்பர்வைசர் போல இருந்தவன் முன்னால்  வந்தான். "சார், லைவ்ஸ்டாக் ட்ரான்ஸ்போர்ட் ஆக்ட்படி, இவ்வளவு மாடு தான் இந்த சைஸ் ட்ரக்கில் ஏத்தலாம்னு..."
கரம்சந்த் அவனை முறைத்தான். பிறகு சித்துவைத் தனியே அழைத்துப் போய், "சித்து, இவங்க சரியில்லை. நான் இவங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, புது ஆளுங்க அனுப்பி வைக்கறேன்."
மறு நாள் ஆறு பேர் வந்தார்கள். ட்ரக்கில் இருந்த தடுப்புகள், மாடு சாப்பிட உள்ள சட்டிகள் என்று எல்லாவற்றையும் களைந்தார்கள். பிறகு மாடுகளை ஏற்றத் தொடங்கினார்கள். சித்து அவர்களை ஒருவிதமான கவர்ச்சியால் உந்தப்பட்டு, கண்கொட்டாமல் பார்க்க, முன்பு முப்பது மாடுகள் இருந்த இடத்தில் எண்பது மாடுகளை அடைத்து, அவை அசையக் கூடா வண்ணம் இருக்க ட்ரக்கின் பின்புறக் கதவை அறைந்து மூடினார்கள். அடைக்க முடியவில்லை.  கதவுடன் சற்றுப் போராடிய ஒருவன் கோபத்துடன் கதவைத் திறந்தான். அவர்கள் மத்தியில் தடிப்பாக இருந்தவன் சற்று எக்கி, மிக எளிதாக மாட்டின் முன்காலை முறித்தான். பின்காலையும் முறித்து, வளைத்து உள்ளே தள்ளி, ட்ரக் கதவை மூடி...

*

சித்து தலையை உலுக்கிக் கொண்டான். அது இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் நினைவு வருகிறது என்று அலுத்துக் கொண்டான். மாமாவின் முனகல் தாங்க முடியவில்லை. மீண்டும் வெளியே வந்து நின்றான்.
கரம்சந்திடம், "ட்ரான்ஸ்போர்ட் சைடு இன்னும் கொஞ்ச நாள் பாத்துக்கறேன். அதுல நிறைய விஷயம் இருக்கு. தெரிஞ்சுக்கணும்," என்றான்.
"அப்பப்ப ஏதாவது சிக்கலாச்சுன்னா உன்னைக் கூப்பிட்டு விடறேன்."
சிறிது காலத்திலேயே மாடுகளை அடைப்பதில் சித்து திறமைசாலியானான். அவனே அவ்வப்பொழுது வேலையில் இறங்கினான். "இன்னும் ரெண்டு இருக்கே, என்ன பண்றது?" என்ற வேலையாளைக் கெட்ட வார்த்தையால் திட்டி, அவன் உதவியுடன் அவற்றைக் கை, கால்களைக் கட்டி நிற்க இடமின்றி அடைந்த மாடுகளின் மேலே மூட்டை போலத்  தூக்கிப் போட்டான். ட்ரக்கின் விளிம்பில் நின்றவாறே உள்ளே திருப்தியுடன் பார்க்கும் போது அது நடந்தது. பெரிய மாட்டின் பக்கலில் இருந்த சிறியது உடல் மரத்து, எந்தப் பாகமும் அசைக்க இயலாமல், கழுத்தைச் சட்டென்று திருப்ப, அதன் கூரான கொம்பு பெரிய மாட்டின் கண்ணுக்குள் குத்திக் கிழித்து...

*

தலையை மறுபடி மறுபடி, அப்படியும் இப்படியும் ஆட்டினான் சித்து. இப்போது மனைவியின் பிரசவத்தை விடப் புது  பயம் பிடித்துக் கொண்டது. முன்னெப்போதும் இல்லாமல் இந்த நினைவுகள் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி வந்து அம்முகின்றன? ஆனால் அவை விடவில்லை. அவன் உத்தரவை எதிர் கொள்ளவில்லை. கலங்கி அடித்துக் கருப்பு வெள்ளமாகப் பெருக்கெடுத்தன.
லோடிங் முடிந்து ஓய்வாக ஒரு நாள் ஆட்களுடன் உட்கார்ந்து டீ குடித்த போது ஒருவன் சொன்னான்.: "சார், ஆனா நீங்க பெரிய ஆள். உங்கள மாதிரி யாரும் லோடிங் பண்ணி நான் பார்த்ததில்லை. செம வேலை."
சித்து பெருமையாகச் சிரித்துக் கொண்டான். "இது ஒரு சவால் மாதிரி இருக்கா. அதான் எனக்கு ஒரு இன்ட்ரஸ்ட்."
மனம் ஏன் குழம்புகிறது என்று வெளியே தெரிந்த டீக்கடைக்குக் கிளம்பும் போது விடை கிடைத்தது. தன் மாமனாரை நினைத்துப் பல்கலைக் கடித்தான்.
மனைவி கர்ப்பிணி என்று தெரிந்த முதல் சில உற்சாகமான நாட்களில் ஒரு நாள் வீட்டினுள் நுழையும் போது மாமனார் வந்திருப்பதைப் பார்த்தான்.
"வாங்க மாமா! கங்கிராட்ஸ்! நீங்க தாத்தாவாகப் போறீங்க."
"எனக்கு ஏற்கனவே ரெண்டு பேரப்  பிள்ளைங்க இருக்கு சித்து. உனக்கு நான் தான் கங்கிராட்ஸ் சொல்லணும்."
பேச்சு எங்கெங்கோ சென்ற போதும், கடைசியில் மாமா, "உன்னோட பிசினஸ் அவ்வளவு நல்ல தொழில் இல்லை சித்து."
"ஏன் மாமா, இவ உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா?"
"அவ எதுவும் சொல்ல வேண்டாம். நான் 'எஸ்.பி.ஸி.ஏ.'ல இருக்கேன். நான் சொல்றதைக் கேளு. உங்க பிசினஸ் எங்களோட கண்காணிப்புல இருக்கு. ரொம்பக் கொடுமை அது. வேற ஏதாவது பண்ணேன்?"
லேசாகக் கிளர்ந்தெழுந்த கோபத்துடன் சித்து அவரைப் பார்த்தான். "சட்டப்படி நாங்க மாடு ட்ரான்ஸ்போர்ட் பண்றதுல தப்பு எதுவும் இல்லை."
"யார் சொன்னது? நீங்க மாடுகளைக் கொடுமையா நடத்தறீங்க. ட்ரக்ல மாட்டுக்குச் சாப்பாடு வைக்கிறீங்களா?"
சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர், " சித்து, உங்க ட்ரக் நம்பரை நான் போலீசுக்குப் போன் போட்டுச் சொன்னா போதும். பிடிச்சு வச்சுடுவாங்க, தெரியுமா?"
"சும்மா மிரட்டாதீங்க. நாங்க மட்டும் தான் இதச் செய்யுறோமா, என்ன. உங்களால ஆனதைப் பாருங்க."
பஞ்சாபகேசன் எழுந்து போகும் போது, "உனக்கு முன்னாடி இங்க இருந்த  ரத்தன் சேட் ஏன் வித்துட்டுப் போனான்னு தெரியுமா? பசுவைத் துன்புறுத்தினா பாவம்; வம்சத்தையே அழிச்சிடும்," என்றார்.
மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்த சித்து, அவளது வெளுப்பான முகம் இன்னும் வெளிறுவதைக் கவனித்தான்.

