Monday, February 09, 2026

மாறும் பருவங்கள் - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை


 மாறும் பருவங்கள் - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை - டிசம்பர் 1969-ல் கலைமகளில் வெளிவந்தது 

மாறும் பருவங்கள்

வெ. ராதாகிருஷ்ணன்

சுந்தரம் கூடத்தைக் கடந்து சென்ற போது அங்கே தரையில் விரிப்பில் விட்டிருந்த குழந்தை அவரைப் பார்த்ததும் தன் பிஞ்சுக் கைகளையும் கால்களையும் உதைத்து அவருடைய கவனத்தை ஈர்த்துவிட்டது. "ஆடேடே, உன்னைத் தனியாக விட்டு விட்டார்களா?" என்று கொஞ்சியவாறு அதன் அருகில் போனார். அதன் மகிழ்ச்சி பன்மடங்காக இருக்கும் போலிருக்கிறது. பலவித ஒலிகளுடன் மோகனச் சிரிப்புப் பொங்க ஆரவாரம் செய்தது.

குழந்தையின் அந்த அழகில் சுந்தரம் லயித்துப் போய் நின்றார். "டேய், என் அறைக்குப் போவோமா?" என்று அதைத் தம் தோளில் சாய்த்துக்கொண்டு தம் அறையை நோக்கி நடந்தார்.

அவருக்குப் புல்லரித்தது. தமக்கு திருமணமாகி ஒரு வருஷத்தில் குழந்தைக்குத் தந்தையானபோதுகூட ஏற்படாத மகிழ்ச்சி, தம் பிள்ளையின் குழந்தையைப் பார்க்கும்போது அதனுடன் கொஞ்சும்போதும் ஏற்படும் அனுபவத்தின் விந்தையை எண்ணினார். மனிதனின் ஆசைகள், அவனுடைய நினைவுகள், அனுபவங்கள் எல்லாவற்றையுமே அவனுடைய பல்வேறு பருவங்கள் புதுக் கோணங்களில் வேறுபடுத்திக் காட்டுமோ?

அந்த அறையில் இப்பொழுது இரண்டு குழந்தைகள் இருந்தன - சுந்தரத்தையும் சேர்த்து. சுவரில் தொங்கும் காலண்டரில் படங்களைக் காட்டினார். புத்தகத்தைக் கையில் கொடுத்து அது இழுப்பதைப் ரசித்தார். ஏழு மாதக் குழந்தைக்குத் தாம் சொல்லுவது புரியுமா என்றுகூட யோசிக்காமல் அவர் அந்தக் குழந்தையின் தோழராகி விளையாடிக்கொண் டிருந்தார்.

"போஸ்ட்!"

தபால்காரரின் சாதாரண அழைப்புத்தான் என்றாலும், நீரில் அமிழ்ந்து குளித்துக்கொண்டிருக்கும்போது பாம்பொன்று காலைச் சுற்றி விட்டதுபோலச் சுந்தரத்துக்கு உடம்பு விதிர்த்தது. தபாலை வாங்கிக்கொண்டு அவருடைய மருமகள் சீதா உள்ளே வந்தபோது 'ரிசல்ட்டு'க்காகத் தவிக்கும் மாணவனின் நிலையில் இருந்தார் சுந்தரம்.

"யாருக்குக் கடிதம்?" என்று அவர் சீதாவிடம் வினவியபோது தொண்டையில் ஈரம் இல்லை.

"எங்க அம்மாவிடமிருந்து!" என்று பெருமை வழியும் குரலில், அடங்கிய உவகையுடன் கூறியவாறு அவள் உள்ளே போனாள்.

சுந்தரம் பெருமூச்சு விட்டார். மெதுவாகப் படபடப்புக் குறைந்தது.

ஒவ்வொரு தடவையும் 'போஸ்ட்' என்று தபால்காரன் குரல் கொடுக்கும்போது, வந்திருக்கும் கடிதம் பார்வதியிடமிருந்துதானோ என்று பதறுவதும், சில நாட்களுக்கு முன்பு வரை இதே பார்வதியிடமிருந்து கடிதம் வராதா என்று ஏங்கியதும், இப்பொழுது வேறு விதமாக நினைக்குமாறு தம் மனநிலை மாறிப் போனதும்......

இரண்டு வாரங்களுக்கு முன்புகூட அவரிடம் அந்தத் தீவிர எண்ணம் குடிகொண்டிருந்தது. தம்மைச் சுற்றியிருந்த தனிமையின் பிடியிலிருந்து விடுபடவும் மாறுபட்ட சூழ்நிலையில் தம்மை ஆளாக்கிக்கொள்ளவும் மேற்கொண்ட ஒரு சுற்றுப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பியதிலிருந்து அவருக்குக் குறைந்துகொண்டிருந்த பிரச்சினை, அந்தப் பிரயாணத்தில் தம் முன்னாள் சிநேகிதி பார்வதியைச் சந்தித்ததனால் ஏற்பட்டுவிட்ட புதிய எண்ணங்களின் வேகத்தை, எப்படித் தம் மகனிடம் எடுத்துக் கூறுவது என்றும், அப்படித் தைரியத்துடன் கூறும்போது ரமேஷின் போக்கு எப்படி இருக்கும், 'ஐயோ அப்பா, இத்தனை வயதுக்கும் மேலா?' என்று குத்தலாக ஏதாவது சொல்லிவிடுவானே என்று கற்பனை பண்ணி, அந்தக் கற்பனையை நினைந்தே மிரண்டு போய்த் தவிப்புமாகத்தான் இருந்தார். ஆனால் எப்படியும் சில நாட்களுக்குள் இந்தத் தவிப்புக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முடிவைத் தெரிவித்ததும், தான்...

‘மூன்று முடிச்சு’ப் போட்ட நாளிலிருந்து பழையதை மறந்து, மனைவிக்குத் துரோகம் எண்ணக்கூடாது என்ற தார்மிக எண்ணத்தில் அவளுடன் தன் மனத்திலும் அவள் மனத்திலும் குறை ஏற்படாதபடி இருபத்தைந்து வருஷங்கள் அந்நியோந்நியமாக வாழ்ந்தார். ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தார்கள். அந்தப் பிள்ளை சிரித்துத் தவழ்ந்து எழுந்து ஓடி விளையாடியதையும், பள்ளிக்கூடம் கல்லூரி என்று பருவம் எய்தியதையும் கண்டு களித்து அவனுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்று அவரை அரித்துக்கொண்டிருந்தபோது திடீரென ‘லிவர் கம்ப்ளெயிண்ட்’ என்று படுக்கையில் விழ, அவள் பிறகு எழுந்திருக்கவே இல்லை.

இவ்வாறு தமது வாழ்க்கையில் ஓர் அத்தியாயம் திடீரென்று முடிந்துவிட்டதனால் தாம் வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்துச் சலித்துப் போய்விட்டதாக அவர் முடிவு கட்டிய கட்டத்தில்தான், சுந்தரம் பார்வதியை - தாம் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் இவளைத்தான் செய்துகொள்ள வேண்டும் என்ற ரீதியில் உணர்ச்சிகளை இளமைப் பருவத்தில் கிளறிவிட்டுக்கொண்டிருந்த பெண்ணைச் சந்திக்க நேர்ந்த சம்பவம் விபத்துப் போல அமைந்தது.

அவருடைய மனைவி மீனாட்சி கண்ணை மூடிய பிறகு வீட்டைக் கவனித்துக்கொள்ள ஒரு பெண் வேண்டும் என்ற அவசியத்தில் எடுத்த திருமணம் ஒன்றைத் தவிர்த்தவுடன் தம் கடமையில் ஒன்றை நிறைவேற்றிய திருப்தி ஏற்பட்டது அவருக்கு. எனினும் மகனும் மருமகளும் இருந்தும் தாம் தனித்து விடப்பட்டது போன்ற மருட்சியில் அவர் காலம் கழித்துவந்தார். மூன்று பேர்களே இருந்த அந்த வீட்டில் மருமகளுக்கு - ஏன், ஒருவருக்குமே - அதிக வேலை இருப்பதில்லை. ரமேஷுக்குக் காலேஜில் லெக்சரர் வேலை. ஒன்பதரைக்கு அவன் காலேஜுக்குப் புறப்பட்டுப் போன பிறகு ‘ரிடையர்டு’ வாழ்க்கையை நடத்தி வரும் சுந்தரம் குளித்துச் சாப்பிட்டுவிட்டுத் தம் அறையில் ஒதுங்கும்போது மணி பத்தரைதான் ஆகியிருக்கும். அவருக்கு இலக்கிய ரசனை உண்டு.

அதனாலேயே அவர் தற்காலப் பத்திரிகைகளையும் நவீனங்களையும் படிப்பதில்லை. பிற்பகலில் காபி கொடுக்க வரும்போதுதான் இந்த வீட்டில் மற்றொரு ஜீவனும் இருக்கிறது என்ற நினைப்பு வரும். ரமேஷ் மாலையில் வீடு வந்தபிறகு சிறிது சந்தடி இருக்கும். ஆனால் இவர் அறையில் அல்ல. அந்தப் பெரிய வீட்டின் ஏதோ ஓர் அறையில் ரேடியோவின் இசையும் கலகலவென்ற சிரிப்பொலியும் கலந்து குழைந்து கேட்கும். அவர்களுடைய களிப்பில் தம் தனிமையைச் சற்றுத்தான் மறக்க முடியும். எத்தனையோ நாட்கள் இரவு பத்து மணிக்கும் மேல் ஊரடங்கிய பொழுதில் அவர் வெளியே கிளம்புவார். ‘நிம்மதியின்றி’ என்ற சொல்லுக்கு முழுப்பொருளாக அவர் வாழ்க்கை இருந்தது.

