Sunday, September 26, 2021

குறுங்கதை - The Velikovsky Fund


 இருட்டில் YouTube-ல் ராம்சந்திரனின் பேச்சைக் கேட்டேன். மெலிதான வெளிச்சத்தில், கையில் ஒரு பேப்பர், பேனாவுடன். காதில் பிறரை பாதிக்கா வண்ணம் headphones.

"கிறிஸ்த்தவ மதமாற்றத்திற்கு காசு எங்கிருந்து வருகிறது தெரியுமா? அமெரிக்காவில் ஒரு ஈமெயில் தட்டினால் போதும். டாலர்ல இங்க வந்து குவியுது."
Unprovable என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் கூட்டத்தில் இருந்தவர்கள் உன்னிப்பாக கவனித்தார்கள். Whatsapp-ல் ஏற்கனவே நன்கு பரவியிருந்த ஒரு பேச்சு. ராம்சந்திரன் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம்.
"நம்ம அரசாங்கமே அவங்களுக்கு சலுகை ஏற்படுத்தி தந்திருக்கு. பேர் தான் இந்து கட்சி. ஆனா அவன் கிட்ட காசு வாங்காம இந்திய அரசாங்கமே இல்லை."
இரவுக்கு மேல் இப்படி வெறுப்புப் பேச்சு கேட்பது உடம்பிற்கு நல்லதா என்று தெரியவில்லை. ஆனால் பகலில் வழக்கமான பத்திரிகை வேலைகள் இருந்தன.
திரையில் ராம்சந்திரனின் முகம் இல்லை. உண்மையில் அவரை யாரும் பார்த்ததே இல்லை. நான் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவில் அவர் இல்லை. அவர் குரல் மட்டுமே கேட்டது. மேடையில் ஒரு presentation தெரிந்தது.
"2010 பட்ஜெட்ல போய்ப் பார்த்தா உங்களுக்குத் தெரியும். அமெரிக்க உதவி தனி. அது கடனில்லாம தனியா பட்ஜட்ல வரும். ஆனா வரவுக் கணக்குல ஒரு code இருக்கு. 777AD - போய்ப் பாருங்க. 777 - சர்ச்சுக்கு முக்கியமான நம்பர்."
நான் திரையை உற்றுப் பார்த்தேன். அவர் சொன்ன code அதில் இல்லை.
"777AD" என்று எழுதிக் கொண்டேன். கூகிள் செய்து பார்த்தால் 777 ஒரு வகையில் கிறிஸ்தவ மதத்தின் ஒரு முக்கிய எண் தான். அதை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு விடுகிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

மறு நாள் அலுவலகத்தில் இருந்த போது, மறுபடி அந்த 777AD நினைப்பு வந்தது. 2010 பட்ஜெட் மத்திய அரசின் நிதி அமைச்சக இணைப்பில் இருந்தது. எடுத்துப் பார்த்தேன். அவன் சொன்னது போல ஒரு code கூட இல்லை. ஏமாற்றுப் பேர்வழி. இவனை நம்பி ஒரு கூட்டம்.
அடுத்த சில நாட்களுக்கு ராம்சந்திரனின் வீடியோ எதுவும் வரவில்லை. காணாமல் போயிருந்தான். சமூக வலைத்தளங்களில் entertainment போச்சே என்று சிலர் வருத்தப்பட்டார்கள். நான் ஒளிந்திருந்த ஒரு தீவிர இந்துத்துவ க்ரூப்பில் சர்ச் அவனைப் போட்டுத் தள்ளி விட்டது என்று ஒரு வதந்தி உலாவியது.
யாரவன் என்று நான் யோசித்தேன். ஏன் வெளியே முகம் காட்டவில்லை? இதை விட மோசமாகப் பேசுபவர்கள் பலர் வெளிப்படையாக உலாவுகிறார்கள் - பிறகு இவனுக்கு என்ன?
777AD என்று பொதுவாக இணையத்தில் தேடினால் ஒரு பயனும் இல்லை.
அவனுடைய கடைசி வீடியோவை மறுபடி போட்டுப் பார்த்தேன். அந்த presentation - அதில் பயன்படுத்திய சொற்கள். ஒரு வேளை அரசு ஊழியனோ? அது தான் பயப்படுகிறானோ?
அந்தத் தீவிர இந்துத்துவ க்ரூப்பில் போய்ப் பார்த்தேன் - பலர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள். அவர்களுக்கு தனித்தனியாக செய்தி அனுப்பினேன்.
"அன்புள்ள ________, ராம்சந்திரன் சில நாட்களாகக் காணவில்லையே? தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. Pay commission குறித்துச் சில சந்தேகங்கள் இருக்கின்றன."
பலரிடம் இருந்து பதில் வரவில்லை. இருவர், "எனக்கு அவரைத் தெரியாது," என்றார்கள். சிலர், "உனக்கு அவரைத் தெரிந்தால் எனக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள்," என்றார்கள்.
சும்மா drama ஆடுகிறான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு மத்திய அரசு அலுவலரிடம் போய்ப் பேசினேன்.
"கண்ட பையித்தியக்காரனையும் தேடிப் போகாதே," என்றார் நமசிவாயம்.
"இல்லை - இந்த 777AD இல்லை என்று நிரூபித்தால் அவன் பொய் சொல்கிறான் என்று எல்லாருக்கும் தெரியும் தானே? அப்படியாவது இவனைப் போன்றவர்களை நம்பாமல் இருக்கலாமே? Debunking என்று சொல்வார்கள்," என்றேன்.
"உண்மையில் இது போன்ற code எல்லாம் பட்ஜெட்டில் வராது. அது accounting statement-ல் தான் வரும்."
"அது எங்கே கிடைக்கும்?"
"நீ எல்லாம் சாதாரணமாகப் பார்க்க முடியாது. உங்கள் வயதில் எல்லோரும் கூகிளில் எல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள். சோம்பேறிகள்," என்றார்.
ஆனால் மறு நாள் நமசிவாயத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
"You may have stumbled upon something," என்றார்.
"என்ன?" என்று கேட்டேன்.
"777AD இல்லை. ஆனால் 666AD என்று ஒரு code இருக்கிறது. 666 சர்ச்சுக்குப் பிடிக்காத நம்பர்"
நான் ஆச்சரியத்துடன், "அப்போ அவன் சொன்னதெல்லாம் உண்மையா?"
"பொறு - அதுவல்ல முதல் கேள்வி. இந்த statement-கு அனுமதி இருப்பவர்கள் நாட்டில் ஒரு நூறு பேர் தான். உன் ராம்சந்திரன் அவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும்."
இப்படித் தான் டில்லியில் ஒரு நாள் மாலை ராம்சந்திரன் என்னும் விநாயக் ராம் வீட்டிற்குப் போனேன். நூறு பேரில் அவனை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது - ஏனென்றால் அவன் மட்டும் தான் செத்துப் போயிருந்தான்.