*

சூடான டீ உள்ளே இறங்கினால் மனசு லேசாகும் என்று எதிர்பார்த்துக் கடையில் உட்கார்ந்த பொழுது, மனப்பாறையின் உள்ளே, ஒரு கரிய பிளவில் இருந்து  வெளிப்பட்டு நீந்தி மேலே வந்த வண்ணம், வேண்டாம், வேண்டாம் என்று அமுக்க, மேலே எதிர் கொண்டு எழும்பி அவன் கண் முன்னே மிதந்து வந்து நிலை பெற்றது.
கைகால் பதற திரும்பி மருத்துவமனைக்குள் வந்தான் சித்து. மாமியின் கண்களில் நீர். "ஈசுவரா," என்று புலம்பிக் கொண்டிருந்தாள். மாமா அவனைப் பார்த்து முனங்கவில்லை. அவர் முகம் இருண்டிருந்தது. விபரீதமாக அறைக்குள் இருந்து கிளம்பிய சப்தம் சகிக்காமல் அருகில் இருந்த தூண் மேல் சாய்ந்து, கண் மூடி...யாரை வேண்டுவது, என்னவென்று வேண்டுவது?
வீட்டுக்குக் கிளம்புமுன் கடைசி லோடுக்கு வேண்டியது எல்லாம் செய்து விட்டுப் பார்வையிடும் போது, ஒருவன், சற்றுப் புதியவன், அழைத்தான்.
"ஸாப், கதவு மூடவில்லை."
"காலை ஒடிப்பது தானே, முட்டாள்!"
"இல்லை ஸாப், அந்த மாடு..."
சிறிது அருகில் போய்ப் பார்த்த மாடு சினைப் பசு. "எந்த மடையன் இதைப் போய் வித்தது..." என்று முனங்கிய சித்து, "என்ன இருந்தாலும் சாகத்  தானே போகுது. காலை ஓடி," என்றான். தயங்கியவாறே ட்ரக்கின் உள்ளே ஏறியவனை யோசனையுடன் பார்த்துப் பிறகு, "இரு. நீ இறங்கு," என்று மேலே  ஏறி வேலையை முடித்து திரும்பி நடந்து மைதான எல்லைக்கு வரும் போது மனைவி நிற்பதைப் பார்த்தான்.
நர்ஸ் ஒருத்தி ஓடும் சத்தத்தால் திடுக்கிட்டு விழித்துப் பார்த்த போது கண்கள் பனித்திருப்பதை உணர்ந்தான். மீண்டும் தூங்கிப் போக...
கை, கால்கள் வளைந்து இருந்தன அவன் குழந்தைக்கு. வில் போன்று வளைந்த கால்களைப் பார்த்து விட்டு மேலே, முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடித்து, யாரோ தலையைப் பின்னால் இருந்து அழுத்த, குழந்தையின் முகத்தைப் பார்த்துக் குனிந்து, அதன் கண்ணைப் பார்த்து, ஐயோ! அந்தக் கண்...

*

"சித்து! சித்து!"
யாரோ எழுப்புவது உணர்ந்து, கனவு என்று தெளிந்து கண் திறந்தால் மாமா! "வா, உன் பெண்ணை வந்து பாரு," என்று இழுத்தார். வார்த்தை விபரீதமாய் அர்த்தம் செய்து கொண்டு முன்னே சென்று பயத்துடன் அவள் படுக்கையருகே போய்ப் பார்த்தான். பக்கத்தில் அலறி அழும் குழந்தையுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவன் அருமைப் பெண்டாட்டி.

*********************************************************************************

Trotsky Marudhu's Drawing for this short story is below:

Tuesday, April 26, 2016

மனைவி அமைவதெல்லாம் - Tamil Short Film Script 4


The below script is copyrighted to me. No one can use without my explicit written permission.

மனைவி அமைவதெல்லாம்

FADE IN:

உட்புறம் – முதலிரவு அறை – இரவு

கதவு திறக்கிறது. மாலா உள்ளே வருகிறாள். 25 வயது மதிக்கத் தக்க பெண். தலையில் பூ வைத்திருக்கிறாள். கட்டில் அலங்காரத்துடன் இருக்கிறது. சுற்றிப் பார்க்கிறாள்.
பாத்ரூமில் பிரதாப் குளிக்கும் சத்தம் கேட்கிறது.
மாலா சற்று நேரம் அறையில் அமர்ந்திருக்கிறாள். கண்களை மூடுகிறாள்.
Screen fades.
உட்புறம் – முதலிரவு அறை – இரவு

மாலா கண்களைத் திறக்கிறாள். உள்ளே குளிக்கும் சத்தம் கேட்கிறது. எழுந்து அமர்கிறாள். சற்று நேரம் தரையைப் பார்க்கிறாள்.

உட்புறம் – பிரதாப் வீட்டு வாசல் – பகல்

பிரதாப்பும் மாலாவும் வலது கால் எடுத்து வைத்து வீட்டில் நுழைகிறார்கள். பின்னால் அவன் அப்பா, அம்மா. வீட்டுக்குள் பாட்டி டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மாலா ஒரு நாற்காலியில் உட்கார்கிறாள். அம்மா உள்ளே செல்கிறாள். அப்பா உள்ளே அறைக்குச் செல்கிறார்.
பிரதாப்
நீ இரு. நான் குளிச்சிட்டு வந்திர்றேன்

அவன் உள்ளே போகிறான். மாலா குழப்பத்துடன் அவன் போவதையே பார்க்கிறாள்.
பாட்டி
வா. இப்பிடி வந்து உக்காரு.

மாலா
இல்ல...ஏதாவது வேலை இருந்தா.

பாட்டி
இன்னைக்கு உனக்கு லீவு

சொல்லி விட்டு “ஹா ஹா” என்று சிரிக்கிறாள்.

உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.
மாலா
நீங்க ஏன் ஒரு நாளைக்கு இவ்வளவு முறை குளிக்குறீங்க?
பிரதாப்
(ஆச்சரியத்துடன்)
எவ்வளவு முறை?
மாலா
இன்னைக்கு மட்டும் ஒன்பது முறை
பிரதாப்
(யோசித்து)
அப்போ ரவுண்டா பத்தாவது முறை குளிச்சிட்டு வந்திர்றேன்.
மாலா அவன் ஜோக்கடிப்பதாக நினைத்துச் சிரிக்கிறாள். ஆனால் பிரதாப் துண்டை மறுபடி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் போகிறான். மாலாவின் சிரிப்பு உறைகிறது.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பிரதாப் தலையைத் துடைத்தவாறே வெளியே வருகிறான். மாலா கட்டிலில் அமர்ந்து இருக்கிறாள்.பிரதாப், மாலா, பாட்டி, அவன் அம்மா,
அப்பா எல்லோரும் தரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாலாவுக்குப் பின்னால் டி.வி. அதில் ஏதோ சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. பாட்டி அதையே உற்றுப் பார்க்கிறாள்.
விளம்பர இடைவெளியில் பாட்டி சுற்றிப் பார்க்கிறாள். “உம்” என்றாள்.
அப்பா
என்னடா, இன்னைக்கு ஆபீஸ் போலியா?
பிரதாப்
இல்லப்பா, இன்னைக்கு லீவு.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
மாலா எதுனா பேசு.
மாலா
(திடுக்கிட்டு)
வந்து...
டி.வியில் மறுபடி சீரியல் தொடங்குகிறது.
பாட்டி
சும்மா கிட
பிரதாப்
நான் குளிச்சிட்டு வரேன்.
அவன் எழுந்து போகிறான்.
மாலா
(தயங்கி)
இவர் ஏன் இத்தனை முறை குளிக்கிறார்?
அப்பா விட்டத்தைப் பார்க்கிறார். அம்மா தட்டைப் பார்க்கிறாள்.
பாட்டி
ஏன்? உங்க வீட்டுல யாரும் குளிக்க மாட்டீங்களோ?
மாலா
இல்லை...இவ்வளோ முறை குளிக்கிறாரே அதான்.
பாட்டி
அவன் தாத்தா மாதிரியே இருக்கான். அவரும் இப்பிடித் தான். ரொம்ப சுத்தம்.
சற்று நேர அமைதி.
மாலா
இல்ல.. ஏதாவது சைக்கலாஜிக்கல் பிரச்சினையோன்னு தான்...
பாட்டி
இன்னாது அது?
அப்பா
மனோதத்துவ நோய்
பாட்டி
(அம்மாவை பார்த்து)
இன்னாடி சொல்றா இவ?
அம்மா
உங்க பையனுக்கு மென்டலுன்றா.
பாட்டி
(மாலா பக்கம் திரும்பி)
யாரு மெண்டல்?
ஆனால் சீரியல் பாட்டுக் கேட்கிறது. பாட்டி அமைதியாகிறாள்.
மாலா முகத்தில் கலக்கம்.
உட்புறம் – பிரதாப்பின் அறை – பகல்
பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். அழுது கொண்டிருந்தாள். அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து,
பிரதாப்
சீரியல்ல ஏதாவது பிரச்சினையா?
மாலா இன்னும் விசும்பி அழுகிறாள். பிரதாப்புக்கு ஒன்றும் புரியவில்லை.
பிரதாப்
பாட்டி எதுனா சொன்னாங்களா?
மாலா இல்லை என்று தலையாட்டுகிறாள்.
பிரதாப்
ஹனிமூனுக்குப் போலனு வருத்தப்படாத. இன்னும் ஒரு மாசத்துல குத்தாலத்துல சீஸன். போயிட்டு சுகமா குளிச்சுட்டே இருக்கலாம்.
மாலா
நீங்க ஏன் எப்ப பாத்தாலும் குளிச்சிட்டே இருக்கீங்க?
பிரதாப் மௌனமானான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரதாப்
(பரிதாபமாக)
இந்த வெய்யில்ல இது ஒரு கேள்வியா?
மாலா
எனக்குக் கவலையா இருக்கு. எதாவது டாக்டர் பாக்கலாமே
பிரதாப்
டாக்டரா? எதுக்கு? சுத்தமா இருந்தா தப்பா? எங்க தாத்தா கூட..
மாலா
அவருக்கும் எதாவது ப்ராப்ளமோ என்னவோ..
பிரதாப்புக்கு முதல் முறையாகக் கோபம் வருகிறது.
பிரதாப்
யாருக்கு பிராப்ளம்? உங்க பரம்பரையே பைத்தியம்
மாலா மெதுவாக அழுகிறாள்.
பிரதாப்
மாலா..இத பார். இப்பிடிப் பண்ணலாம். நாளைக்கு முழுசா குளிக்காம இருக்கேன். இருந்திட்டேன்னா டாக்டர் வேணாம்
மாலா தலையாட்டுகிறாள்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
பாட்டி கால் மேல் கால் போட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராம ஜயம் எழுதிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டி
(வேலைக்காரியிடம்)
வீட்டுக்கு மருமவ வந்தாச்சு..நீ அடுத்த மாசத்துல இருந்து வர வேண்டாம்
பிரதாப் பல் தேய்த்துக் கொண்டே வருகிறான்.
அம்மா
என்ன குளிக்காம பல் தேய்க்குற?
பிரதாப்
இன்னைக்குக் குளிக்கல
சட்டென்று அறையில் ஒரு மாற்றம் தெரிகிறது. பாட்டி எழுதுவதை நிறுத்துகிறாள். வேலைக்காரி பெருக்குவதை நிறுத்துகிறாள்.
அம்மா
(கவலையுடன்)
ஏண்டா, காய்ச்சலா?
பிரதாப்
இல்லம்மா சும்மா தான்.
பாட்டி
மாலா ஏதாவது சொன்னாளா? மாலா, இங்க வாடி.
மாலா நடுங்கிக் கொண்டே வருகிறாள்.
பாட்டி
அவனக் குளிக்க வேண்டாம்னு சொன்னியா?
மாலா
இல்ல பாட்டி..
பாட்டி
என்ன நொள்ள பாட்டி?
அப்பா
விடும்மா.. தண்ணி மிச்சம்.
பாட்டி
எவ்வளவு நேரம்னு பாப்போம். இவங்க தாத்தா இப்பிடித் தான். வீரமா குளிக்கலடினுவாரு. மதியத்துக்குள்ள சேர்ந்து குளிக்கலாம் வாடிம்பாரு
SERIES OF SHOTS