தன் தந்தையின் மனநிலையை அறிந்து கொண்டவன் போல அவருக்கு இரங்கி, அந்த இரக்கத்தையே அவர் தவறுகாலக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற பயத்தில் சௌஜன்யமாக உரையாடலில் ஒரு நாள் ஈடுபட்டிருந்த போது ரமேஷ் சொன்னான்: “அப்பா, கொஞ்ச நாள் கோடைக்கானல் ஊட்டி என்று போய்விட்டு வாருங்களேன்!”

“ஏண்டா, என்னைப் பார்த்தால் அங்கெல்லாம் போகவேண்டும் என்று இருப்பது போல் தெரிகிறதா?” என்றார் சுந்தரம்.

“அதில்லை அப்பா, உங்கள் மனசு சரியில்லை என்று தோன்றுகிறது. உங்கள் மனசிலே ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள்!” என்று ரமேஷ் கலங்கினான்.

“போடா, போ! எனக்கு ஏதுடா குறை? நீயும் சீதாவும் சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்குச் சந்தோஷமும் நிம்மதியும்” என்று ஒரு தகப்பனுக்கு இருக்க வேண்டிய மனநிறைவுடன் அவர் கூறினாலும் வார்த்தைகள் மேலும் வெளிப்பட்டன; “இருந்தாலும் என் மனசு சரியாகத்தான் இல்லை. எனக்குள் என்னைச் சுற்றி ஒரு வெறுமை சூழ்ந்திருப்பது போல உணர்கிறேன். நம் ஊரிலே எத்தனையோ ‘ரிடையர்டு’ ஆசாமிகள் இருக்கிறார்கள்: அவர்கள் எப்படியோ பூஜை, புராணம் என்று பொழுதைக் கழித்து, வயதானபிறகு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதிக்குள் தங்களை நிர்ப்பந்தப்படுத்திக்கொண்டு அந்த வாழ்க்கையில் நிம்மதி பெறுகிறார்கள்; அல்லது நிம்மதி அடைந்துவிட்டதாகக் கற்பனையில் மிதக்கிறார்கள். ஆனால் எனக்கு என்னவோ அதுபோன்ற வாழ்க்கையில் லயிப்பு விழவில்லை. ஒருவேளை என் தவிப்புக்கெல்லாம் அந்தக் கட்டுப்பாட்டுக்குள் என் மனம் சிக்காததுதான் காரணமோ என்னவோ? ஓ! உன்னிடம் நான் ஏதேதோ பேசுகிறேன்; இல்லையா? எதுவானாலும் உன் ஆலோசனைப்படியே கொஞ்ச நாள் இப்படிச் சுற்றிவிட்டு வருகிறேனே!”

சுந்தரம் கோடைக்கானலுக்கும் ஊட்டிக்கும் சென்றார். க்ஷேத்திரங்களைத் தரிசித்தார். ஒரு கிராமத்தில் ஒரு சாமியார் பக்தர்களுக்குத் தம் மகிமையினால் கைக்கடிகாரமும் மோதிரமும் பிற பொருள்களும் வரவழைத்துக் கொடுப்பதாகக் கேள்வியுற்றுக் குதர்க்க எண்ணங்களும் அவநம்பிக்கையுடன் கூடிய அவலும் உந்த, ஒருவித அலட்சியத்துடன் அந்தக் ‘கலியுக வரதனைப்’ பார்க்கும் எண்ணத்தில் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸியில் இருபத்தைந்து மைல்களுக்கு அப்பாலுள்ள அந்தச் சாமியாரின் முகாமுக்குச் சென்றபோதுதான் அந்த ‘விபத்து’ ஏற்பட்டது.

அந்தி இருள் கவிந்துகொண்டு இருந்தது. இருட்டுவதற்கு முன் அந்தக் கிராமத்தை அடைந்துவிட்டால் தேவலை என்று திட்டம் போட்டுக்கொண்டு இருந்தபோது, சரியாகச் செப்பனிடாத சாலையில் ஓடியதன் விளைவோ என்னவோ, டயர் வெடித்து டாக்ஸி நின்றுவிட்டது. ஏதாவது கார் வந்தால் உதவி கேட்கலாம் என்று எதிர் பார்த்துக்கொண்டிருந்த பொழுதுதான் கலைமகள் - பக்கம் 628

அந்த நீலநிறப் ‘பியட்’ கார் வந்தது. கையை ஆட்டியதும் வேகம் குறைக்கப்பட்டு நின்றது.

“என்ன ஆச்சு? ஆக்சிடென்டா?” என்று காருக்குள்ளிருந்து குரல் கேட்டது. அந்தக் குரல் ஓர் அதிர்ச்சியைப் பாய்ச்சியது சுந்தரத்துக்கு. சட்டென்று கார்ப்பக்கம் சென்று உள்ளே நோக்கினார். நினைவுகள் கொப்புளங்களாக மேலெழும்பி வெடித்தன.

“இது பார்வதியா? ஓ, இப்படித் திரும்பிப் பார்க்கும்படி அகல விரிந்த நயனங்கள், நாசியின் கூர்மை.”

“நீ...நீ...நீ...நீ...ங்க...ள் பார்வதி இல்லை?” என்று அவர் நெருங்கிக் கேட்ட போதே உடம்பெல்லாம் பதறியவளாக அந்த மாதும் சட்டென்று காரிலிருந்து வெளிப்பட்டு, “நீங்களா! நிஜந்தானா இது?” என்று உவகையும் திகைப்பும் நெஞ்சை அடைக்கத் திணறினாள்.

பார்வதியின் காரில் இப்பொழுது சுந்தரம் உட்கார்ந்திருந்தார். அவர் வந்த டாக்ஸி ஸ்டேஷனை நோக்கித் திரும்பிச் சென்றது. இருபத்தைந்து வருஷங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமற்போன அதிசயத்தில் மூழ்கி விட்டவர்கள் போல அவர்கள் மெய்ம்மறந்திருந்தார்கள். பிறகு இருவருக்குமே ஏற்பட்ட ஆவலில் இருவருமே பேச ஆரம்பித்தார்கள்.

ஒரு வளைவில் ‘கைலாசபுரம்’ என்ற ஊர்ப் பலகையின் மீது காரின் வெளிச்சம் பட்டு மறைந்தது. மெயின் ரோட்டைத் தாண்டிப் பிரிந்து செல்லும் பிறிதொரு பாதையில் பார்வதி ஸ்டியரிங்கை லாகவமாக ஓடித்துத் திருப்பினாள். கடைத் தெருக்கள், ரத வீதி என்று ஒரு சிறிய கிராமமே தெரிந்தது.

நவநாகரிகமான சிறிய பங்களாவுக்குள் நுழைந்து போர்டிகோவில் போய் வண்டி நின்றது.

“நாளை அந்தச் சாமியாரைப் போய்ப் பார்த்தால் போதாதா உங்களுக்கு? அவர் இருக்கும் இடம் இன்னும் ஆறு மைல் தொலைவில் இருக்கிறது” என்று கேட்டவாறு காரின் கதவைத் தள்ளிக்கொண்டு இறங்கினாள் பார்வதி.

“தேவை இல்லை. எனக்கு இனிமேல் அந்தச் சாமியாரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான்தான் ஒரு பெண் சாமியாரைச் சந்தித்துவிட்டேனே!” என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சுந்தரம் சொன்னதும் அவள் சிரித்தாள்.

இவர்களுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு உள்ளேயிருந்து ஒரு பெண் ஓடிவந்து பார்வதியின் கையிலிருந்து பையையும் ஸ்டெதாஸ் கோப்பையும் வாங்கிக்கொண்டு மறைந்தாள்.

“இந்தப் பெண்..?” என்ற கேள்வி முகத்தில் பிரதிபலித்த சுந்தரம் அவளை நோக்கியபோது, பார்வதியின் முகத்தில் புன்னகை நெளிந்தது. “இவள் என்னுடைய பெண்!” என்றாள்.

சுந்தரம் ஒரு கணம் விழித்தார். அதை மிகவும் ரசித்தவளாக, “இவள் மட்டுமல்ல; இங்கு நிறையக் குழந்தைகள் இருக்கிறார்கள் எனக்கு!” என்று புதிர் போட்டாள் பார்வதி. அவள் விளையாடுகிறாள் என்று புரிந்து கொண்டார் சுந்தரம்.

“அப்படியா? இது உண்மையானால் சந்திரசேகருக்குப் புகார்க் கடிதம் எழுதவேண்டியது தான்!”

“அது யார் சந்திரசேகர்?”

“குடும்பக் கட்டுப்பாட்டு மந்திரி!”

பார்வதிக்குச் சிரிப்புப் பீரிட்டது. “உங்கள் குறும்பும தமாஷும் மாறவே இல்லை!”

“ஆமாம், பார்வதி. உன்னைச் சந்தித்த பிறகு எனக்கு ஒரு நண்பர் கிடைத்துவிட்டது போல உற்சாகம் பொங்குகிறது.”