நிதி அமைச்சகத்தில் தொழில் நுட்ப வல்லுனராக வேலை பார்த்திருந்தான் விநாயக் ராம். மனைவி, இரண்டு பிள்ளைகள். தமிழன் தான். இரவில் அரசுக் குடியிருப்பில் தன் கம்ப்யூட்டருடன் அமர்ந்து ராம்சந்திரனாக தனி உலகைப் படைத்திருந்தான். ஆனால் வீடு திரும்பும் போது திடீரென்று சாலையில் சுருண்டு விழுந்து இறந்தான்.
இதை வைத்துக் கொண்டு நான் எப்படி ராம்சந்திரன் சொன்னதை debunk செய்வது? கேட்பவன் எவனும் இது ஒரு அகஸ்மாத்தான மரணம் என்று நம்ப மாட்டான். ஏற்கனவே உலகமே தங்களுக்கு எதிர் என்று நினைப்பவர்கள் .
இன்னும் அந்த 666AD-யைத் தோண்ட வேண்டும்.
விநாயக்கின் வீட்டில் என்னை அவன் நண்பியாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஹாலில் ஒரு கம்ப்யூட்டர் மேஜை இருந்தது. தூசி சுற்றிப் படிந்திருந்தது.
"அவர் கம்ப்யூட்டரை நிதி அமைச்சகம் வந்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்," என்றாள் அவன் மனைவி. "என் பையன் இப்போது எப்படி படிப்பானோ?"
"அவர் பேப்பர்கள், Flash drive ஏதாவது விட்டுப் போனாரா? என்றேன்.
அவள் வினோதமாகப் பார்த்து, "இல்லை," என்றாள்.
இங்கே எதுவும் பெயராது என்று தெரிந்தது. விடுதியில் என் அறைக்குப் போய் யோசித்தேன்.
ராம்சந்திரனின் வீடியோக்களை எடுத்து மறுபடி பார்த்தேன். எது அவனை இப்படி வீடியோக்கள் போடத் தூண்டியது? என் தொலைபேசியில் அவன் அந்த ரகசிய accounting statement-ஐ அனுமதியின்றி தரவிறக்கம் செய்த தேதிகள் இருந்தன. நமசிவாயம் கொடுத்திருந்தார்.
முதல் வீடியோ அவன் வெளியிட்ட தினம் - 22-04-2021
அவன் download செய்த தேதி - 21-04-2021
666 என்பதை 777 என்று மாற்றிச் சொல்லியிருக்கிறான்.
அவனுடைய உண்மையான நோக்கம் ஒரு வேளை இந்த code-ன் முக்கியத்தை வெளியே கொண்டு வருவதோ? இந்த இந்து-கிறிஸ்த்தவம், சர்ச் எல்லாம் ஒரு பெரிய set-up என்று எனக்குத் தோன்றியது.
எங்கிருந்தோ வருவாய் இந்தியா அரசுக்கு 2010-ல் இருந்து வருகிறது. அது செலவழிக்கப்பட வேண்டும் அல்லவா? செலவுக் கணக்கில் இந்த code எங்காவது இருக்க வேண்டும். நமச்சிவாயத்திற்கு போன் செய்தேன்.
"அவன் தான் பொய் சொல்றான்னு தெரிஞ்சாச்சே, இன்னும் எதுக்கு அது பின்னால போற?" என்றார்.
"இல்ல, இது முழுசா தெரிஞ்சா தான் ஒரு logical conclusion."
"நோ," என்று விட்டு, வைத்து விட்டார்.
மத்திய அரசு மிகப் பெரியது. நூற்றுக்கணக்கில் கோடிகள் வந்த 666AD எங்கே போயிருக்கும் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
அதற்கும் ராம்சந்திரன் ஏதாவது வழி வைத்திருப்பான்.
மறுநாள் மதியம் இரண்டு மணிக்கு விமானம். அதற்கு முன்னால் விநாயக் ராம் மனைவிக்கு போன் அடித்தேன்.
"உங்க பெயர் என்ன?" என்று கேட்டேன், அவளிடம்.
"அதெல்லாம் பத்திரிகைல வேணாம்," என்றாள் அவள்.
"இல்ல, ராம்சந்திரன் சொந்த ஊர் எது?"
அந்தப் பக்கம் சிறு அமைதி நிலவியது. பிறகு அவன் மனைவி குரல் கேட்டது:
"யாரது ராம்சந்திரன்?"
"உங்களுக்கே தெரியுமே," என்றேன்.
அவள் சிறு மௌனத்திற்குப் பின், "நீங்க என் வீட்டுக்கு பக்கத்துல வர முடியுமா?" என்றாள். நான் நினைத்தது உண்மை தான். விநாயக் ராம் ஏதோ செய்தி விட்டுச் சென்றிருக்கிறான்.