கடிகாரம் மெதுவாக நகர்கிறது. பிரதாப் அங்குமிங்கும் நடக்கிறான். ஒரு அருவி விழுவது போன்ற சத்தம் மெதுவாகத் தொடங்கி கூடிக் கொண்டே போகிறது. தலையைப் பிடித்துக் கொள்கிறான்.
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – பகல்
நண்பகல். எல்லோரும் வழக்கம் போல சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். பாட்டி மாலாவை முறைத்தவாறு இருக்கிறாள்.
பாட்டி
எங்க காலத்துல புருசனுக்குச் சரியா உக்கார்ந்து பேசக் கூட மாட்டோம்
பிரதாப்
பாட்டி...சும்மா இரு
அவன் அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொள்கிறான். பிறகு சட்டென்று எழுந்து,
பிரதாப்
நான் குளிக்கப் போறேன்
அவன் உள்ளே போகிறான். மாலா அவனையே பார்க்கிறாள். அவள் கண்கள் கலங்குகின்றன.
உட்புறம் – டாக்டர் கிளினிக்கில் – இரவு
நான்கைந்து நாற்காலிகளில் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு வரிசையாக. மாலாவும் பிரதாப்பும் இரு நாற்காலிகளில். டாக்டர் தன்ராஜ், Psychiatrist என்று போர்ட் தெரிகிறது.
அறையின் உள்ளே இருந்து ஒருவர் சிரித்தவாறே வெளியே போகிறார். உள்ளே ஒருவர் எழுந்து போகிறார்.
பிரதாப்
(பக்கத்தில் இருந்தவரிடம்)
உங்களுக்கு என்ன பிராப்ளம்?
அவர் முறைக்கிறார். பிறகு முகத்தை திருப்பிச் சுற்றிப் பார்க்கிறார்.
பக்கத்து சீட்காரர்
நான் எனக்காக வரல. ஒரு ஃபிரண்டுக்காக வந்தேன்
பிரதாப்
ஓஹோ
முன்னால் அமர்ந்திருப்பவர்
இங்க எல்லோரும் ஃபிரண்டுக்காகத் தான் வந்திருக்கோம்.
பஸ்ஸர் அடிக்கிறது.
உட்புறம் – டாக்டர் அறை – பகல்
டாக்டர் அறை மிதமான வெளிச்சத்தில் இருக்கிறது. பிரதாப்பும் மாலாவும் அமர்ந்திருக்கிறார்கள்.
டாக்டர்
சொல்லுங்க...என்ன விஷயம்?
மாலா
இவர் ஒவ்வொரு நாளும் நிறைய முறை குளிக்கிறார்
டாக்டர்
குணப்படுத்திரலாம்
பிரதாப் அதிர்சியாகிறான்.
பிரதாப்
டாக்டர், இதெல்லாம் ஒரு தப்பா? நான் சொல்றதக் கேளுங்க.
டாக்டர்
ஒரு நாளைக்கு எவ்வளோ முறை குளிக்குறீங்க?
பிரதாப்
பத்து முறை தான்
டாக்டர்
சின்ன வயசுல இருந்தா?
பிரதாப்
இல்ல டாக்டர்...இருபது வயசுல இருந்து...
டாக்டர்
குளிக்காம இருக்க முடியலை...இல்லையா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
டாக்டர்
சில டெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு Obsessive Compulsive Disorder இருக்கலாம். கவலப்படாதீங்க. நான் குடுக்கிற மாத்திரை சாப்பிட்டா சீக்கிரமா குணமாயிடும்
பிரதாப் முகம் பேயறைந்தது போல ஆகிறது.
டாக்டர்
நூத்துல அஞ்சாறு பேருக்கு வரது தான் இது. பரம்பரைல யாருக்காவது வந்தா உங்களுக்கும் வர ரிஸ்க் இருக்கு.
வெளிப்புறம் – சாலை – இரவு
பிரதாப்பும் மாலாவும் அமைதியாக நடக்கிறார்கள். சாலையில் வாகனங்கள் கடந்து போகின்றன. மஞ்சள் நிற விளக்கு வெளிச்சம்.
மாலா
ஃபீஸ் இவ்வளவு கேப்பாங்க தெரியாது.
பிரதாப் மவுனமாக இருக்கிறான். மாலா அவன் கையைத் தொட்டு,
மாலா
என் மேல கோபமா?
பிரதாப் இல்லை என்று தலையாட்டுகிறான்.
மாலா
கவலப்படாதீங்க..ஒரு மாசத்துலயே பலன் தெரியும்னாரே டாக்டர்
பிரதாப் சட்டென்று நிற்கிறான்.
பிரதாப்
நீ என்ன டைவர்ஸ் பண்ணிரு மாலா
மாலா புன்னகைக்கிறாள்.
மாலா
அதுக்குள்ள போரடிக்குதா?
பிரதாப் கண்களில் நீர் பளிச்சிடுகிறது.
பிரதாப்
டாக்டர் சொன்னாரு பாரு. பரம்பரையா வரலாமாம். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு
மாலா
வரலாம் தான சொன்னாரு. பிள்ளைங்கள குளிக்கவே விட மாட்டேன்..கவலப்படாதீங்க
பிரதாப்
இல்ல மாலா..என்ன டைவர்ஸ் பண்ணிரு
மாலா மறுபடி நடக்கத் தொடங்குகிறாள்
மாலா
முதல்ல சரியாப் போகட்டும். அப்புறம் டைவர்ஸ் தான்
சில வினாடிகள் கழித்து
மாலா
பாட்டி கிட்ட சொல்லணுமா?
பிரதாப்
வேண்டாம்...பெரிய ரகளையாயிடும்
INSET – சில தினங்கள் சென்ற பின்
உட்புறம் – பிரதாப் வீட்டு ஹால் – இரவு
பிரதாப்பும் மாலாவும் வீட்டுக்குள் நுழைகிறார்கள். பாட்டி, அம்மா, அப்பா மூவரும் ஒரே சோபாவில் நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்னை என்று தெரிகிறது.
அப்பா
ஏண்டா..எதோ டாக்டர் கிட்ட போறியாமே?
பிரதாப்
இல்லியே..
அம்மா விசும்புகிறாள்
அம்மா
ஐயோ பொய் வேற சொல்றானே...
அப்பா
நுங்கம்பாக்கத்துல நீ ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போன போது எங்க ஆஃபீஸ் சுப்பிரமணி பார்த்திட்டான்
பிரதாப்
(கவலையுடன்)
அவர் அங்க எதுக்கு வந்தாராம்?
அப்பா
எதோ ஃபிரண்டுக்காகப் போனானாம். நீ ஏண்டா பைத்தியக்கார டாக்டரெல்லாம் பாக்குற?
பிரதாப்
மாலாவுக்கு தொண்ட கட்டு. அதான் போனோம்
அப்பா
ஏண்டா பொய் சொல்ற?
பாட்டி
ஏ மாலா..இங்க வாடி. டாக்டராண்ட போனீங்களா?
மாலா
(தயக்கத்துடன்)
இவருக்குத் தான்
அம்மா மாலாவை முறைக்கிறாள்.
பாட்டி எழுந்து நிற்கிறாள். கைகளைத் தூக்கிச் சோம்பல் முறிக்கிறாள்.
பாட்டி
அதான் இவன் கொஞ்ச நாளா கம்மியாக் குளிக்கிறானா?
மாலா
ஆமாம்
அம்மா
அடிப் பாவி..எம் புள்ளயப் பைத்தியமாவே ஆக்கிட்டீங்களே
பாட்டி
தா....சும்மா கிட.
(beat)
இவன் தாத்தாவும் அந்தக் காலத்துல எல்லா டாக்டரும் பாத்தாரு. அப்பல்லாம் மாத்திரை ஒண்ணுமில்லை. இப்ப இருக்கு. நல்லதாப் போச்சு
பிரதாப்
(தைரியமாக)
அம்மா, சும்மா பைத்தியம் அது இதுனாத. அங்க வர எல்லாரும் ரொம்ப டீஸன்ட். நீ வேணா வந்து பாரேன். ஜாலியா இருக்கும்
இருவரும் அறைக்குள் செல்கிறார்கள்
உட்புறம் – பிரதாப்பின் அறை – இரவு
பிரதாப் கதவுக்குத் தாளிடுகிறான்.
பிரதாப்
பாட்டி வாழ்க
மாலா
மெதுவாப் பேசுங்க
அவன் அவளை நெருங்கி வருகிறான்.
பிரதாப்
டைவர்ஸ் பண்ணலாமா?
மாலா முகம் சுளிக்கிறாள். அவனைப் பிடித்துத் தள்ளி
மாலா
இப்பல்லாம் குளிக்கிறதே இல்லையா? போய்க் குளிச்சிட்டு வாங்க