பார்வதி மெளனமாக இருந்தாள். பிறகு மெல்லிய குரலில், “ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்குமே உங்களைப் போலத்தான் தோன்றுகிறது. நான் இப்படிச் சிரித்துப் பல வருஷங்களாகின்றன. இப்படிச் சொல்கிறதனாலேயே நான் ரொம்ப விரக்தியடைந்த போயிருக்கேன்னு அவசரப்பட்டு நினைக்க வேண்டாம். அந்தத் கடமையிலே என்னை மறந்ததுபோல நானும் என்னுடைய புதிய வாழ்க்கையிலே உங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பங்கள் குறைந்துதான் போச்சு. என்னைச் சுற்றி ஒரு சந்தோஷமான உலகத்தைத்தான் நான் சிருஷ்டி செய்துகொண்டிருக்கிறேன். இருந்தாலும் இன்று உங்களைப் பார்த்ததும் எனக்குக் கூட ஒரு சுதந்திரம் கிடைத்தது போலத்தான் தோன்றுகிறது. என்னுடன் சில நாட்கள் தங்கியிருப்பதில் தடை ஏதும் இல்லையே உங்களுக்கு?”

பார்வதியை நினைக்கவும் அவளுடைய மன வளர்ச்சியை ஆராயவும் சுந்தரத்துக்கு மலைப்பாக இருந்தது. சந்தர்ப்பங்கள் மனிதனை உருவாக்குகின்றன என்று சொல்லுகிறார்களே, நிதர்சனமாக இதோ பார்வதி. அவர் வேறொரு பெண்ணைப் பெற்றவர்களின் நிர்ப்பந்தத்தினால் மணந்து கொண்டதும் நில நடுக்கம்போல வந்த அந்த ஏமாற்றத்துக்கு நிவாரணம் காண்பது போல அவள் தீவிரமாக மேற்படிப்பில் தன் கவனத்தைச் செலுத்தியதும், டாக்டர் பட்டம் பெற்ற ஒரு வருஷத்துக்குள் சொத்துக்களின் முழுப் பொறுப்பையும் அவள் மீது சுமத்திவிட்டு அவளுடைய தந்தை காலமானதும், ஏற்கனவே தாயை இழந்திருந்த பார்வதி அநாதை என்ற சொல்லுக்கு முற்றும் பொருந்தியவளாகத் திகைத்தபோது, கைலாசபுரத்தின் மருத்துவ மனையில் சேருவதற்கான அழைப்பு வந்தது. தன் வீட்டு கணக்குப்பிள்ளையிடமே சொத்துக்களைக் கவனிக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டவள், வருஷத்துக்கு இருமுறை ‘மண் பாச’த்துக்காக ஊருக்கு வருவாள். கடைசியில் அவள் எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக்கொண்டு கைலாசபுரத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாள்.

அந்தக் கிராமத்து வாழ்க்கை ஒரு புதிய யுகத்தை அவளிடம் தோற்றுவித்தது. சுதந்திரம் அடைந்து பல வருஷங்களாகியும் அந்தத் தோட்டத்து ஜனங்களிடம் சுதந்திரத்தின் பலன் ஒன்றுமே ஏற்படாமலிருந்த இழிநிலையைக் கண்டு உள்ளம் பதைக்க வேண்டியிருந்தது. அந்த வட்டாரத்தில் பத்து மைல்களுக்கு ஒரு வைத்திய உதவியும் கிடைக்கப் பெறாத மக்களுக்கு மனத்தை நெகிழவிட்டு நிற்கும்போது அவள் முன் புது உலகம் - புதிய நோக்குடன் கூடிய வாழ்க்கை - விரிந்தது. எந்த நேரத்திலும் கிடைக்கும் வைத்திய உதவியும் அவளுடைய அன்பான விசாரிப்பும்…


மாறும் பருவங்கள் (பக்கம் 629)

களும் அவளை 'டாக்டர்ம்மா' என்ற செல்லப் பெயருக்கு ஆளாக்கின.

அந்த மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நிலை பார்வதியின் வாழ்க்கை நோக்கத்தில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தது. அவள் அந்த ஊரின் அம்சமானாள்.

தேங்கிக் கிடந்த அவளுடைய சொத்தின் சில பகுதிகள் அந்த நாட்டுப்புறத்தின் நல்வாழ்வுக்குப் பயன்பட்டது. மண் புரண்டது; மனம் திருந்தியது. உதவி என்று சொல்லி அந்த ஜனங்களைப் பொறுப்பற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் அவள் ஆக்கிவிடவில்லை. உதவியின் பயனையும் உழைப்பின் பரிசையும் அவர்களை அனுபவிக்க விட்டாள். பிறகு, கேட்கு முன்னரே, அவர்கள் கடன்பட்டிருந்த தொகையைப் பரூவில்லாத தவணைகளில் திருப்பிக் கொடுத்தனர். ஏமாற்றத் தெரியாது, ஆனால் இதுவரை ஏமாற்றப்பட்ட, அந்த உழைப்பாளிகளுக்குப் பார்வதி தெய்வமாக இருந்தாள்.

சேவையில் கிடைத்த இன்பத்தில் அவள் ஆழ்ந்திருந்தாள்.

விளையாட்டின் மும்முரத்தில் குழந்தை தன்னை மறந்துவிடுவது போலத்தான் சுந்தரம் அங்கு இருபது நாளுக்குமேல் தங்கிவிட்டார்.

முன் மயிர்கள் நரைக்க ஆரம்பித்து, முகத்தில் இளமை கடந்துவிட்ட சுவடுகள் பளிச்சென்று தெரிந்தும், பார்வதியின் பேச்சு ஏற்படுத்திய ஆசுவாசமும் சிரிப்புக் கொடுத்த குளுமையும் பழைய விசுவாசமும் அன்பும் மாறாமல் தம்மிடம் அவள் காட்டும் பரிவும் சுந்தரத்தை அலைக்கழித்தன. வெறிச்சென்று போய்விட்ட தம் வாழ்க்கைக்கு, கலகலவென்று இருக்கத் துடித்த தம் போக்குக்கு ஒரு துணை. 'என்னுடன் பேசிக் கழிக்கவும் என் எண்ணங்களில் பங்கு பெறவும் இவள் சம்மதிப்பாளா?'

சபலம் பேயாக ஆடியது. அந்தப் 'பேய்' ஒரு நாள் பேச ஆரம்பித்தபோது பார்வதிக்கு அதிர்ச்சிக்குப் பதில் வியப்பே ஏற்பட்டது.

'இது உண்மையாக இருக்க முடியுமா? இருபத்தைந்து வருஷங்களாக மனைவியுடன் வாழ்ந்துவிட்டு வீட்டுக்கு மருமகன் வந்த பிறகும், வாழ்க்கையின் பிடிப்புகள் தாளும் இந்தப் பருவத்திலும் சபலங்கள் ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்க முடியுமா?'

பார்வதிக்கு 'அந்த நாட்கள்' நிழலாடின. அவளுடைய வாழ்க்கை இந்த ஆடவனுடன் பிணைந்திருந்தால் அது எவ்வளவு இன்பமாகவும் ரம்மியமாகவும் இருந்திருக்கும்! இனிமையான கனவுகள் எல்லாம் வெறும் கனவாகவே முடிந்தபோது அவள் இந்த இடியைத் தாங்கிக்கொண்டு 'அந்த நாட்களை' மறக்கத் தனது வாழ்க்கையின் ரசனையையும் போக்கையுமே அல்லவா மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது?

அவள் வியப்புடன் சுந்தரத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தமக்குச் சாதகமாகக் கிரகித்துக்கொண்டவர் போல அவர் மேலும் பேசினார். "என்னுடைய பேச்சு உனக்குக் குழப்பத்தைக் கொடுத்திருக்கும். ஆனால் என் மனசில் இருக்கிற வேதனையை எப்படிச் சொல்வது என்றுதான் யோசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் அனுபவிப்பது ஒருவித மன உளைச்சல். 'வாழ்க்கை இப்படித்தான்' என்ற விரக்தியுடன் போராட என்னால் முடியவில்லை. என்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதே. இது தனிப்பட்ட மனிதனின் தவிப்பு என்று கருதினால் உனக்கு என்மிடம் இரக்கம் ஏற்படும். உன்னைப் பார்த்த பிறகு இங்கே உன்னுடன் கழித்த சில நாட்கள் என் பிரச்னையுடன் உன்னை அணுகச் சிறிது தைரியத்தைக் கொடுத்திருக்கின்றன. உன்னிடம் வெளிப்படையாகக் கேட்பதில் எனக்கு வெட்கமில்லைதான்" என்று வெளிப்படையாகச் சுந்தரம் அவளுடைய துணையை கேட்டார்.

பார்வதிக்குப் படபடவென்று வந்தது. ஆற்றுமணல் மேலுக்கு வறண்டிருந்தாலும் கொஞ்சம் கிளறினால் ஈரம் கசிவதில்லையா? சுந்தரம் கோடிட்டுக் காட்டிய எண்ணப் போக்கு அவள் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. நைந்து போன பழைய கனவுகளும் ஆசைகளும் விழித்துக் கொண்டன. ஒரு காலத்தில் இதே கனவுகளையும் ஆசைகளையும் அர்த்தமில்லாதவை ஆக்கிச் செய்துவிட்ட அவரது செய்கை அவளுக்கு அந்தச் சமயத்தில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் மூட்டியிருந்தாலும் அதில் அர்த்தம்...