அவள் கையில் ஒரு சிறு Flash drive இருந்தது.
"ராம்சந்திரன்னு யாராவது கேட்டுட்டு வந்தா இதைக் கொடுக்கச் சொன்னார்," என்றாள் அவள்.
நான் சென்னை திரும்பும் விமானத்தில் அந்த drive-ல் இருந்த கோப்புக்களை எடுத்துப் பார்த்தேன். அத்தனையும் ஸ்கேன் செய்யபட்ட கணக்கு வழக்குகள். 666AD என்னும் கணக்கில் வந்த பணம் சென்றது முதலில் Indian Medical Council என்னும் அமைப்புக்கு. 2010-ல் திட்டம் செய்யபட்ட ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அந்த fund (அது fund என்றே குறிப்பிடப்பட்டிருந்தது) சென்றிருந்தது. பிறகு சிறிது சிறிதாகப் பிரிந்து பிரிந்து பிற வருடங்களில் NEET என்னும் அந்தத் தேர்வின் செலவுகளுக்குப் பயன்பட்டது. எஞ்சிய பணம் (கணிசமான அளவு) கஜானாவின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
கடைசி பக்கத்தில் ஒரு சிறு screenshot இருந்தது. ஒரு மேலை நாட்டு அரசின் சீலுடன் ஒரு பக்கம் அதில் தெரிந்தது. அதன் தலைப்பு "Velikovsky fund" என்று எழுதப்பட்டு, அதற்கு நேராக 666AD என்று குறிப்பு.
இது சர்ச்சில் இருந்து வரும் பணம் அல்ல என்று எனக்குப் புரிந்தது. அந்த மேல்நாட்டு அரசிடம் இருந்து இந்தியாவிற்கு வருவது. கடனும் அல்ல; வெளி உதவியும் அல்ல. ஏதோவொரு சேவைக்குத் தரப்படும் நிதி.
அதோடு என் மனதில் ஒரு பயங்கர உணர்வு எழுந்தது - விநாயக் ராம் இறந்தது உண்மையில் விபத்து அல்ல. அவன் தன்னுடைய மரணத்தை எதிர்பார்த்திருக்கிறான். ஆனால் வெளியே தெரியாமல் இந்த "Velikovsky fund" குறித்து தூண்டில் போட்டு வைத்திருக்கிறான். அவனை யாராவது கொலை செய்திருந்தால் அவர்களுக்கு என்னைக் குறித்தும் தற்போது தெரிந்திருக்கும்.
விமானத்தில் சுற்றிப் பார்த்தேன். எல்லோரும் என்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு தோன்றியது. விமானத்தில் கொடுத்த உணவைத் தள்ளி வைத்தேன்.