THE END




Monday, April 25, 2016

தட்டுங்கள் திறக்கப்படும் - Tamil Short Film Script - 3


The below script is copyrighted to me. No one can use without my explicit written permission.

தட்டுங்கள் திறக்கப்படும்



FADE IN:

உட்புறம் – சுரேஷ் வீட்டு அறை – இரவு

ஒரு மஞ்சள் டேபிள் லேம்ப் வெளிச்சம். மேஜை. மேஜையில் லேப்டாப் கம்ப்யூட்டர். பக்கத்தில் பிரிண்டர். நாற்காலியில் சுரேஷ். முப்பத்தி இரண்டு வயதிருக்கும்.
கேமிரா அவன் பின்னால் நோக்கி நகர்கிறது. கடிகாரம் மணி இரவு இரண்டு என்று காட்டுகிறது. கம்ப்யூட்டர் திரை தெரிகிறது. கூகிள். “How to get a ration card” என்று தேடியிருக்கிறார்.
பிரிண்டர் கிளிக் ஆகும் சத்தம். கேமிரா அவரைத் தாண்டி பிரிண்டரைக் காட்டுகிறது. வரிசையாகப் பேப்பர் வருகிறது. Camera zooms on the paper.

உட்புறம் – சுரேஷ் வீட்டு ஹால் – பகல்

வாசல் கதவு திறந்திருக்கிறது. காலை வெளிச்சம். சுரேஷ் ஷூ அணிந்து எழுகிறான். கையில் ஒரு கத்தை பேப்பர். தோளில் ஒரு லேப்டாப் பை. வெளியே போகக் காலடி எடுத்து வைக்கிறான்.
Offscreen குரல் கேட்கிறது.
சுரேஷ் மனைவி
(O.S)
நாம யூ.எஸ்ல இருந்து வந்திருக்கோம்னு சொல்லிறாதீங்க. பைசா ஜாஸ்தியா கேக்கப் போறாங்க

சுரேஷ் மேலே உள்ள பிள்ளையார் படத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வெளியே போகிறான்

வெளிப்புறம் – மயிலாப்பூர் ரேஷன் அலுவலகம் வாசல் – பகல்

Establishing shot: Shot of Ration office board.
பல வாகனங்கள் சென்று வரும் ஓசை. ஹாரன் சத்தம். நல்ல வெயில்.
சுரேஷ் நின்று அலுவலகம் இருக்கும் மாடியை நிமிர்ந்து பார்க்கிறான். மாடிப்படி தெரிகிறது.
உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

ஒரு மேஜை போட்டிருக்கிறது. அதன் பின்னால் அதிகாரி-1 அமர்ந்திருக்கிறார். அவர் முன் வரிசையாக மூன்று பேர் நிற்கிறார்கள். கடைசி ஆளாக சுரேஷ்.
ஹாலில் அடுத்த பக்கம் ஓரிரு கவுண்டர்கள் இருக்கின்றன. அதன் பின்னால் ஓரிரு பெண் அலுவலர்கள். நிறைய பேப்பர்; பைல்கள். சற்றே பழைய கட்டிடம் என்று தெரிகிறது.
சுரேஷ் வேர்வையைத் துடைத்துக் கொள்கிறான். பதட்டமாக இருக்கிறான். மறுபடி மறுபடி கையில் உள்ள பேப்பர்களைச் சரி பார்க்கிறான்.
அதிகாரி-1
Next?

சுரேஷ் தன் கையில் உள்ள கத்தை பேப்பரை அவர் மேஜை மேல் வைக்கிறான். பழைய ரேஷன் கார்டை எடுத்து கொடுக்கிறான். அவர் அதைத் திறந்து பார்க்கிறார். சுரேஷ் அவரையே பார்த்தபடி இருக்கிறான்.
அதிகாரி-1
அட்ரஸ் மாறியிருக்கா? ப்ரூப் வச்சிருக்கீங்களா?

சுரேஷ்
(படபடப்புடன்)
வச்சிருக்கேன் சார்.

அதிகாரி-1 ஏதோவொரு ரேஜிஸ்தரைப் பார்த்து விட்டு
அதிகாரி-1
ஸ்டாப் சப்ளை போட்டிருக்கு?

சுரேஷ் திருதிருவென்று முழிக்கிறான்.
சுரேஷ்
சார்?

அதிகாரி-1
சப்ளை பார்க்க certificate வேணுமே.

சுரேஷ் கையில் உள்ள பேப்பர்களைப் புரட்டி பார்க்கிறான். அவனுக்கு எதுவும் புரியவில்லை.

அதிகாரி-1
வெளியூர்ல இருந்தீங்களா?

சுரேஷ் அவரைக் கவனிக்காமல் கையில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தள்ளி வருகிறான்.


வெளிப்புறம் – ரேஷன் அலுவலகம் வெளியே – பகல்

சுரேஷ் போனில் பேசுகிறான்

சுரேஷ்
ஆமா மாமா. என்னமோ certificate கேக்குறான்.

போனில் மாமாவின் குரல்
காசு எதிர்பாப்பாங்க. யூ.எஸ்ல இருந்து வந்தேன்னு சொன்னீங்களா?

சுரேஷ்
இல்ல மாமா...

போனில் மாமாவின் குரல்
கொஞ்சம் ரூவா வெட்டுங்க

சுரேஷ்
யார் கிட்ட கொடுக்கணும்?

போனில் மாமாவின் குரல்
(அவன் பேசுவதைக் கவனிக்காமல்)
காசு கொடுத்தா எல்லாம் சரியாயிடும்..என்ன?

சுரேஷ்
சரி மாமா. ஆனா யார் கிட்ட...எவ்வளவு

போனில் மாமாவின் குரல்
சரி..நான் அப்புறம் பேசுறேன்.

சுரேஷ்
மாமா? ஹலோ?