கலைமகள் - 630

பக்கத்தில் சில நியாயங்கள் இருப்பதாகவே அவள் சமாதானம் கொண்டிருந்தாள். அவளும் அவருடைய விருப்பத்துக்காகத் தவம் கிடந்தவள்போல அவருடைய இறைஞ்சுதலுக்கு இப்போது மௌனமாகச் சம்மதம் தந்தாள்.

இத்தனை வயதுக்குமேல் ஒருவருடன் ஒருவர் சேருவது சமூகத்தின் கண்ணுக்குக் கேலிக்குரியதாகத் தோன்றினாலும் அதைத் தாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்றும், அவரவர்களின் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுப்பதே அந்த முடிவுக்கு அடித்தளத்தில் அமைந்த காரணம் என்றும் அவர்கள் தங்களைச் சமாதானப்படுத்திக்கொண்டு வாழ்க்கையின் புதிய திருப்பத்துக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டனர்.

இந்த ஆதாரமான காரணங்களைச் சுந்தரம் ரமேஷுக்கு எடுத்துரைத்து அவன் சம்மதம் பெற்றுப் பார்வதியுடன் எஞ்சிய நாட்களைக் கழிக்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார். ஆனால் பிரசவத்திற்குப் பிறந்தகம் போயிருந்த சீதாவை நல்ல நாள் பார்த்து ரமேஷ் அழைத்து வந்தபோது, மருமகளின் இடுப்பில் சவாரி செய்துகொண்டிருந்த தங்க விக்கிரகம் போன்ற அவருடைய பேரன் தமது திட்டத்தை மாற்றி அமைத்துவிடுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

அடுத்த வீட்டுச் சங்கரியம்மாள் குழந்தையை வாங்கிக்கொண்டவள் அதன் பிஞ்சுக் கைகளில் ஒரு ரூபாய் நோட்டைத் திணித்தவாறு, “அப்படியே தாத்தாவை உரிச்சு வைச்சிருக்கு!” என்று கூறியதும் அவருக்குச் சிலிர்த்தது. தம்முடைய பழைய போட்டோவில் தம்மைப் பார்க்கும்போது ஏற்படும் எண்ண அலைகள் தம் சாயலொத்த பேரனைப் பார்த்தபோது ஏற்பட்டன. அந்தச் செழுமையான வளர்ச்சியும் பொக்கைவாய்ச் சிரிப்பும் அணைக்கும்போது ஏற்படும் சுகானுபவமும் புது உணர்ச்சி வெள்ளத்தைப் பெருக்கெடுத்தோடச் செய்தன. அந்த வெள்ள ஓட்டத்தில் அவருடைய முடிவு அலைக்கழிக்கப்பட்டுத் தவித்தது. ‘இன்று பார்வதியிடமிருந்து கடிதம் வந்துவிடுமோ?’ என்று தினமும் பதறிக்கொண்டிருந்தார்.

குழந்தையைப் பிரிந்து இப்போது அவரால் எங்கும் போக முடியாததுபோலத் தோன்றியது. தம்மைச் சூழ்ந்திருந்த வெறுமை உணர்ச்சி என்னும் மேகம் விலகுவது போன்ற தெளிவான எண்ணமும் தோன்றலாயிற்று. ‘பார்வதியிடமிருந்து கடிதம் வருவதற்குள் நாம் ஒரு கடிதம் அவளுக்கு எழுதிவிட்டால் என்ன?’

‘ஓ! இந்தத் தடவையும் நான்தான் அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கிறேனோ?’ என்று ஒரு கணம் மனம் உறுத்தத் திகைத்தார்.

“ஒவ்வொரு பருவத்திலும் அதற்கு ஏற்ற ஆசைகள்தாம் தோன்ற வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. நான் மீறப் பார்த்தேன். வாழ்க்கை முழுவதுமே அன்பு செலுத்துவதாகத்தான் இருக்கிறது. ஆனால் இது அந்த அந்தப் பருவத்துக்குத் தகுந்தாற்போல உருவெடுக்கிறது. இப்படி இல்லையென்றால் வாழ்க்கை ஒரு நியதியுள்ளதாக இருக்காது. எந்த முடிவோடு நான் அங்கிருந்து புறப்பட்டேனோ அதை இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது எனக்கு அவமானமாக இல்லைதான். ஆனால் அதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. பல வருஷங்களுக்குப் பிறகு ஏற்பட்ட சந்திப்பில் மீண்டும் உனக்கு நம்பிக்கையை ஊட்டிவிட்டு, நடந்துகொண்டதற்கு என்னை மன்னித்துவிடு, பார்வதி...”

“போஸ்ட்!” — அவர் எழுத்துத் தடைப்பட்டது.

மாலை நேரத்துத் தபால் வரும் நேரம் ஆகிவிட்டதா என்ன? சுந்தரம் எழுந்து போய்க் கடிதத்தை வாங்கினார். உடல் லேசாக அதிர்ந்தது. பார்வதியின் கையெழுத்து. பதற்றத்துடன் படிக்கத் துவங்கியதும் அவருடைய மனத்தில் ஊற்றெடுத்தது நிம்மதி யாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் இதழ்களில் மெல்லிய நகை மலர முடியுமா?

“நிர்மலமான நீர்த் தேக்கத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டதும் அலைகள் எழும்புவது எவ்வளவு இயற்கையோ அதுபோலவே அந்த அலைகள் சில விநாடிகளில் அடங்கிவிடுவதும் இயற்கைதான். புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும்படி நீங்கள் இறைஞ்சியபோது ஒருவித வைராக்கியத்துடன் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நான் சலனத்துக்கு ஆளானது உண்மைதான். என்னை நம்பி இருக்கும் இந்தச் சுற்றுப்புறத்து ஜனங்களினாலும், இவர்களுடன் ஒன்றிப்போய்விட்ட என் நிலையினாலும் நம் புதிய வாழ்க்கை அதிகம் பாதிக்கப்படும் என்றாலும் நான் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டேன்: ‘இந்தப் புதிய அத்தியாயம் இந்தக் கட்டத்தில் அவசியந்தானா?’ அது தவறு என்பதனால் அல்ல; பொருத்தமற்றதாக இருப்பதனால்தான் இந்தக் கேள்வி எழுந்தது. என் தவத்தை நான் ஏன் கலைத்துக்கொள்ள வேண்டும்? நம் சந்திப்பு உயிர்த்துடிப்புள்ளதுதான். ஆனால் அதற்கு முக்கியத்துவமும் இல்லை. ஒரு தொடர்கதையின் கடைசி அத்தியாயம் வந்துதான் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கும்போது புது அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைத்தால் அந்தக் கதை எவ்வளவு சுவாரசியமற்றதாக ஆகிவிடும்!”

“ஆமாம். கடைசி அத்தியாயம்தான்!” என்று சுந்தரம் முணுமுணுத்தார். ‘இந்தத் தடவை அவள் என்னை நிராகரித்துவிட்டதான நிம்மதியாவது அவளுக்கு இருக்கட்டும்!’

தாம் எழுதியிருந்த கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். அவர் மனம் இப்பொழுது லேசாக இருந்தது: ஜன்னல் வழியாகத் தெரியும் வானத்தைப் போல நிர்மலமாக இருந்தது.

ஹாலில் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. விரைந்து போய்க் குழந்தையை, அதன் தாயை முந்திக்கொண்டு எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறார். அதன் அழுகையைப் பூச்சிரிப்பாக மாற்ற அவரும் குழந்தையாக மாறுகிறார்.

**************************************************************************


துணை ஒன்று வேண்டும் - வெ.ராதாகிருஷ்ணன் சிறுகதை


 ஜனவரி 1964-ம் வருடம் கலைமகள் இதழில் என் தந்தை திரு.வெ.ராதாகிருஷ்ணன் எழுதி வெளியான சிறுகதை "துணை ஒன்று வேண்டும்".

பூத்தொட்டியில் கனகாம்பரம் ஆரஞ்சு நிறத்தில் பூத்துச் சொரிந்துகொண்டிருந்தது. இரண்டு தடவைகள் சாரதா ரோஜாப் பதியன் கொண்டு வைத்துப் பார்த்தாள். ஊஹூம், அது வளர மறுத்துவிட்டது. ஆனால் இரண்டொரு விதைகளைப் போட்டுவிட்டு வெகு அலட்சியத்துடன் இருந்தபோது இந்தக் கனகாம்பரம் அவளை நையாண்டி செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தில் எவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்டது! கனகாம்பரம் என்றால் அவளுக்கு விருப்பந்தான். கவர்ச்சி மட்டும் இருந்து, மணம் மருந்துக்குக் கூட இல்லாத அந்த மலரினிடம் அவளுக்கு எப்படிப் பிரேமை ஏற்பட்டது என்பது அவளுக்கே ஒரு புதிர். எந்த விதத்திலாவது கனகாம்பரத்துக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கிறதோ? மணம் இல்லாத மலரைப் போல அவள் வாழ்க்கையும்....


வெள்ளை ஸில்க் புடவையும் அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்துகொண்டு, கருநாகப் பிணையல் போலத் தொங்கும் கூந்தலில், அந்த இடத்தில் வைத்தால் தான் பொருத்தம் என்று சொல்லும்படி கனகாம்பரப் பூச்சரத்தைச் செருகிக்கொண்டு கையில் புத்தகத்துடன் பத்து மணிக்குச் சாரதா பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போது....