Velikovsky என்பவர், நான் நினைத்தது போல ஒரு பொருளாதார நிபுணர் அல்ல. 1970-ல் காலமான அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி. அவருடைய புகழ் பெற்ற ஆய்வு, எலிகளின் குழு அமைப்புக் குறித்தாகும். ஆனால் இந்த ஐடியாவை அவர் அரசியல் துறையில் பயன்படுத்தினார். பொதுவாக, அரசாங்கம் தம் கொள்கைகளை வகுப்பதில் ஒரு குறைபாடு உண்டு. உதாரணத்திற்கு, 1930-ல் அமெரிக்காவில் மது விலக்கு கொண்டு வரப்பட்டது. சில வருடங்கள் அந்தக் கொள்கையின் கொடுமைகளைச் சகித்துக் கொண்ட பின், அந்நாடு மதுவிலக்கைத் திரும்பப் பெற்றது.
Velikovsky, அறிவியல் இது போன்ற கொள்கை முடிவுகளை எடுக்க அரசுக்குப் பயன்படும் என்று நம்பினார். அறிவியலில் நடைபெறுவது போன்ற பரீட்சார்த்த முறைகளை அரசியல் கொள்கைகளுக்கு கொண்டு வரலாம் என்றும் அவர் நினைத்தார். இதற்கு கீழ் மிருகங்களின் குழு அமைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே அவருடைய பெரும் முயற்சியாக வாழ்க்கை முழுவதும் இருந்தது.
எனக்கு இதைப் பற்றிப் படிக்கத் தலை சுற்றியது. சென்னையில் விமானம் இறங்கும் போது என் மனதில் பெரும் சூறாவளி.
ஏனெனில் 2009-ல் அந்த மேலை நாட்டு அரசாங்கம், தம் நாடு முழுவதும் அது வரை இல்லாத மருத்துவ நுழைவுத் தேர்வைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அதன் ஆளும் கட்சியின் அப்போதைய தலைவர் கூறியிருந்தார்.
2010-ல் Velikovsky fund இந்தியாவிற்குப் பணம் அனுப்புகிறது. அந்தப் பணம் இந்திய மருத்துவக் கழகத்திற்குப் போய் ஒரு நுழைவுத் தேர்வு மசோதா தாக்கலாகிறது.
ஒரு வேளை Velikovsky-யின் கனவைப் போல இந்தியாவில் இந்தக் கொள்கையை பரீட்சித்துப் பார்க்கிறார்களோ? அப்படியானால் நாம் அல்லவா கீழ் மிருகங்கள்?

விமான நிலையத்தின் வெளியே கார்கள் வேகமாகச் சென்றன. என்னுடைய போன் இப்போது கண்காணிக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் என்னிடம் ஒரு துருப்புச் சீட்டு இருந்தது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி இந்த விஷயம் கிடைத்தால் சும்மா விடாது. எலிகளைப் போல, தம் மக்களை மற்றொரு நாட்டின் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்த நிச்சயம் விட மாட்டார்கள்.
திமுகவில் எனக்குத் தெரிந்த மூத்த பிரமுகர் ஒருவரிடம் பேசினேன். "உங்களை உடனே வந்து பார்க்க வேண்டும்," என்றேன்.
"வா," என்றார்.
டாக்ஸியில் கட்சி அலுவலகத்தில் நேராகப் போய் இறங்கினேன். ஒரு தனி அறையில் காத்திருக்கச் சொன்னார்கள்.
நமசிவாயத்திடம் இருந்து ஐந்து அழைப்புக்கள் வந்திருந்தன. Whatsapp-ல் "அவசரப்பட்டு எதுவும் செய்யாதே," என்று அனுப்பியிருந்தார்.
"சார் இப்போ வருவாங்க," என்று ஒரு உதவியாளர் சொல்லிச் சென்றார்.
"டிங்" என்றது Whatsapp. இது வரை பார்க்காத நம்பர்.
"Good evening Priya. For your kind attention while you wait for your knight in shining armor."
நான்கைந்து போட்டோக்கள் இணைக்கப்பட்டிருந்தன. வெளியே கூட்டத்தின் சத்தம் கேட்டது.
போட்டோக்களைப் பிரித்துப் பார்த்தேன்.
அதே மேலை நாட்டு சீல். "Velikovsky fund" 666AD - புது வரவுக் கணக்கு. ஆனால் வருடம் 2006.
அடுத்ததில் செலவுக் கணக்கு. இந்த முறை தமிழ் நாட்டு கோபுரம் சீல்.
"Abolition of TNPCEE - Entrance exams" என்று ஒரு தொகை சட்டசபை செலவில் போட்டிருந்தது.
அடப்பாவிகளா! உங்களுக்கும் பங்கா!
கதவைத் திறந்து உள்ளே வந்தவர்கள் என்னைப் பார்த்திருக்க மாட்டார்கள். முதல் மாடி பால்கனி வழியே இறங்கி விட்டேன்.

இரவு என் அறையில் மெலிதான வெளிச்சத்தில் அமர்ந்திருந்தேன். குரலை மாற்ற ஒரு machine. திரையில் Velikovsky எழுதிய வரிகள்.
"The scientific analysis of government policies will require long-drawn experiments with social groups, appropriately done on lesser animals with higher-order bonds"
Livechat-ல் முதல் கமெண்ட்: "சர்ச்சு பத்தி எதுனா சொல்லும்மா"

Saturday, September 18, 2021

Excess deaths methodology used by Newsminute for Kerala has holes


 The calculation of actual number of deaths due to COVID-19 has been an ongoing struggle for academics around the world.