போன் கட்டாகிறது. சுரேஷ் சலிப்புடன் கையில் உள்ள பர்சை எடுத்துப் பார்க்கிறான். இரு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் தெரிகின்றன. பர்சில் இருந்து எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைக்கிறான். சுற்றிப் பார்க்கிறான்.
சற்றுத் தள்ளி படியருகே ஒரு சிறு ஸ்டூலில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். வயதானவர். ஒரு லெட்டர் பேடை வைத்துக் கொண்டு மனு எழுதிக் கொடுப்பவர். அவர் எதிரே இரண்டு வயதானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சுரேஷ் அவரை உற்றுப் பார்க்கிறான்.
மெதுவாக அவர் அருகே போய் நின்று கொள்கிறான். அவர் சற்று நேரம் கழித்து அவனை நிமிர்ந்து பார்க்கிறார். பிறகு தம் வேலைக்குத் திரும்புகிறார்.
ஒரு சில வினாடிகள் கழித்து

மனு எழுதுபவர்
தம்பி, என்ன விஷயம்?

சுரேஷ்
இல்ல.... ரேஷன் கார்டு வாங்கணும்

மனு எழுதுபவர்
உள்ள போங்க...தருவாங்க

சுரேஷ் வேறு வழியில்லாமல் மேலேறி போகிறான்

உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

வரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். ஹாலின் நடுவில் நன்றாக உடை உடுத்தி ஒருவர் நிற்கிறார். சுரேஷ் அவரை சற்று நேரம் பார்க்கிறான். பிறகு அவர் அருகே சென்று நிற்கிறான். அவர் அவனை விநோதமாகப் பார்க்கிறார்.

சுரேஷ்
நல்ல வெயில்

பாக்கெட்டில் உள்ள ஐநூறு ரூபாய் நோட்டை தெரிவது போல வைக்கிறான். பிறகு அவர் முகத்தை உற்றுப் பார்க்கிறான்.

நடுவில் நிற்பவர்
ம்ம்.

சுரேஷ்
(தணிவான குரலில்)
கார்டு தருவாங்களா?

நடுவில் நிற்பவர்
(அதே தணிவான குரலில்)
ஏன்? ஏதாவது பிரச்சினையா?

சுரேஷ்
எவ்ளோ தள்ளணும்?

நடுவில் நிற்பவர் அவனைப் புரியாமல் பார்க்கிறார்.

அதிகாரி-1
வாங்க. லைன்ல வாங்க.

நடுவில் நிற்பவர் போய் கியூவில் நின்று கொள்கிறார். சுரேஷுக்கு அப்போது தான் அவரும் கார்ட் வாங்க வந்தவர் என்று புரிகிறது.
சுரேஷ் சற்று நேரம் அங்கே நின்றபடி சுற்றிப் பார்க்கிறான். எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்து வருகிறார்கள். மேலே பேன் சுற்றும் சத்தம்.

வெளிப்புறம் – ரேஷன் அலுவலக காரிடார் – பகல்

சுரேஷ் போனில் பேசுகிறான்.

சுரேஷ்
டேய், உனக்கு ஹைதரபாத்ல யாரோ எம்.பி தெரியும்னு சொன்னயில்ல? அவர் கூட பேசணும்.

போனில் நண்பன் குரல்
எதுக்கு? என்ன விஷயம்?

சுரேஷ்
மயிலாப்பூர் ரேஷன் ஆபீஸ்ல இருக்கேன்டா. இங்க எவனுக்கு லஞ்சம் தரணும் தெரியல. எவ்வளோ தரணும்னும் தெரியலை. கொஞ்சம் கேட்டு சொல்றியா?

ஒரு பாட்டி மெதுவாகத் தாண்டிப் போகிறாள். சுரேஷ் அவளையே பார்க்கிறான்.

போனில் நண்பன் குரல்
அதுக்கு எவனாவது ஹைதரபாத் எம்.பி கிட்ட போயி கேப்பானா? ஏதாவது அறிவிருக்கா உனக்கு?

சுரேஷ் போனை கட் செய்து விட்டு சற்று நேரம் தரையைப் பார்க்கிறான். பிறகு உள்ளே செல்கிறான்.

உட்புறம் – ரேஷன் அலுவலக ஹால் – பகல்

உள்ளே வரிசையில் ஓரிருவர் நிற்கிறார்கள். சுரேஷ் அவர்களுடன் போய் நிற்கிறான்.

அதிகாரி-1
Next?

சுரேஷ்
(தைரியமாக)
சார், ஸ்டாப் சப்ளைன்னா என்ன?

அதிகாரி-1
வெளியூர்ல இருந்தீங்கன்னா கார்டு கேன்சல் பண்ணனும். இல்லைன்னா ஒரு லெட்டர் எழுதிக் கொடுங்க, போதும்.
(beat)
சுரேஷ்
(ஆச்சரியத்துடன்)
அவ்ளோ தானா?

அதிகாரி-1
அவ்வளவே தான். Next?

BEGIN FAST MOTION

SERIES OF SHOTS

A. Upbeat music. Fast motion.
B. சுரேஷ் லெட்டர் எழுதுகிறான்.
C. அதிகாரியிடம் கொடுக்கிறான்.
D. “டக், டக்” என்று நாலு சீல் அடிக்கப்படுகிறது
END FAST MOTION

வெளிப்புறம் – ரேஷன் கடை காரிடார் – பகல்

சுரேஷ் போனில் பேசிக் கொண்டே போகிறான்

சுரேஷ் மனைவியின் குரல்
எப்போ வரும்னு ஏதாவது சொன்னாங்களா?

சுரேஷ்
ஒரு மாசம் தான்.
(beat)
By the way
(beat)
ஒரு பைசா கொடுக்கல.

THE END




Wednesday, July 23, 2014

How I got arrested and had to spend many minutes in Prison


I went to the fast conducted by Satta Panchayath Iyakkam (SPI), a remarkable NGO (no foreign funding, so relax). It was to submit 10 demands to the TN state, most important to remove the State Chief Information Commissioner, Mr.Sreepathi IAS from the commission. The TN state information commission is, in general, doing a really bad job.
Anyways, at the end of it the activists decided to proceed with a lock to symbolically "lock" the office of the Information Commission. Police were there in massive numbers.
I stood in a corner, gaping at the spectacle, while my head was swimming from the 8 hours fast. I have no idea how people do this for many days. I wanted, craved, sambar idli for some strange reason.
Suddenly the police came marching in our direction, asking all of us to get into the van. I stayed still, hoping they could not see me. But there was nothing to hide behind, and an Inspector who looked like a Software Project Manager came in my direction with a few constables.
He said, "Why are you standing here?"
I said, "I came here for the fast."
"Do you want to get arrested or leave?" he said, like Bruce Willis.
I said "Leave" without ANY hesitation.
"Then go," he said, as if a massacre was about to happen.
But as I ran to one side of the road, it was blocked! I run to the other side and that is blocked too! So I run from one to another like a caged rat, thinking, "That Inspector WAS a software PM, because he gave me a command and closed all ways of executing it."
By this time everyone was in the vans and they were all basically watching me go from one end to another. So, with as much dignity as I could muster, I went into the van.
We were taken to the Chepauk guest house through a circuitous route so that nobody could follow us. This place is like a open air jail. I think they call it "guest house" as a joke, because the MRTS train passes right above you every 20 minutes. No man could survive there.
We all sat in plastic chairs. There was a nice breeze.The walls were high and i thought my only chance of escape was to time the MRTS trains over the next 10 days and get on the last car somehow, like Papillon.
But then they asked us to sign something and leave. The signing sheet said "Arrest detail" so then I understood I was actually arrested.
My only advice to you is to get arrested with 60,70 people - that too pumped up activists, because then nobody cares about your sorry, timid self.

Monday, June 16, 2014

தந்திப் புரட்சி - ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்


My Tamil short story in solvanam.com, தந்திப் புரட்சி  - ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்
Excerpt:
ஆறு மாதங்கள் முன்பு தான் திருநெல்வேலி கலெக்டர் ஆஷை வாஞ்சி ஐயர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருந்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரராகவன் தூத்துக்குடியில் நடத்திய அதிரடிப் புலனாய்வில் பதினாலு பேர் மாட்டியிருந்தார்கள். எல்லோருக்கும் பின்னால் சூத்ரதாரியான  நீலகண்ட ஐயர், ஒரு ரகசிய சதிக் கூட்டம் நடத்தியதாகக் கேள்வி. படிக்கப் படிக்க மர்மக் கதை போல இருந்த இந்த சதியைப் பற்றி நாலணா நாவல்கள் கூட வந்து விட்டன. கேஸ் முடியும் தருவாயில் இருந்தது. பதினாலு பேருக்கும் மொத்தமாகக் தூக்கு என்று என் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அவ்வப்போது பிரிட்டிஷ் விசுவாசி. ரிப்பன் கட்டிடத்தில் சில அறைகளுக்கு வயரிங் செய்ய காண்டிராக்ட் பிடித்து விட்டார்.
*
“ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் கொன்னதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் ஆறுமுகம். நம்பியார் மேல்துண்டை வைத்து விசிறிக் கொண்டார்.
“சரியான கேள்வி அது இல்லை,” என்றார் வாசு. “துரை கொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கேள்வி.”
- See more at: http://solvanam.com/?p=33633#sthash.ahNmHCCA.dpuf

Tuesday, May 13, 2014

The Exorcism of Sathish Kumar, MBA - my novel


My first novel, "The Exorcism of Sathish Kumar, MBA" has been published by Tata Westland publishers. The book came out in ebook format this week. The Print edition will be out next month.