"டீச்சர், டீச்சர், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு எங்க மாமா சொன்னார், டீச்சர். கறுப்பா இருக்கிற தலையிலே கனகாம்பரம், பாம்பு வாயிலே மாணிக்கம் மின்னுகிற மாதிரி சிவப்பா, அழகா....!"


தான் பார்த்திராத அந்தச் சிறுமியின் மாமாவின்மீதும் சிறுமியிடமும் கோபம் பொங்குகிறது சாரதாவுக்கு. ஆனால் அடக்கிக்கொண்டு, "ஏய் இதோ பார்; இனிமேல் இந்தமாதிரி வந்து ஒன்றும் சொல்லக்கூடாது; புரிந்ததா?" என்று புன்னகையுடன் கண்டித்தாள். தினமும் கனகாம்பரத்தைக் கூந்தலில் செருகிக்கொள்ளும்போது அந்தச் சிறுமியின் வார்த்தைகள் நினைவில் நெருடும்; சில சமயங்களில் அந்த வார்த்தைகள் இதமாக இதயத்தின் ஏதோ ஒரு பகுதியை வருடுவதுபோல, அவளுள் ஒரு கிளர்ச்சியை எழுப்பும். 'அந்தச் சிறுமியின் மாமா யாராக இருக்கும்?' என்று மனத்தைச் சில நாட்களுக்குத் தனிமையில் ஓட்டிப் பார்த்தாள். அந்த ஊருக்கு அவள் வந்து ஒன்பது மாதங்களே அப்பொழுது ஆகியிருந்தன. மனிதர்கள் இன்னும் பழக்கமாகவில்லை.


பிறகு ஒரு நாள் அந்த நிகழ்ச்சியையும் சிறுமியின் வார்த்தைகளையும் மறந்துவிட்ட நிலையில் அந்த மனிதரை எதிர்பாராத விதமாகத் தெரிந்துகொள்ள நேர்ந்தது. அப்புறம் எதிர்ப்படும் போதெல்லாம் அவர் தைரியமாகப் புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டு மேலே செல்லத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவள் சட்டென்று மறுபக்கம் கழுத்தை ஒடித்துத் திருப்பிக் கொண்டு விடுவாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவரைக் கண்டதும் அவள் இதழ்களிலும் குறுநகை நிழலாட ஆரம்பித்தது. ஆமாம், தினமும் தன்னைப் பார்த்து குசலம் விசாரிப்பதுபோல நடந்துகொள்ளும்போது எப்படி ஊமையைப் போல இருக்க முடியும்? அவர் தன்னைக் கடந்து சென்ற பிறகும் தன் கூந்தலின் பின்பக்கத்தில் சூட்டிThis appears to be a page from a Tamil literary magazine (likely Kalaimagal, as indicated at the top). The text describes a poignant moment of reflection for a character named Saradha, followed by a dialogue between her and a man named Sundaram.

Here is the transcription of the Tamil text:


கலைமகள் (பக்கம் 40)

யிருந்த கனகாம்பரக் கொத்தை யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு நெஞ்சில் குறுகுறுக்கும்.

பூக்களைப் பறித்துக்கொண்டு சாரதா உள்ளே வந்தாள். காபியைக் கலந்தாள். ஒரு தம்ளருக்குச் சரியாக இருந்தது. அந்த வீட்டில் தயாராகும் காபியும் சாப்பாடும் ஓர் ஆணுக்குத் தேவையானவைதாமே? அந்த ஒருமையின் குனிய வெளியைத் தாண்டி இருக்கும் உலகத்தின் சுகானுபவத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை அவள் நழுவ விட்டுவிட்டாளோ?

நடு அறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு காபியைக் குடிப்பதற்காகத் தம்ளரை வாயின் அருகில் கொண்டு போகும்போது அவள் பார்வை அறையின் வசதியான ஒரு மூலையில் உத்தரத்தின் இடுக்கில் இருந்த குருவிக் கூட்டின் மீது பதிந்தது. ஜோடிக் குருவிகளில் ஒன்று பறந்துவந்து கூட்டினுள்ளே கிடந்த குஞ்சுகளுக்குத் தன் அலகினால் உணவு ஊட்ட அந்தச் சின்னஞ்சிறு குஞ்சுகள் தம் சிவந்த வாயைத் திறந்தவண்ணம் மெல்லிய சப்தத்தில் இரைச்சலிட்டுக்கொண்டிருந்தன. சாரதா அந்தக் காட்சியில் லயித்தவளாக மனம் எங்கோ இழுக்க அசைவற்று உட்கார்ந்திருந்தாள். அந்த வீடே திடீரென்று நிசப்தத்தில் மூழ்கிவிட்டது போல் தோன்றியது. எல்லாமே சலனமற்றுப் போய் மங்கலாகப் பார்வையிலிருந்து நழுவிச் சென்றுகொண்டிருந்தன. குருவிக் குஞ்சுகளின் மெல்லிய கீச்சல் சப்தமும் சிறகடிக்கும் சப்தமும் மட்டுமே செவிக்குள் கேட்டுக்கொண்டிருந்தன அவளுக்கு. அவள் நெஞ்சு பொங்குகிறது. ஊமையடி பட்டது போல் உள்ளுக்குள் ஒரு தவிப்புக் கனன்று உணர்வுகளைப் பிசைகிறது. சொல்ல முடியாத வேதனை, சொல்லுக்கு அடங்காத வேதனை கொப்புளிக்கிறது. கண்களில் நீர் கரையிட, உணர்வுகளின் நிலையைப் பிரதிபலிப்பதுபோல் நடுங்குகிறது சாரதாவுக்கு. "ஹோ" என்று வாய்விட்டு அழுது தீர்த்துவிடவேண்டும் என்ற ஏக்கம் எழ, காபியைக் கீழே வைத்து விட்டு நாற்காலியின் கரங்களில் முகம் கவிழ் வெடித்துக்கொண்டு வரும் விம்மலில் முதுகு தூக்கிப்போட...

2


“போட்டோவில் இருப்பவர்கள் உங்களுடைய பெற்றோர்கள் என்று நினைக்கிறேன். என் ஊகம்...?”

“முழுக்க முழுக்கச் சரி. எப்படிச் சொன்னீர்கள்?” சாரதா பேச்சை இழுப்பதற்காக ஆச்சரியத்தை வெளிப்படுத்திப் புன்முறுவலுடன் வினவினாள்.

ஒரு நாள் தன் உள்ளத்து உணர்வுகளை உசுப்பிவிட்ட கேள்வியுடன் தன் முன்பு நின்ற சிறுமியின் மாமா பல சந்திப்புகளுக்குப் பிறகு அவளிடம் பேசவும், பிறகு ‘இப்படி இருக்கும் போது சும்மா பார்த்து விட்டுப் போகலாம்’ என்றும் வரத்தொடங்கி நட்பை வளர்த்துக் கொண்டுவிட்டார். நெருங்கிப் பார்க்கும்போது சுந்தரத்தின் வெள்ளைமனமும் நல்ல உள்ளமும் புலப்பட்டன. அவருக்கு அழகு இருந்தது; கம்பீரம் இருந்தது; பேச்சில் கலையார்வம் இருந்தது; அதனால்தானோ என்னவோ, அடிக்கடி அவர் உணர்ச்சி வசப்பட்டுப் போய்விடுவதுண்டு. புதிய இடத்தில் பல நாட்கள் தனிமைக்குப் பிறகு கிடைத்த நட்பு, வாசற்கதவைச் சுந்தரத்துக்காகத் திறந்து வைக்கும்படி செய்துவிட்டது சாரதாவை.

“இது என்ன விந்தை? உங்கள் அம்மாவை உரித்து வைத்திருக்கிறதே உங்கள் மூக்கும் கண்ணும்!” என்று சுந்தரம் சொன்னபோது அவளுக்கு ‘ஜில்’வென்றது.

“எதையும் நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள்!” என்று சாரதா சிரித்துக்கொண்டே கூறினாள்.

“ஒரு திருத்தம். எதையும் என்று சொல்லாதீர்கள். எதைப் பார்க்க வேண்டுமோ அதை மட்டும்” என்று அவர் சொன்னபோது தன் உள்ளத்துச் சாளரத்தின் கதவுகளை யாரோ மெல்லத் திறக்க முயலுவது போன்ற பிரமையை அவள் அடைந்தாள்.

அடிக்கடி பேச்சுத் திசைதெரியாமல் போய்க்கொண்டிருக்கும். சாரதாவுக்குக் கண்ணாமூச்சி விளையாடுவது போலத்தான் இருந்தது. ஓர் ஆடவனின் நட்பும், சில சமயங்களில் அதனால் ஏற்படும் உரிமைகளும், பல தினுசான பேச்சுக்களும் அவளுக்குப் புதிய அனுபவங்கள். அந்தப் புதிய அனுபவத்தை முதல்முதலில் வரண்டிருந்த நெஞ்சு ஏற்றுக்கொள்ள முரணினாலும் நாளடைவில் அந்த அனுபவங்கள் அவளை எங்கேயோ இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டன. இளம் வயதில் அவள் மேல் விழுந்த குடும்பப் பளுவும், கொந்தளிக்கும் கடலில் படகு கவிழாமல் இருக்கப் போராடும் படகோட்டியைப் போல் குடும்பத்தை ஒப்பேற்றுவதற்காக அவள் பட்ட பாடும் பெண்மையின் மென்மையான நெஞ்சத்தை வைரமுடையதாக ஆக்கியிருந்தன. "சாரதா அந்தக் குடும்பத்துக்காகத் தியாகியாகி விட்டாள். அவளைப் போல நல்ல மனசோடு பொறுப்புள்ளவளாக இருக்கத் தெரிந்து கொள், பெண்ணே!" என்று எப்பொழுதோ தூரத்து உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் அந்த வீட்டுப் பெரியவரை நமஸ்கரித்து எழுந்ததும் ஆசீர்வாதம் செய்துவிட்டுத் தம் வீட்டுப் பெண்களில் ஒருத்தியை நோக்கி அவர் கூறிய சொற்களைக் கேட்டு அவள் பெருமிதம் அடைந்திருந்தாள். தான் மேற்கொண்ட தியாக வேள்வியின் பலனை எல்லாரும் அடைந்து குடும்பம் கரைசேர அவள்தானே காரணம்?