There are several entirely legitimate reasons why COVID deaths are mis-identified. These are (from an academic paper below):
-some direct deaths attributable to COVID-19 may be assigned to other causes of death due to an absence of widespread testing and low rates of diagnoses at the time of death
- direct deaths from unfamiliar complications of COVID-19 such as coagulopathy, myocarditis, inflammatory processes, and arrhythmias may have caused confusion and led to attributions of death to other causes, especially early in the pandemic and among persons with comorbid conditions
- there are increases in mortality resulting from reductions in access to and use of healthcare services and psychosocial consequences of stay-at-home orders
- Economic hardship, housing insecurity, and food insecurity may cause indirect deaths, especially among those living with chronic illnesses or who face acute heath emergencies and cannot afford medicines or medical supplies
- the pandemic may reduce mortality as a result of reductions in travel and associated motor vehicle mortality, lower air pollution levels, or the possible benefits of COVID-19 mitigation efforts (i.e., mask wearing and physical distancing) on reducing influenza spread
- It is also possible that COVID-19 deaths are over-recorded in some instances, e.g., because some deaths that should have been assigned to influenza were instead assigned to COVID-19.
So, first, COVID deaths being mis-attributed is something that has occured in every nation; and it is not because of a desire to hide numbers from the public.
Now, in order to calculate what is the possible real number of deaths, in UK and in other countries, they have tried to find the difference between two numbers:
1. The number of deaths that is "normal" in a nation/state if COVID had not occured
2. The number of actual deaths
The difference between these two is called "excess deaths".
Not all excess deaths are due to COVID. That is, if you had a projected "normal" death count of 200; and deaths in 2020 is 300 - the difference is 200-100 = 100. But you cannot assume immediately that all of these are due to COVID.
Further excess deaths calculations done at a nation/state level may not reflect the actual variation at the local body level.
In order to find the "normal" deaths that would have occured WITHOUT the pandemic, several methods have been followed. These involve complex statistical projections to simpler methods.
The study mentioned in the first comment does this:
"To compute an average historical death rate for 2013 to 2018, we divided the sum of deaths from 2013 to 2018 by the total population from 2013 to 2018."
This excess deaths based analysis was done by many journalists in India during the April-May-June period. Based on their studies, a number of articles were written in Scroll, Wire, Newsminute etc, IN JUNE ITSELF.
You can find that this may not be correct, because there is a lag between the occurence of a death; and its registration by the local body. This lag is high in Kerala (greater than 21 days for 40% of the deaths WITHOUT the pandemic). But even for other states, there is a lag of weeks between death date and registration; and this must have been higher during the pandemic.
The study below takes a lag of 10 weeks - for deaths in December 2020, they give time until March 12, 2021. Then they used that data to publish the results now.
Therefore, the first mistake committed by these journalists was their rush to calculate deaths while the surge was going on.
The second was that they did not emphasize enough that the excess deaths may not be all attributable to COVID. Instead they sensationalized the numbers in headline.
The study below calculates that only around 20% of the excess deaths could be attributed to COVID-19, as an average, in the US. That is, in the above example, if the excess deaths is 100, then around 20 of them could be COVID. That means that the total deaths due to COVID could actually be 220 instead of 200 - this is not what you get from the headlines.
Now, let us go to the Newsminute article about Kerala excess deaths calculation.
The article uses the following formula to find the projected death rate in 2021 without the pandemic:
"TNM calculated excess deaths based on the 2015-2019 data from the state records. The state registered an average of 98,387 deaths from January 1 to May 31 every year from 2015 and 2019."
But, how was this average calculated? I tried calculating it for the whole year from 2015 to 2019, and I got a different number (as I have mentioned in a previous article).
Did the Newsminute calculate this number after taking into account population increases, as the study below does?
If yes, how did it get the population of the state from 2015 to 2019? Was that a projected figure too?
We do not know. My suspicion from their wording is that they simply took the death numbers from 2015 to 2019 and then averaged them. This is not the correct method, though.
My question is, how were these people qualified to do this analysis? Why did they rush to do it while the surge was going on, when we would have inaccurate numbers?
This excess death study is just evolving, and it should have been left to academics.
I have no doubt there were excess deaths; and that there was misreporting. This was true of Kerala and it was true of UP.
By rushing to use an academic tool in the middle of the surge to sensationalise, and (in the case of Burka Dutt and others) cast aspersions on govt officials, I believe the journalistic community was highly irresponsible.

References:
US Study: https://journals.plos.org/plosmedicine/article?id=10.1371/journal.pmed.1003571

Newsminute article on Kerala: https://www.thenewsminute.com/article/tnm-exclusive-kerala-reports-almost-14000-excess-deaths-till-end-may-2021-151124




Saturday, September 04, 2021

On Teacher's Day, salutes to my first teacher


From FB: 

I had a few good teachers in life, but the boy I remember most as a teacher was a classmate nicknamed Kanchanjunga in 6th std. He was called this because he was miserly. Saved 10 paise every day, which annoyed all of us.

However, I remember him clearly, because one day, at lunch time, a bunch of us were sitting around and talking in class. Suddenly the conversation took a weird turn, and I could not understand any of it. The boys were talking about women - that I got, but they said several words unrelated. Someone was mentioning train engine pistons. A deep cave was brought up multiple times.
I became confused and was staring stupidly at them.
Now, Kanchanjunga could have minded his own business. Instead he asked me to come down to the school ground, where he kindly put his hand on my shoulder and started explaining the process of sex.
"You know how kids are born?" he asked me.
Dad and Mom hug each other, I said.
""No," he said, and mentioned a few details of female anatomy.
"On your first night," he said, "The first thing you do, you put your hands tightly over your spouse's mouth so she would not scream."
"Why would she scream?" I asked.
"Because sex is very, very painful," he said.
The process he described sounded something like a medical operation in the 1800s, done by a local butcher, without anaesthesia.
I was shocked, needless to say. I had thought all pain in my life was over since vaccinations were done.
I also understood why the boys upstairs were talking about engine pistons and the "cave".
I still remember staring out at the ground, at everyone playing and thinking how horrible life was. If I wanted to have children, it seemed I had to go through incredible agony.
"This does not sound right," I told Kanchanjunga. "God would not have created such a painful process for something so necessary for life."
He looked at me pityingly.
"You have no choice," he said. "And no escape."
So I spent many years frightened of the coming baby-creation duty, without knowing I had the very worst teacher in the world.
Homages to him on this day.