Brief Introduction
-----------------------
The novel is a thriller/fantasy set in Chennai. The hero, Arjun Palani, is an young man, fired thrice from IT companies in a career of four years. He is asked to join a strange team of top managers as the IT company, BSD Technologies, is collapsing. A set of tasks are assigned to him (the first one is to get ganja, btw), while he starts suspecting that a crazy man is held in the top floor of the building. 
The novel takes us through Arjun's adventures, while unravelling a plot by the hedge fund company, PH Capital. It involves drones, Wikileaks, Anonymous India, a dangerous computer worm, sorcery and finally, to top it, a trip across the Vaitharani river to the world of the dead.

Links you can download the ebook from:
Amazon
Flipkart
Google Play

My notes to publicist
----------------------------
The computer worm in the story, named "Blaze" is named after "Flame" an actual worm that infected Iranian computers. Most evidence points to the United States and Israel government as behind Stuxnet and Flame.
Link below is the Wired article on Stuxnet:
"How Digital Detectives Deciphered Stuxnet, the Most Menacing Malware
in History"
http://www.wired.com/2011/07/how-digital-detectives-deciphered-stuxnet/
A normal virus affects computers and steals or destroys data. Stuxnet, on the other hand, tries to control physical machines, such as the huge centrifuges in nuclear reactors. These machines are controlled these days by software instructions. Stuxnet then messes up the instructions and causes them to malfunction. If these grow, then companies can use them against rivals for industrial sabotage. Similarly drones are controlled by an operator far away from the battle field. These are cheap and small - so they can be used by police forces and by companies to spy on a large number of people. The two more weapons not mentioned in the book are pervasive surveillance and fighting robots. Taken together these show a frightening future, which is countered by other technical successes such as the internet and community bonding in this age.

Thursday, December 19, 2013

Who is Scared of the AAP? - The Pelican Brief in India


Recently Arvind Kejriwal was reported to have said "Do not pay electricity bills". That is, this is what the headlines said. What Kejriwal actually said was, "We would do an audit of the power companies. It will take a few months. In that time, people who want to pay their bills can pay. But others have the right not to pay until this audit is done".
What is this audit he is talking about? To find out the details, follow me below:
Delhi has privatized electrical distribution companies (discoms). These have been given licenses, by the Delhi Electric Power Regulatory Commission (DERC) based on the Delhi Electricity Reform Act 2000. Currently BSES, which is a Reliance subsidiary and NDPL, which is a Tata subsidiary hold these licenses. So, they supply electricity in Delhi, not the government.
Now, Sheila Dikshit claimed in August that Delhi residents pay the lowest among metros. She "fudged" the truth here - Delhi power tariff IS actually high - but the government has tried to "subsidise" this cost for low unit users. But note where this "subsidy" goes - the government still has to pay the raised cost from taxpayer money to the private discoms. In other words, Delhi power situation is a corporate windfall for Reliance and Tata.
Per se this may be fine - but AAP (and the BJP) believe that the power companies are gouging the customers. There have been steep hikes in the past two years, with the companies wanting more January 2014. 
Now here comes the crux - AAP wants a public audit of these companies, and has suggested that with this audit's results they can cut down the cost of power.
The corporations do not want that audit. Please read BSES FAQ on this issue (item 8 below). http://www.bsesdelhi.com/HTML/faq_issues.html.
So the power companies are claiming that they CANNOT be audited. 
And they are wrong. They are hoping you won't notice, but the license agreement they signed AUTHORISES the government to audit them using an independent auditor any time the government wants. Here is the license agreement for BSES (clause 7, page 20):http://www.derc.gov.in/Licensees/Licensees/distribution%20licensees/BYPL.pdf

What is amazing to me is the audaciousness with which a company that handles public resources, can claim that they cannot be audited! As an example, this is similar to telcos that handle 2G, 3G spectrum claiming they cannot be audited!
In other words, the AAP is actually asking for something that the government has the right to ask. And the companies (Reliance, Tata subsidiaries) do not want that. They have millions to lose if the AAP implements the audit.
So, suddenly you have scary screaming headlines and PR campaigns on social media smearing the AAP.

Sunday, December 01, 2013

Commercial and Literary writing - Jeyamohan's Q&A


Very happy news - attended Jayamohan's Q&A at Panuval book shop. I like his writing very much. Unfortunately, asked a question and got him angry. It seems to be my "raasi". I still think his answer was not correct, but I learnt not to argue with a guy holding a mike. Whole exchange is below. I should write it in Tamil, but computer problem:

In Jeyamohan's website he has a link - here: http://www.jeyamohan.in/?p=41143
You can read the link and see that he is saying how he selects stories by others for his website. He says there are different kinds of stories - one is commercial model. Then he proceeds to clearly diss this model - he says they are "taken from other stories". He compares them with Kodambakkam (Tamil film) stories. He proceeds to say a lot of different things. Then he compares it with literary stories, which he says, have structural flaws but are, clearly "better".
A month back he wrote an article in Tamil Hindu, where he said we need more commercial writers in Tamil, because only then overall reading will increase- and that this space has been taken by English commercial writing (very true). If overall reading goes up, literary reading will also goes up.
Now, I had a vague question, but I already knew he was not very correct in his comments. I mentioned these two articles, and I said, "The split between commercial and literary exists in every language's lit. Therefore much work has already been done on this space. Why do you have to redefine it in the above form?"
What I should have asked is, "if you have such a low opinion of commercial writing, then why would any one write it? Why should someone do it just so literary writers eventually get readers?"
But clearly I phrased it wrong, and got caught.
He started telling me about Harold Bloom and mentioned a lot of different Western authors who have said the "same thing". I made a comment about Harold Bloom which irritated him. He said, "Only after reading all this I am coming and sitting here". He said, "Therefore, the distinction between commercial and literary fiction exists"
I tried to say something and he said, "Accept what you said is wrong and then we can proceed".
I said, "I can accept, but that was not my question at all".
He immediately softened and said, "I am sorry I am being harsh".
I said, "That is fine. After all, I have been reading you for some time".
People laughed and he seemed to relax. But I persisted.
I said, "I did not state that the split between commercial and literary fiction does not exist. My question was why would you say writers of one of those forms is not very sound?"
He said, "That is not what I said. I said commercial stories may have better structure." (He is correct there, but anyone can read the above link and decide if he is positive or negative about such writers. He actually talks about good form as if it is something writers "use").
Then he proceeded in making a series of claims. He was entertaining, but I thought all of those were pretty wrong statements. You can decide for yourself.
First,he said we may read something in New Yorker etc (somehow he got that I had been "abroad"), but real literature is in small literary magazines in English too. In other words, he was conflating writing in counter culture style magazines with literature. While they may be, saying New Yorker etc are not the place for literary stories is shocking. It means his definition of literature and commercial is already completely at conflict with what most people accept. 
Second, he said writers of commercial stories decide what their audience wants and then write. Pretty major claim and not true. He mentioned how Hollywood market research works - which is true, but we were not talking about movies. Even in movies, he was talking about James Bond.
Third, he said for many commercial English fiction, the editors decide a major part of the story. Again, not true. Editors do not have the time anywhere to sit and baby sit an author through his book. 
Then he started talking about Kodambakkam again. At this point, I realized I had to shut up when another person has a mike.
I think what happened was he decided to choose extremes of commercialism and literature.
To me, it still seems odd that he would claim this. What he means when he says "commercial" seems not to be an accepted form of writing at all. If all that he says were true, popular writing cannot be a valid form of creative expression or art at all. He keeps comparing it with the situation in movies, which is doing a disservice to popular-fiction writers.
But, he still wants commercial fiction to be written, so that more readers come in!
But I still liked him in the meeting, since he has a very deep intellect, very sharp, excellent debater. He is still great, but I may not communicate with him much.