திடீரென்று தந்தைக்கு முடக்குவாதம் வந்து உத்தியோகம் போய் வீட்டுடன் முடங்கியபோது, அப்பாவும் தாய் இல்லாத மூன்று பெண்களும் கொண்ட குடும்பம் ஆட்டந்தான் கண்டுவிட்டது. அகப்பட்ட பணத்தைத் திரட்டி ஒரு தையல் யந்திரம் வாங்கிப்போட்டு வாடிக்கைகளைப் பிடித்துக் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. நிறுத்தியிருந்த படிப்புக்குப் புத்துயிர் ஊட்ட, பல்லைக் கடித்துக்கொண்டு பி.டி. படித்து முடித்துவிட்டு, அவளுக்குப் பிடித்த உத்தியோகம் பள்ளிக்கூடத்தில் கிடைத்த ஆசிரியைப் பதவி நிலைத்த பிறகுதான், குடும்ப மானத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. இரண்டு மூன்று என்று ‘டியூஷன்கள்’ வாய்த்தன. அந்த வீட்டில் இயங்கும் தையல் யந்திரத்தைப் போல அவளும் யந்திரமாக மாறி உழைத்தாள், தன்னை மறந்து. முதல் இரண்டாவது வருடத்தில் கௌரிக்குப் பிறகு கடைசித் தங்கை சுசீலாவுக்கும் கல்யாணம் செய்துவைக்க முடிந்தது. வீட்டில் பொறுப்புள்ள ஆண்பிள்ளை செய்யவேண்டிய காரியங்களை அவள் செய்து முடித்திருந்தாள். கௌரி புக்ககம் சென்றாள். வீட்டில் வளைய வந்துகொண்டிருந்த சுசீலாவும் திருமணமாகித் தன் கணவனுடன் வண்டி ஏறிச் சென்றதும் அவளை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் திடீரென்று சூழ்ந்துகொண்டு விட்ட சூன்யம் சங்கடத்தை உண்டாக்க, உள்ளே திரும்பியபோது கட்டிலில் அமர்ந்திருந்த அவளுடைய தந்தை எல்லோரையும் வாழ வைத்துவிட்டு அவள் மட்டும் தனிமையாக நிற்கும் கோலத்தைக் காணத் தாங்காமல் "குழந்தாய், நான் பாவி!" என்று நீர்மல்கத் துக்கத்துடன் அரற்றியபோது ஏனோ அவளுக்கும் நெஞ்சை அடைத்தது; "இந்த மாதிரி யெல்லாம் பேசக்கூடாது, அப்பா. நான் குடியும் குடித்தனமுமாக இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷம் அடைந்திருப்பேனோ, அதைவிடப் பன்மடங்கு எனக்கு இப்போது சந்தோஷமும் நிறைவுமாக இருக்கிறேன், அப்பா!" என்று அவரைத் தேற்றினாள். கடைசியில் தன் முதல் பெண்ணின் தியாகத்தினாலும் கடமையுணர்ச்சியினாலும் சுடர்ந்துகொண்டிருந்த முகத்தை மட்டுமே பார்த்துப் பெற்ற உள்ளம் பெருமிதமும் பூரிப்பும் அடைய முடிந்ததே தவிர, சாரதாவை மணக்கோலத்தில் பார்க்கக் கொடுத்து வைக்காமல் போய்ச் சேர்ந்தார் அவர்.

தந்தை இறந்ததும் தன் வாழ்வில் மற்றும் ஒரு பிடிப்புத் திடீரென்று கழன்று விட்டதை அவள் உணர்ந்தாள். தன் உழைப்பு இனிப் பொருளற்றதாகத் தோன்றியது அவளுக்கு. ஓடி ஓடி உழைத்த நாட்களின் சுறுசுறுப்பும் ஊக்கமும் இப்பொழுது குன்றிப்போய்விட்டதாகத் தோன்றியது. மண் புற்றுக்குள்ளிருந்து பல யுகங்களுக்குப் பிறகு திடீரென்று தியானம் கலைந்து எழும் ஞானியைப் போல, சாரதா தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் பார்க்கத் தொடங்கியபோது, அவளுக்கு வயசு முப்பத்திரண்டைத் தாண்டியிருந்தது.

ஏதோ ஓர் அநுபவத்தைத் தான் தாண்டி வந்துவிட்டது போன்ற உணர்ச்சியும், ‘இனி நம் வாழ்க்கைதான் என்ன?’ என்று சங்கிலித் தொடர்போல நீண்ட கேள்விகளும் அவள் சிந்தனையை மண்ணுண்ணிப் பாம்பாகக் குடைய ஆரம்பித்தன. அப்படிப்பட்ட உணர்வுகளும், அவளைச் சூழ்ந்துகொண்ட தனிமையும், ஒரே கதியில் செல்லும் சுவையற்ற நாட்களும் அவளுள் சலிப்பையும் துக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்த மனநிலையில் புது ஊருக்கு மாற்றலாகி, வந்த இடத்தில் சுந்தரத்தின் திடீர் நட்பு அவளுடைய இதயத்துக்கு அருமருந்தாக இருந்தது. அவளிடம் இருந்த பலவீன உணர்ச்சியே, சுந்தரத்துக்கு அதிகச் சலுகையையும் உரிமையையும் அளித்துவிட்டது என்று சொல்ல வேண்டும்.

“குடும்பத்துக்காக நீங்கள் உழைத்த உழைப்பில் உங்களைப் பற்றி நினைக்க மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. நீங்கள் பெண் ஆயிற்றே!” என்று ஒரு நாள் சுந்தரம் கேட்டதற்கு அவள் கூறிய பதில் அவருக்குத் திருப்தியாகத்தான் இல்லை.

“நான் அப்பொழுது ஒரு பெண் என்பதையே மறந்திருந்தேன். ஓர் உத்வேகம் இருந்து என்னை உழைப்பில் மூழ்கடித்துவிட்டது. அதற்காக நான் இப்பொழுது வருந்தவில்லை. கடந்த நாட்களைக் கவனிக்கும்போது எனக்குப் பெருமிதமாகவும் இருக்கிறது. அந்தப் பெருமிதமே வாழ்க்கையில் திருப்தியாக இருக்கிறது.”

சுந்தரம் அவளைப் பார்த்துச் சிரித்தார்.

“பொய். உங்களுடைய மனத்தின் இயற்கையான உணர்ச்சிகளுக்கு நீங்கள் ‘குளோரோபாரம்’ கொடுத்து வைத்திருந்தீர்கள். இப்பொழுது உங்களை விட்டு எல்லோரும் சென்ற பிறகு, உங்களுடைய தியாகத்தின் பயனைப் பிறர் அநுபவித்த பிறகு உங்கள் தியானம் கலைந்திருக்க வேண்டுமே. ஏன் சொல்கிறேனென்றால் இயற்கையை அவ்வளவு எளிதில் வென்றுவிட முடியாதே!”

“நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்? மனத்தத்துவம் அதிகம் படித்துவிட்டதாக நினைப்போ?” என்று சாரதா சிரித்தாள்.

“இல்லை. நீங்கள் அடைந்ததாகச் சொல்லும் திருப்தியை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?”

சாரதாவின் உள்ளம் சுந்தரத்தின் வார்த்தைகளில் பொதிந்திருந்த கருத்தை உன்னிப் பதைத்தது. அடிக்கடி தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிக்கு எந்த உருவம் கொடுத்து எப்படி விளக்குவது? அதுதான் எந்தகைய உணர்ச்சி? ஊமைக் கனவு கண்டது போலத் தவித்தாள் சாரதா.

சுந்தரம் அவளையே கூர்ந்து நோக்கினார்: “சாரதா, வெளிப்படையாகக் கேட்டுவிடுகிறேனே! உங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனத்தில் எழவில்லையா? மனத்தை மறைக்காமல் சொல்லுங்கள்.”

சாரதா சற்றுத் திணறித்தான் போனாள். தன் வாழ்நாளை இப்படியே தனியாகக் கழித்துவிட முடியுமா என்ற கேள்விக்கு அவளுக்கே பதில் சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஆனால் சூழ்ந்திருந்த தனிமை மட்டும் அவளைத் துன்புறுத்திக் கொண்டுதான் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு துணை கட்டாயம் வேண்டுமென்றா? முப்பத்திரண்டு வயதைத் தாண்டிவிட்ட பருவத்தில் என்ன மாற்றம் அவளுக்குக் கிடைக்க முடியும்? துணை என்பது எத்தகைய பிடிப்பு? கிணற்றடியில் பூக்கும் கனகாம்பரத்தைப் போல அழகு இருந்தும் மணமில்லாத பருவம் ஆயிற்றே அவளுடையது! தன்னால் தனிமையில் புழுங்க முடியாது என்பதற்காக, சுட்டெரிக்கும் சூனியத்திலிருந்து விடுதலை பெற அவள் திருமணம் செய்துகொண்டு ஒருவரைத் துணையாக அடைவதைத் தவிர வேறு வழி இல்லையோ?