திராமில் - ஒரு ஆய்வு - சிறுகதை


 "சில நாட்களுக்கு முன்னால் என் மேற்பார்வையில்  ஆய்வு செய்யும்  ஆனந்த் என்பவன் ஒரு புதிர் ஒன்றைக் கொண்டு வந்தான்," என்றார் மேக்னஸ்.

பெரும் auditorium. கிரேக்க Colosseum போல  அமைக்கப்பட்டிருந்தது.  நடுவே அடித்த சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றார் மேக்னஸ். அவர் பின்னால்  இருந்த திரையில் வடிவம் புரியாத எழுத்துக்கள் தெரிந்தன. 

"இருபத்தியோராம் நூற்றாண்டின் முதலில் பிரபலமாக இருந்த பேஸ்புக் என்னும் இணைய தளத்தின் பழைய source code  மறைந்த கலிபோர்னியா மாகாணத்தின் இடிபாடுகளில் இருந்து  சென்ற வருடம் எடுக்கப்பட்டது. ஆய்வாளர்களால் அந்த கணினி மொழியில் இருந்து லட்சக்கணக்கான பேஸ்புக் பதிவுகளை மீட்க முடிந்தது. "

திரையில் பல வரிவடிவங்கள் ஓடி பின் ஒன்று நிற்கிறது.

"ஆனந்த் பழைய தென்னிந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில்  உள்நாட்டுப் போரில் இருந்து  தப்பித்த அவனுடைய பாட்டனாரின் பாட்டனாரின் குடும்பம் அகதிகளாகப் பின்லாந்திற்கு வந்து சேர்ந்தது. சென்ற நான்கு தலைமுறைகளாக ஃபின்னிஷ் மொழி பேசும் அவர்கள், அதற்கு முன் ஆங்கிலம் பெரிதும் கலந்த ஒரு மணிப்பிரவாள மொழியைப் பேசி வந்தார்கள்.

"அந்த மறைந்த மொழியின் வரி வடிவமே நீங்கள் பின்னால் பார்ப்பது."

திரையில் வெள்ளைப் பின்னணியில் சில வரிகள் மிளிர்கின்றன.

"இந்த இறந்த மொழியின் பல ஆயிரக்கணக்கான பக்கங்கள், மீட்டெடுத்த பேஸ்புக்கின் தளத்தில், புதிய ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன. அவற்றின் சில புகைபடங்கள் மேலே. இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியவர் யாரும் தற்போது உயிருடன் இல்லை."

அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒரு முணுமுணுப்புப் பரவியது. மேக்னஸ் திரும்பி ஓரமாக நின்ற ஆனந்தைப் பார்த்துப் புன்னகைத்தார். 

"நீங்கள் நினைப்பது சரியே. சிந்து சமவெளியின் எழுத்துக்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னே தம் ரகசியத்தை கைவிட்டன. இது என்ன பிரமாதம்? இல்லையா?"

"ஆனந்தும் நானும் இந்த மொழியின் முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்தோம். எஞ்சி இருக்கும் தென்னிந்தியாவில் இந்த மொழியை யாரும் பேசுவதில்லை. பேராசிரியர் கார்லோஸ் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்த மொழியை கடைசியாகப் பேசிய வயதானவர் ஒருவரை ஒலிப்பதிவிட்டார். அந்தப் பதிவு இதோ."

அரங்கின் ஒலிபெருக்கிகள் கரகரத்தன. முனகும் குரலில் யாரோ ஒருவர் பேசுவது கேட்டது. கீழே திரையில், "டென் ருபீஸ் ...." என்று  வந்தது. 

"பெரியவர் முதலில் சொல்வது ஆங்கிலம்," என்றார் மேக்னஸ். "இந்திய பணமான ரூப்யா என்பதைச் சொல்கிறார். டென் என்பது ஆங்கிலச் சொல் - பத்து என்று பொருள். பத்து ரூப்யா என்று அவர் சொல்வது புரிகிறது. பிறகு? பல முயற்சிகளுக்குப் பின்னும் அவர் கடைசியில் சொல்வது என்ன என்று புரியவில்லை. அது இந்த மர்ம மொழியாகவும் இருக்கலாம். அல்லது ஆங்கிலமாகவும் இருக்கலாம். "

"இந்த நேரத்தில் தான் பேஸ்புக்கின் அகழ்வாராய்ச்சி நமக்கு உதவுகிறது. இது போன்ற இறந்த மொழிகளை மட்டுமின்றி, அதைப் பேசியவர்களின் வாழ்க்கையைக் குறித்தும், அவர்கள் ஆசாபாசங்களைக் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. கடைசியில் ஆனந்துக்கு இது ஒரு வகை தனிப்பட்ட வெற்றி.