Thursday, July 04, 2013

Fantasy writing in Indian English


Indian English commercial fiction has been tapping somewhat into Fantasy territory for the past few years. The Immortals of Meluha, for example, belongs to the fantasy genre. Along with it have come novels such as "Govinda" which offer different varieties, that border on fantasy.
Many of these books currently seem to use the mythological sources of Mahabharatha and Ramayana.
But I believe the real sources of myth writing in Indian English should go farther back - to the myths of Ashwini Kumaras or Vritra. These are parts of more ancient memory, and can be more effective than working with the Mahabharatha.
J.R.R. Tolkien, who is considered the early father of Fantasy writing, did not use Biblical myths for his Lord of the Ring series. Instead he went to the Scandinavian and Icelandic myths. This is because they are more ancient and serve an excellent setting.
Try to recall your earliest childhood memory. For me, it was a memory of a boat, going across a small lake. Into the lake a small stream was feeding as a tiny fall.Whenever I recall it, I have a sense of loss, as well as the feeling that I am looking at it through a curtain. It has a vague, hard to catch sense.
Now, look back at our history and myths. The Ramayana and the Mahabharatha are great stories, but they are similar to our memories from, say, teenage. They are clear and easy to recall.
Go further back; in the case of our culture, the Rig Veda period, early Vedic myths appear more ancient - as if we were in our infancy then. These myths have the same vague, hard-to-catch sense, because our culture was at its infancy then. Rig Vedic hymns seem magical. The Gods of those times, Mitra, Soma, Varuna, Indra - these gods are very old. They say these gods appeared even before Indo-Iranian culture. The earliest references to them are in the Mitanni kings of West Asia, in an invocation.
I think our mythical writing and fantasy material should go back to this period - and not rest with the Mahabharatha or Shiva Purana.

Saturday, June 29, 2013

Tamil short story - உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்


My Tamil short story - உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும் was published in solvanam.com today. Please read and comment. Excerpt below:

தண்டியில் உப்பு எடுக்க மகாத்மா யாத்திரை செய்த சமயம், 1930-ம் வருடம், கல்லிடைக்குறிச்சி ஜூனியர் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த நாங்கள், கல்லிடைக்குறிச்சி உப்புக் காங்கிரஸை உருவாக்கினோம். நாடெங்கும் சுதந்திரக் காற்று வீசுகையில், எங்கள் பங்குக்கு வெள்ளைக்காரனை உயிரை வாங்க முடிவு செய்தோம். காங்கிரஸின் முதல் கூட்டத்தில், எங்கள் முதல் நடவடிக்கையாக குண்டு போட வேண்டும் என்று ஆறுமுகம் விருப்பம் தெரிவித்தான். எங்கே, எப்படி என்ற கேள்விகள் ஆறுமுகத்தின் கோபத்தைக் கிளறி விட்டது. எங்களை மிதவாதிகள் என்று குற்றம் சாட்டினான். “வைஸ்ராய் மேல குண்டு போடலாம்,” என்றான். வைஸ்ராய் கல்லிடைக்குறிச்சி வரும் வரை பொறுக்க வைத்திக்கு இஷ்டமில்லை. “போலீஸ் ஸ்டேஷன் மேல குண்டு போடுவோம்,” என்றான். 

More at solvanam.com

Friday, June 21, 2013

Six Rules on Public Protests for Facebook Commentariat


1. DO judge a popular protest by the merits of its demands - not by political alignment. The attempt to impose a political "party alignment" on a popular protest (such as anti-corruption, sri lankan issue or rape protests) makes no sense because the protesters are public, and they may have different affiliations. What matters is their public demands.
2. Do NOT insult any substantial protest by saying "media created it". Media has no capability in manufacturing news with such a massive conspiracy in which thousands of people participate. You are stupid if you think NDTV is filling buses with protesters to get TRP ratings. That is not how media works.
3. Do NOT ask protesters why they are not protesting something else. For example, asking the Delhi rape protesters why they are not protesting rapes in Kashmir is absurd for many reasons. a) That they did not protest something does not mean they agree with it. b) Protests about one issue may actually help other issues and c) Protesters are individuals who feel excited about something. It is not some collective conspiracy.
4. Do NOT ask, after the protests die down why they died down. They died down because all public protests die down at some point. This should be common sense, public has jobs and cannot be out in the streets fighting 24 hours.
5. Do NOT ask, AFTER the protests what they accomplished. That they came out and fought means something. That is the case for anti-corruption or Delhi rape protests.
6. Do NOT look at one individual who shows up in some stage and try to make the entire protest about that person. This is what Arundhathi Roy and Gail Omvedt tried to do for the Anti-corruption struggle; and the Manmohan Singh government did for the Koodankulam protesters. As writer Jeyamohan said, popular protests are usually big tents - they cannot turn away people we don't like, sitting in our couch at home. Do not fall into smear tactics.

If a movement has demands, and the demands are reasonable, then support it. If not, do not support it. All else are distractions.

IPL scandal benefits Indian politicians


Whenever a scandal happens - coalgate, 2G, IPL - a section of media and commenters talk about how this is horrible because people may lose their trust in government or BCCI etc.
It occurs to me that the Indian politician BENEFITS a lot from the public's loss of trust, whatever be the institution. The Indian politician survives on two popular myths:
1) That corruption is "inherent" in India - for cultural, religious or social reasons, and
2) That the situation is impossible to change
It is these myths that the anti-corruption protests challenged. It was not Jan Lokpal that scared these guys; it was the blowing of these two myths. 
A scandal such an IPL, even though it does not have anything directly to do with politics, still BENEFITS the Indian politician, because the public's lack of trust in ANY elite institution makes it easy to force them to give up and sink into apathy. A population that mistrusts any institution also mistrusts each other.
Social mistrust is the single best investment that the Indian political class has. They will try everything to perpetuate it, and have no interest in solving it.
In fact, I predict that they will BUILD entire institutions, and then show that they are corrupt, JUST to reinforce mistrust and perpetuate the myths above. The IPL may just be one such.

Wednesday, May 29, 2013

Sameer Kamat and Booksoarus


Posting after a long time.
I tried writing in English last year; and found it fun. Have been on longer writing projects for the past two years, with the screenplay, a Tamil novella, an English novel and a second one that I am writing now. The intensive writing is enjoyable and I learnt a lot.
For commercial English fiction, for the first time, you can at least make "submissions" and have your work read. That is a great relief compared to Tamil publishing where you have no idea where to go. Many English publishers have websites where they specify submission rules.
It is easy to learn the after-writing submission process online. I learnt some details from Sameer Kamat's website here.
Sameer has published a non-fiction book called Beyond the MBA Hype (Harper Collins); but he also offers useful information on the publishing industry, self-publishing, literary agents and so on.
He has recently founded a new website named Booksoarus.com. It offers advice on creative writing. I am hoping it would become a forum for Indian writers.
I will be back to regular posting soon, if anyone is reading at all.

Monday, January 14, 2013

My Tamil story - ஒற்றாடல் - in Solvanam.com


My Tamil novella ஒற்றாடல் has been published in the online magazine Solvanam.com.
Links and short intro are below:
ஒற்றாடல் - காட்டூர் கோட்டை  - Part I
ஒற்றாடல் நரசிம்மாஸ்திரம் - Part II


காட்டூர்க் கோட்டை தரை மட்டமாகி இருந்தது..
பேச்சி மலையின் மேலிருந்து பார்க்கும் போது பெரும் புழுதிப் புகை கிளம்புவது தெரிந்தது..
என் உள்ளம் கொதித்தது. கைகள் நடுங்கின.
“போகலாமா? இப்பொழுது கிளம்பினால் பள்ளியூர் போகச் சரியாக இருக்கும்”, என்றான் வழுதி.
நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன். சற்றுத் தள்ளி, ஒரு பாறையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தான். வாயில் வெற்றிலை. நான் பார்க்கும்போது சத்தத்துடன் அதைத் துப்பினான்.
என் மனதில் எழுந்த கோபத்தை அடக்க முயன்று தோற்றேன்.
“என்னுடைய முதல் போர் இது”, என்றேன்.
அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான்.
“வாழ்த்துக்கள்” என்றான்.
“புறமுதுகிட்டு ஓடுகிறோம்”
அவன் எழுந்து குதிரையைத் தட்டிக் கொடுத்தான்.
“நல்ல வேளை குதிரை கிடைத்தது. இந்த மலைகளில் குதிரையில்லாமல் தப்பி ஓடுவது கஷ்டம்”, என்றான்.
“பல முறை ஓடிப்  பழக்கம் போலிருக்கிறது?” என்றேன் நான்.
அவன் ஏறிக் கொண்டான். என்னைப் பார்த்துக் கை நீட்டினான்.
நான் தயங்குவதைப் பார்த்துச் சிரித்தான்.
“ஒற்றர்கள் புறமுதுகிட்டு ஓடலாம். சாத்திரத்திலே சொல்லியிருக்கிறார்கள்”, என்றான்.
குதிரை தட்டுத் தடுமாறி காட்டுக்குள் நுழைந்தது.