“நான் கேட்ட கேள்விக்கு மௌனம் பதிலானால் என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது?” சுந்தரம் அவளது எண்ணப் போக்கைத் தடுத்தார்.

“ஒரு பெரிய பிரச்சினையை கிளப்பிவிட்டு நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே!” என்றாள் சாரதா.

“இல்லவே இல்லை. நீங்கள் மனம் வைத்தால் இதில் பிரச்சினைக்கு இடமே இல்லை. நான்—நான்— சொல்வது புரிகிறதா, சாரதா?” தயங்கித் தயங்கி இதைச் சுந்தரம் கூறியபோது சாரதாவுக்கு உடலெங்கும் ‘குப்’பென்று உடல் வேர்த்தது.

“உங்கள் முடிவைப் பிறகு சொல்லுங்கள்,” என்று கூறி உள்ளத்தில் அலைகளை எழுப்பிச் சென்றுவிட்டார் சுந்தரம்.

அவளுடைய மனநிலையை ஆசுவாசப்படுத்துவது போல, கௌரியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. “இந்தக் கோடை விடுமுறைக்கு ஊட்டிக்குப் போகிறேன். நீயும் வந்தால் கொஞ்ச நாள் சேர்ந்து இருக்கலாம்.” அவருக்கு எழுதச் சொன்னார்...” கடிதத்தைப் படிக்கும் போது, கௌரியின் சின்னஞ்சிறு குடும்பத்தைப் பற்றிய செய்திகளை அறியும்போது சாரதாவுக்குப் பெருமிதம் தலைதூக்கியது. அவள் அல்லவோ தண்ணீர் வார்த்து வளர்த்தவள்! ஒரு நிறைவு ஊடுருவிப் பாய்ந்து உள்ளமெங்கும் நிரம்பியது. மறுநாள் சுசீலாவிடமிருந்து கடிதம் வந்தது. “கடைசிக் குழந்தைக்கு அம்மை குத்தி ஒரு வாரம் ஆகியது. இப்பொழுது நல்ல காய்ச்சல் அடிக்கிறது. அது ‘டூரில்’ போயிருக்கிறார். எனக்குக்கூட இந்தப் குழந்தையை இரவு பகலாகக் கவனித்துக்கொள்வதில் உடம்பு சரியில்லை. தனியாக இருக்கப் பயமாக இருக்கிறது, நீ உடனே வந்தால் சௌகரியமாக இருக்கும். எனக்குக் கஷ்டம் வந்தால் நான் யாரிடம் சொல்வேன்? நீதானே எனக்கு அம்மா, அப்பா எல்லாம்? கட்டாயம் உடனே புறப்பட்டு வரவேண்டும்.”

பதறிக்கொண்டு வந்தது சாரதாவுக்கு. ‘நீதானே எனக்கு அம்மா?’ என்ற வரிகள் அவள் உள்ளத்தைப் பிசைந்தன. அந்த வார்த்தையின் கருத்து, தன் நிலை உயர்ந்துவிட்டதாக, மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பாத்திரமாகிவிட்டதாக உணர்த்தியது. தான் தனி மரம் அல்ல; இரண்டு குடும்பங்களின் சாதக பாதகங்களுடன் இணைந்தவள். அவள் பொறுப்பு உள்ளவள். சாரதா பெரியவள்; ஒரு குடும்பத்தின் தலைவி அவள். அவள் ஒரு தாய். அவளுக்குக் கௌரி என்றும். This is a transcription of the Tamil text from the image provided. It appears to be a page from a short story titled "துணை ஒன்று வேண்டும்" (Thunai Ondru Vendum).


துணை ஒன்று வேண்டும் (43)

சுசீலா என்றும் இரண்டு பெண்குழந்தைகள் உண்டு.

பெண்வீட்டுக்குச் செல்லும் தாயைப் போலச் சாரதா பரபரவென்று பிரயாணத்துக்கு ஏற்பாடுகள் செய்தாள். டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழையும் போது வண்டி புறப்படத் தயாராகிவிட்டது. இரண்டாவது வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தாள். கார்டு விசில் ஊத, வண்டி கத்தி விட்டு மெதுவாக நகர ஆரம்பித்த போது தான் சாரதா படியில் காலை வைத்து ஏறிக்கொண் டிருந்தாள். சட்டென்று உள்ளேயிருந்து ஒரு கரம் அவளைப் பற்றி மேலே இழுத்தது.

"நல்ல வேளையம்மா. ஒரு நிமிஷத்தில் நெஞ்சு பேதலித்துவிட்டது. ஸ்டேஷனுக்குக் கொஞ்சம் முன்னாடி வரக்கூடாதோ?"

குரல் வந்த திசையை நோக்கினாள். ஐம்பது வயசு மதிக்கத்தக்க ஒரு முதிய பெண்மணி முகம் லட்சுமிகரமாக ஒளிர்ந்து கொண்டிருக்க உட்கார்ந்துகொண் டிருந்தாள். சற்று நேரத்துக்கு முன்பு அவளைப் பிடித்து மேலே இழுத்த பையன் அவளருகே நின்று கொண்டிருந்தான். அந்தப் பிள்ளைக்குப் பதினெட்டு வயசு இருக்கும். களையான முகம்; நல்ல திடகாத்திரம்.

"உட்காரேண்டா. எதற்காக இப்படித் தவம் கிடக்கிறாய்? இவன் என் பிள்ளை!" என்று கூறினாள் அந்த மாது.

சாரதா எதிர்த்தாற்போல் அமர்ந்து கொண்டாள்.

"உன் பெயர் என்னப்பா?" என்று வினவினாள் சாரதா, அந்தப் பையனைப் பார்த்து.

"ராமு."

"உனக்குக் கஷ்டம் கொடுத்துவிட்டேனே, ரொம்பச் சிரமமாக இருந்ததோ?"

"இது சாதாரண உதவி, மாமி. உதவி செய்யும்போது கஷ்டத்தைப் பார்த்தால் முடியுமா?" என்று அந்தப் பையன் சொன்ன போது, "மாமி" என்ற பதப்பிரயோகத்தைக் கேட்டுச் சாரதா சரியாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். பெருமித உணர்வு அவளுள் இழையோடியது. 'ஆமாம், நான் பெரியவள்; ஒரு குடும்பத் தலைவி!'

திடீரென்று அந்த அம்மாள் குடல் தெறிக்க இருமினாள். ராமு பிளாஸ்க்கைத் திறந்து வெந்நீரை எடுத்துத் தன் தாயின் தலையை இதமாகப் பற்றிக்கொண்டு வாயில் மெதுவாக ஊட்டினான். பிறகு நெஞ்சை இதமாகத் தடவி விட்டான். வேர்த்திருந்த முகத்தைச் சிறு துண்டினால் துடைத்தான்.

தன் தாய்க்கு ஆதரத்துடன் பணிவிடை செய்யும் அந்தப் பிள்ளையும், அந்தப் பணிவிடைகளினால் பெருமையும் பாசமும் பெருகும் கண்களுடன் அந்தத் தாய் பிள்ளையை நோக்கும் விழிகளில் ஒளிவிடும் நிறைவும் சாரதாவைத் தனி உலகுக்கு அழைத்துச் சென்றன. இரண்டாம் வகுப்புப் பெட்டியில் கழித்த எட்டு மணி நேரப் பிரயாணத்தில் அந்த முதிய மாதுக்கும் பையனுக்கும் உள்ள பாசத்தின் நெருக்கத்தையும் துடிப்பையும் சாரதா பரவசத்துடன் கவனித்தாள். 'இந்தத் தாய் முந்திய ஜன்மத்தில் நிரம்பப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!' என்று எண்ணினாள். ஸ்டேஷனில் இறங்கி வீடு போய்ச் சேர்ந்த பிறகுகூட, இரவில் அந்தப் பையன் தன் தாய்க்கு உணவு ஊட்டியதும், தலையணையை இதமாக வைத்துத் தாயைப் படுக்கவைத்து போர்வைப்பைப் போர்த்திவிட்டு, நீல விளக்கைப் போட்டுவிட்டுத் தாயின் காலடியில் உட்கார்ந்திருந்ததும் சாரதாவின் கண்களில் தோன்றி மனத்தைக் குளிர வைத்துக்கொண்டிருந்தன.

சாரதாவைக் கண்டதும் சுசீலா ஓடோடி வந்து வணங்கினாள்; "அக்கா, நீ இன்றைக்குக் கட்டாயம் வந்துவிடுவாய் என்று தெரியும். நீ வந்தது எவ்வளவு தெம்பாக இருக்கிறது!" என்று கூறியபோதும், அங்கே இருந்த நாட்களில் சுசீலாவின் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டபோதும் தான் ஒரு பெரிய மனுஷியாக ஆகிவிட்டது போல அடிக்கடி ஓர் உணர்வு உள்ளோடியது. 'நீ தானே எனக்கு அம்மா எல்லாம்?' என்ற சொற்கள் நினைவில் நர்த்தனமாடின. அது ஓர் இன்ப அநுபவமாக இருந்தது.