"ஆனந்தின் வீட்டில் இந்தப் பழைய மொழியை திராமில்  என்று அழைத்தார்கள். இந்த மொழி மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாகவும், ஆனால் இதில் ஒரு வரி கூடப் படிக்கத் முடியாதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான நிலை. இருபதாம் நூற்றாண்டில், இந்த திராமில் மொழி புழக்கத்தில் இருக்கும் போது இந்நிலை  கட்டாயம் இருந்திருக்காது."

"ஆனந்த், வா," என்றார் மேக்னஸ்,

ஆனந்த் வந்து அவருக்கு அருகில் இருந்த மைக்கை எடுத்துக் கொண்டான். அவன் குடும்பத்தில் பின்லாந்தினருடன் கலப்பு இருந்திருப்பது நன்கு தெரிந்தது. 

"திராமில் மொழியில் நமது காவியமான கலேவலாவிற்கு நிகராக பல காவியங்கள் இருந்ததாக என் தாத்தா சொல்வார். அந்தக் காவியங்களைக் குறித்தும் அவற்றின் ஆராய்ச்சியிலும்  பேஸ்புக்கில் பல விவாதங்கள் நடந்திருக்கும் என்பது என் அனுமானமாக இருந்தது. 

"சுத்தமாக வடிவம் தெரியாத இந்த மொழியை decode செய்ய நான் முதலில் கையில் எடுத்தது பேஸ்புக் அகழ்வாராய்ச்சியில் பழக்கமான ஒரு technique.பொதுவாக பேஸ்புக்கில் நடக்கும் விவாதங்களில் 'பேஸ்புக்" என்னும் சொல்லே பல முறை வருவதை அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு கணிப்பின்படி கிட்டத்தட்ட இரண்டு  சதவிகிதம் சொற்கள் சராசரியாக  பேஸ்புக் என்றே வருகின்றன.

"திராமில் மொழியை இது போல ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மேலே இரண்டு சதவிகிதம் வரும் சில வரிவடிவங்களைக் கொடுத்திருக்கிறேன்."

திரையில், 

"முகநூல்"

"துரோகி"

"பெரியார்"

"தமிழன்"

"வந்தேறி"

என்று புரியாத வரிவடிவங்கள் வருகின்றன. 

"முதலாவதான 'முகநூல்' என்னும் வரிவடிவத்தை Facebook என்று எடுத்துக் கொண்டால் திராமிலில்  நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன. Facebook ஆங்கிலச் சொல்லிலும் நான்கு மாத்திரைகள் இருக்கின்றன. இது நல்ல candidate என்று எண்ணி "மு" என்பதே Pe என்னும் syllable என்று கருதினோம். ஆனால் விரைவில் இது தவறு என்று தெரிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத உழைப்பு வீணாகிற்று. "

"அப்பொழுது என் பாட்டி தம் சிறு வயதில் நினைவு கூர்ந்ததை வைத்து திராமில் மொழியில் ஆங்கில பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கும் பழக்கம் உண்டு என்று தெரிவித்தார். பாட்டி இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம்."

அரங்கில் சிரிப்பு பரவியது. 

"இந்த மொழியை எளிதில் உடைக்க முடியாது என்று தெரிந்து கொண்டோம். பேஸ்புக்கில் பழைய திராமிலர்கள் ஒளித்து வைத்துள்ள ரத்தினங்களைப் பெற முடியுமா என்று பரிதவித்தேன். அப்போது பேராசிரியர் ஆண்ட்ரூவை இங்கிலாந்தில் போய்ப் பார்த்தேன்.

"ஆண்ட்ரூ பேஸ்புக்கில் விளிம்பு நிலை  என்னும் புத்தகத்தை எழுதியவர். அவர் ஒரு முக்கியமான கோட்பாட்டை முன்வைத்தார் - அதாவது இருபத்தியோராம் நூற்றாண்டின் சமூக வலைத்தளங்கள், ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சரணாலயமாக இருந்தன. ஒரு சர்வாதிகார நாட்டில்  இந்த ஒடுக்கப்பட்டவர்கள் பொதுவாக ஜனநாயகத்திற்குப் போராடுபவர்கள். ஆனால் ஒரு ஜனநாயகத்தில்? நான் ஆய்வு செய்த காலத்தில், ஜனநாயக இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த திராமிலரில்,  யார் ஒடுக்கப்பட்டவர்கள்? அவர்களுடைய பதிவுகளே பேஸ்புக்கில் பெரிதும் இருக்கும். 

"நான் திரும்ப பின்லாந்து வரும் போது யோசித்தபடி வந்தேன். ஜனநாயக இந்தியா என்றார் ஆண்ட்ரூ. ஆனால் இந்தியா அப்போது வெறும் ஜனநாயகம் அல்ல. மதசார்பற்றது!"

கூட்டத்தில் பலர் தலையை ஆட்டினர்.