Tuesday, December 25, 2012

My Tamil short story in Solvanam


One of my short stories, ரசிகன், has been published in the Tamil Online magazine - சொல்வனம் (Solvanam.com).
Link: http://solvanam.com/?p=23073
Few lines:

வர்ணம் பாடி முடித்ததில் இருந்து நானும் கவனித்துக் கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்த பத்துப் பேர் ஒருவர் ஒருவராகக் கரைந்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் எழுந்து போகும் போது முறைத்துப் பார்த்தேன். ஓங்கி ஓங்கித் தாளம் போட்டேன். பாடிக் கொண்டே உச்ச ஸ்தாயியில் முகம் சுளிக்கக் கூட முயற்சி செய்தேன்.
போனவர்கள் இன்னும் வேகமாக அகன்றார்கள்.
அலுவலக நண்பர்கள் இருவர் எழுந்து ‘தம்’ அடிக்கப் போவதாகக் கை காட்டிச் சென்றார்கள். திரும்ப வரவேயில்லை. தனி ஆவர்த்தனம் நெருங்கியது. மிஞ்சி இருக்கும் நாலு புண்ணியவான்கள் அகன்று விடுவார்களோ என்ற பயத்தில் மிருதங்கத்தானைக் கண்களால் கெஞ்சினேன். அவனோ இரக்கமேயில்லாமல் ஆவர்த்தனம் தொடங்கினான். பளார், பளாரென்று காது கிழிய அவன் அடித்த அடியில் மூன்று பேர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.
எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உட்கார்ந்திருந்த ஒருவருக்காக இன்னும் முக்கால் மணி நேரம் பாட வேண்டுமா? இல்லை நிறுத்தி விட்டு வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கவா?

Tuesday, November 13, 2012

Muslim Policemen in Gujarat story - ToI could have wrong data


A couple of days back, I found a Times of India story circulating in Facebook. The story is here:
Gujarat Tops States in number of Muslim policemen.
The story says that ToI filed a RTI inquiry to the Union Home Ministry for the number of Muslim policemen in all states and their percentage as part of the total police force in each state. When they got back the numbers, they found that Gujarat actually had the best stats among all the states for which data was available.
Gujarat, according to ToI, had 47,424 policemen in total. of them 5021 were Muslims.
This story did not pass the smell test for me.
In the past few years, Narendra Modi, CM of Gujarat, has become a controversial figure. He was CM during the 2002 Gujarat riots. Then he reinvented himself as a "growth" leader. A vocal set of supporters cheer him on (such as during the Nano deal). Some journalists have responded by showing that the Gujarat "story" is not without flaws. They cite some numbers, the other side cites some numbers and it is all confusing.
The above article's focus on Muslim policemen in a police force seemed unusual to focus on. I have a hunch that Muslims are severely underrepresented in the police force (as in many other jobs) all through India. I can understand that in different states the percentage will be different. But, Gujarat was the best in representation? Not even second or third? The very state that people were arguing over? It seemed unlikely to me. So, I did some investigation of these numbers.
First, the number of Muslim policemen and the number of total policemen in each state is available in the National Crime Records Bureau (NCRB). This is a government website. If you click on Crime 2011 in the left hand bar in that website, choose Tables and Go to the Table 17.12, you will find the breakdown of Muslim, SC, ST policemen in each state in India as of 2010.
When people quote crime statistics in India, they use the NCRB data. They supply raw data that you can analyze yourself.
In other words, Times of India need not have filed an RTI query at all. The information was at a Google search away, in a government website.

Now, take a look at the numbers for Gujarat and you will immediately see that they are different from the Times numbers.
                                                     NCRB                                       ToI
Number of Total policemen          71670                                       47424
Number of Muslim policemen      3087                                         5021
The NCRB shows a 4.3% representation in Gujarat, a lot different from the 10% they have from ToI data.
Now, I used the NCRB data and tried to see for a few states, how Gujarat held up to "the best representation. The numbers are below:
State Population(2001) Muslim Population(2001) Percent in General Size of Policeforce Muslims in Policeforce Muslim Percent in Police Difference(%)
Tamil Nadu 62405679 3470647 5.56 95745 3061 3.19 -2.3
Andhra Pradesh 76210007 6986856 9.16 89404 8933 9.99 0.82
Madhya Pradesh 60348123 3841449 6.36 72505 2583 3.56 -2.80
Gujarat 50671017 4592854 9.04 71670 3087 4.30 -4.75
Haryana 21144564 1222916 5.78 50365 415 0.82 -4.95
Kerala 31841374 7863842 24.69 45003 3567 7.92 -16.7
Karnataka 52850562 6463127 12.22 74699 4796 6.42 -5.80

In other words, Gujarat is not on top, but not on bottom either. It is certainly not the best state for Muslim representation in police force; nor does that representation EXCEED the population percentage of Muslims. Tamil Nadu, Andhra and Madhya Pradesh are better and Haryana is about the same as Gujarat.
It is possible that the NCRB numbers are wrong, and the ToI numbers are right, but I doubt it. The total numbers correspond with other data such as density of policemen in the NCRB data.
ToI should explain why they focussed on this number; and why they did not just pick it up from the NCRB website.

Sunday, November 11, 2012

How Leftist Intellectuals Got It Wrong on IAC


An year and a half after the first Anna Hazare protests, I think we can reflect on how it was perceived by intellectuals.
The first thing that we understand is how wrong our famous public intellectuals were. The Hard Left completely dropped the ball on the movement. They proclaimed the supremacy of the Parliament (Constitution is supreme in India, not Parliament. Thus, Anna's rights to protest sup
erseded Parliament's sanctity). They denounced IAC as corporate stooges.
Arundhathi Roy deserves special mention as presenting some of the dumbest criticism of IAC. She called Anna Hazare as a demogogue and then without any irony, asked the media to show porn instead of covering the protests. Meanwhile she was found cheering on protesters in Egypt and Tunisia!
How true were her comments on IAC? After an year and a half, it is obvious that her accusations of them were completely false. She presented them as Trojan Horses for corporates to subvert democracy. But IAC has actually been the most effective voice against RIL, or Tata.
P.Sainath and Justice Markendaya Katju were equally wrong and clueless about the Jan Lokpal bill itself. They accused IAC of being elitist - as if they were not elites themselves.
Why did these people, who are hailed as India's foremost public intellectuals go so wrong?
One, the mediocrity that we see all around in India is common in the "intellectual" sphere also. In other words, some of these people are probably not as smart as they are made out to be. Their arguments will be dismissed out of hand in a well-informed democracy.
Second, these people and most of the Left, for some reason, hates the middle class. They think the middle class is somehow uniquely self-centered; and years of trying to push the interests of the poor has tired them out and caused them to lose perspective (I think this is the case with P.Sainath, whom I respect enormously).
A true Marxist analysis would show that the middle class is absolutely right in looking to its interests. India's middle class is huge, and therefore their concerns may actually impact the nation favorably.
Thirdly, the Left did not make any substantive analysis of the case presented by IAC. Public corruption is, indeed, one of the most important root causes for the majority of suffering in India (others are the caste system, and gender issues, both of which can be addressed only when the government is competent and trusted). I did not see any actual, substantive, arguments from the Left that this was NOT the case. There were mostly polemics, but no actual understanding of how government works.
Government incompetence and corruption affects everyone; and hurts the poor the most. This is not an issue of trains running on time. We will cover this in a separate post.
Finally, some of "opinion" in India is structured around subtle signals. More than having a consistent political world view (such as liberal, libertarian, conservative and so on), Indian opinion makers simply signal to each other and the public on what tribe they belong to. Any issue is used for these signals, than to analyze the issue itself. Arundhathi Roy was not so much commenting about IAC, or the substance of their protests - she was instead signaling her role as a member of the Hard Left, someone who worries about the poor; as someone who was "bucking the trend"; someone who thought the middle class were mostly propagandized idiots. Most of her energies had been invested in these signals than on any real world concerns.
One example is Gail Omvedt's much circulated article linking Anna Hazare with some Manuwadi party. The entire article was structured around one single item - that a nutcase Manuwadi guy was seen in Jantar Mantar during the protests. This was then used to shower self-righteous anger at the IAC movement and denounce them as casteist. The article had no merit.
Let us assume the IAC is actually casteist. Does that have any bearing on their particular protests? Their Jan Lokpal bill was not a secret. It was out there, along with the differences with the government bill.
An overarching theme of the intellectual and public response to IAC is the social distrust that spans our nation. This distrust is mostly caused by corruption. It enables a moral judgemental view of politics, than anything based on substance.