பத்து நாட்கள் கழித்துத் திரும்பினாள். திடீர் திடீரென்று ரயிலில் சந்தித்த பையனும், அவனுடைய சேவைகளினால் "இந்த உலகத்தில் இதைவிடப் பாக்கியம் என்ன இருக்க முடியும்?" என்று ஒளி விடும் அந்த மாதின் விழிகளும், "நீதானே எனக்கு அம்மா?" என்ற சுசீலாவின் சொற்களும், சுசீலா தன் குழந்தைகளிடம் காட்டிய பரிவும் பாசமும் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்து விடும். அப்படியே அந்த மானசீகக் காட்சிகளில் தன்னை மறந்து லயித்துப் போய்விடுவதும் உண்டு.

"உங்கள் சகோதரியின் குடும்பம் சௌக்கியந்தானே?" என்று வினவியவாறு வந்தான் சுந்தரம்.

"வாருங்கள்!" என்றாள் சாரதா.

"அன்றைக்கு நான் கேட்டதற்குப் பதில் இன்று கிடைக்குமா?" என்று சுந்தரம் கேட்டபோது, சாரதா லேசாகப் புன்னகை பூத்தாள். ஒரு கணம் நிதானித்தாள்.

"என்னை விரும்புவதற்கு நீங்கள் ஒரு காரணம் சொல்ல முடியுமா?" என்ற கேள்வி திடுமென அவளிடமிருந்து வந்தது. சுந்தரம் நிலைகுலைந்தார். சாரதா அந்த ஊருக்கு வந்ததிலிருந்து, வெகு நாட்களாகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த அவர் மனத்தில் அவளுடைய உருவம் அசைத்ததையும், அவர் தன்னைவிட ஒரு வயசு பெரியவள் என்று தெரிந்தும் அவளுடைய வனப்பிலும் கம்பீரத்திலும் தம் மனம் கொள்ளைபோய் விட்டதையும் தெரிவிக்கக் கூசிப்போய் மனம் தவித்தார். இன்னது செய்கிறோம் என்று தெரியாமல் திடீரென்று அவள் கரங்களைப் பற்றி, "சாரதா, உன் அழகு என்னை... என்னை...!" என்று சொல்லி மாறினார். விபத்தைப் போல எதிர்பாராத விதமாக அவளது பார்வை நிலைக் கண்ணாடியில் பதிய அங்கே பிரதிபலித்த காட்சியில்  சுந்தரத்தின் கண்களுக்கு வனப்பு தோன்றும் உருவம் வயசுக்கேற்ற வளர்ச்சியையும், தோற்றத்தில் முதிர்ச்சியையும் காட்டுவதாகத் தோன்ற, அந்தக் கோலத்தில் சுந்தரத்தின் திடீர்ப்போக்குக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருப்பது பொருத்தம் இல்லாமல் இருந்தது. சே, இவ்வளவு வயசுக்குப் பிறகு இந்த நிலையில் நிற்பது அவளுக்கே கண்களை மூடிக் கொள்ளச் செய்தது. வயிற்றைப் புரட்டியது சாரதாவுக்கு. "நீதானே எனக்கு அம்மா?" என்று அவள் செவியில் சுசீலாவின் குரல் ஒலித்தது.

அவள் சட்டென்று கையை உதறிக் கொண்டு, "நீங்கள் இப்படி உணர்ச்சி வசப்படக்கூடாது!" என்று கூறியவள் எங்கோ தன் பார்வையைச் செலுத்தினாள். நெஞ்சு அலை மோதியது.

"மன்னிக்க வேண்டும்; சாரதா!" என்று மெல்லிய குரலில் கூறியவர் அங்கு நிலவிய மௌனத்தில் எப்பொழுது மறைந்தார் என்று அவளுக்குத் தெரியாது.

'என் அழகா இவரைக் கவர்ந்தது என்றார்? அட கஷ்ட காலமே! இவர் என்ன மணந்து கொள்வதில் என்ன பிரயோசனம்? வாழ்க்கை யில் துணை என்னும் ஒரு பிடிப்பை மட்டும் வேண்டித் தவிக்கும் எனக்கு இவருடைய உறவு எந்த வகையில் திருப்திப்படுத்தும்?' என்று பலவாறாக மனம் நீர்க் கோலம் போட்டது.


3

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இன்று மனத்தின் குழப்ப நிலை உச்ச நிலையை அடைந்திருந்தது. அந்த வேதனை தாங்க முடியாமல் இருந்தது.

"எனக்கு வேண்டியதுதான் என்ன?" என்ற கேள்விக்கு அவள் விடை தெரியாமல் தவிக்கும்போதும் ரயிலில் பார்த்த பதினெட்டு வயசுப் பையனும் தாய்மையுணர்ச்சி முகமெல்லாம் பொங்க 'இவன் என் பிள்ளை' என்று கூறிய பெண்மணியின் நிறைவும் அவளை அலைக்கழிக்க ஸுட்கேஸுடன் கதவைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் சாரதா. அடிமனத்தில் நீர்க்குமிழி போல் தோன்றிய ஒரு தீர்மானமே அவளை அப்படிப் புறப்படச் செய்திருந்தது.

மூன்று நாட்களுக்குப் பிறகு கதவு திறந்திருந்ததைக் கண்ணுற்று உள்ளே பிரவேசித்த சுந்தரம் பேச்சுக் குரல் கேட்டுத் திகைத்தார். கூடத்தில் மேஜையின் மேல் நான்கு வயசில் ஒரு குழந்தை உட்கார்ந்திருக்க அருகே நின்றவாறு அதற்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தாள் சாரதா. அறையில் அங்கும் இங்கும் விளையாட்டுச் சாமான்கள் இறைந்து கிடந்தன.

செருப்புச் சத்தம் கேட்டுச் சாரதா திரும்பினாள்.

"ஏது, திடீரென்று தாயாகி விட்டீர்கள் போலிருக்கிறதே! குழந்தை யாருடையது?" என்று கேட்டார் சுந்தரம்.

"நேற்று வரையில் இது சென்னை 'தாயக'த்தில் இருந்தது. இன்றையிலிருந்து என் குழந்தை!" என்றாள் சாரதா.

"திடீரென்று இந்த யோசனை எப்படித் தோன்றியது?"

"எனக்குத் துணை ஒன்று வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா? அந்தத் துணையைச் சம்பாதித்துக் கொண்டு விட்டேன்!"

"அப்படியென்றால்...?" என்று கேட்ட சுந்தரத்தின் குரலில் கசப்பு இல்லை.

சாரதா தலைகுனிந்தாள்.

"என்னை மறந்து விடுங்கள், சுந்தரம். எனக்கு ஒரு துணை வேண்டும் என்ற நோக்கமும் உங்களுக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற எண்ணமும் இரு துருவங்களைப் போலக் கருத்தில் வேறு பட்டவை. நான் இப்பொழுது ஒரு தாய். என் சகோதரிகள்கூட அப்படித்தான் பாவிக்கிறார்கள். ஒருத்தி தாயான பிறகு எப்படி மனைவியாக முடியும்? நீங்கள் சொல்லுங்கள்!"

குழந்தையை அணைத்துக்கொண்டு சாரதா கேட்ட கேள்வி நூதனமாக இருந்தது சுந்தரத்துக்கு. ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது அசட்டுப் பிடிவாதமாக இருந்தாலும், 'இந்த வயதில் ஒரு பெண்ணுக்குக் குழந்தையை விட வேறு பிடிப்பு என்ன இருக்க முடியும்?' என்ற எண்ணமும் கூடவே எழுந்தாலும், சுந்தரம் தோல்வியடைந்த மனத்துடன் வேறு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வறட்டுப் புன்னகையுடன், "உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!" என்று மட்டும் கூறிச் சென்றார்.

'நீதானே எனக்கு அம்மா எல்லாம்?' என்ற வரிகள் திடுமென்று உள்ளத்தில் ஒலிக்க, சாரதா பால் வடியும் பாலகனை வாரி யெடுத்து முத்தமிடுகிறாள். அந்த இன்பம் அவளைக் கனவுலகத்தில் சஞ்சரிக்க விடுகிறது. அந்த உலகில் —

சாரதா படுக்கையில் படுத்திருக்கிறாள். அந்த நான்கு வயசுக் குழந்தைதான் எப்படி வளர்ந்து விட்டான்! "என்னம்மா, உடம்புக்கா?" என்று பதறும் மேனியைக் கண்டு இதயத்தில் மடல் மடலாக உணர்ச்சிகள் பிரி அவிழ்ந்து தேனைச் சொரிகின்றன. "ஒன்று மில்லையடா, லேசாகத் தலைவலி!" என்றதும் ஏதோ ஒரு தைலத்தை எடுத்து நெற்றியில் தடவ, அந்த ஸ்பரிசத்தின் இதத்தை அணுவணுவாக ரசிக்க, அவன் அவளுடைய பிள்ளை — போர்வையை எடுத்துப் போர்த்தி நீல விளக்கைப் போட்டுவிட்டுப் பக்கத்தில் ஒரு நாற்காலியில் சாய்ந்துகொண்டு அவளையே பார்க்கும் பார்வையில் அதையெல்லாம் அனுபவிக்கும் அந்த விநாடிகளின் சொர்க்க போதை…



****************************************************************************************