"என்னுடைய தியரி உண்மையானால் மதசார்பற்ற நாட்டில் மத நம்பிக்கையுள்ளவர்களே அல்லவா ஒடுக்கப்பட்டவர்கள்? ஆனால் இதை எப்படி நான் ருசுப்படுத்துவது? 

"இங்கே எனக்கு இந்தியாவின் மற்றொரு அம்சம் உதவியது. இந்தியாவின் பழைய அரசியல் சட்டம் இந்தியாவைப் பொதுவுடைமை நாடு என்றும் அழைத்தது. அப்படியானால் பொதுவுடைமைக்கு எதிரான முதலாளித்துவ ஆதராவளர்களே அப்போது பெரிதும் பேஸ்புக்கில் எழுதி வர வேண்டும். அதிர்ஷ்ட வசமாக முதலாளித்துவர்கள், முதலீடு அறிவுரை செய்பவர்கள் பலர் ஆங்கிலத்தில் எழுத கூடியவர்கள்.

"சென்ற கிறிஸ்துமஸ்  இரவு பேஸ்புக்கில் இது போன்ற ஆங்கிலப் பதிவுகள் எந்த அளவுக்கு முதலாளித்துவ ஆதரவு என்று பார்த்தேன். மறு நாள் விடை தெரிந்தது. கிட்டத்தட்ட  தொண்ணூறு சதவிகிதம் நான் நினைத்தது போலவே இருந்தது. இந்த விடையை எடுத்துக் கொண்டு பேராசிரியர் மேக்னஸை அணுகினேன்."

மேக்னஸ் இப்போது தொடர்ந்தார். 

"புதிரை அவிழ்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். மதசார்பற்ற இந்தியாவில் மத நம்பிக்கை உள்ளவர்களே பெரும்பாலும் பேஸ்புக்கில் திராமில் மொழியில் எழுதுபவர்கள். அவர்களுடைய பதிவுகளை இந்த ஞானத்தோடு அணுகினால்,  ஐம்பது சதவிகிதம் அவர்கள் பயன்படுத்தும் சொற்களை புரிந்து கொண்டு விடலாம். இந்த அடிப்படையில் திரையில் உள்ள சொல்லே திராமிலின் "Pa" என்னும் syllable.முதலில் நாம் decode செய்தது இதுவே."

"ப" என்று திரையில் வந்தது. 

கரகோஷம் அரங்கில் எழுந்தது. 

"இது "na"," என்றார் மேக்னஸ்.

"ன" என்று திரையில் வந்தது. 

அரங்கில் ஒருவர் கையில் மைக் எடுத்தார்.

"மேக்னஸ், ஆனந்த், உங்கள் கணிப்புப்படி அதிக சதவிகிதம் வந்த சொற்கள் அவர்களுடைய மதம் குறித்த சொற்களா? அது என்ன மதம்? அவை என்ன சொற்கள்?"

மேக்னஸ் தலையாட்டினார்.

"நாற்பது சதவிகிதம் வந்த சொற்கள் என்று கீழே உள்ள இரண்டையும் சொல்லலாம்."

திரையில் 

"பார்ப்பான்"

"பார்ப்பனீயம்" 

என்று வந்தது. 

ஆனந்த், "பாட்டி சொன்னது போல அவர்கள் தம்மையே பெரிதும் refer செய்து கொள்கிறார்கள். முதலாவது அவர்கள் இனத்தின் பெயர் - பார்ப்பான். அத்துடன் "ஈயம்" என்னும் விகுதி சேர்ந்தால் அது "பார்ப்பான்களின் வழி," அல்லது "நெறி" என்று கொள்ளலாம்.  பழைய திராமிலர்களின் பேஸ்புக் பயன்பாடு வைத்து நாம் தெரிந்து கொள்வது இதுவே- அவர்கள் பார்ப்பனீயத்தை பின்பற்றியவர்கள். அதனிடம் பெரும் பக்தி கொண்டவர்கள்"

மறதி - சிறுகதை


 சண்டை போடும்  போது எனக்கும் என் மனைவிக்கும் இருக்கும் நினைவுக் கூர்மை ஆச்சரியம் அளிக்கும். வகையில் அதிகமாகி வந்தது. 

2000-த்தில் திருமணம் முடிந்த மறு நாள் கட்டுசாதக் கூடை எல்லாம் முடிந்து என் அப்பா சாமான்களை வேனில் ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார். பெண் வீட்டார் சிலர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மூட்டையை எடுத்து வைத்து விட்டு அப்பா அவர்களைப் பார்த்து, "Can you not help? Don't you have any manners?" என்று கத்தினார்.

இதை 2021-ம் வருடம் ஆவணி மாதம் முதல் தேதிச் சண்டையில் சொல்லிக் காட்டினாள் பிரேமா. 

"பெண் வீட்டுக்காரங்கள்னா அவ்வளவு இளக்காரம். வெளியில தான் liberal-னு நடிப்பு," என்றாள். 

"அவர் English-ல தான கத்தினார். உங்க குடும்பத்துக்குத் தான் புரியாதே," என்றேன் நான். 

இந்தச் சண்டையின்  முடிவில் இரண்டு பக்கமும் நன்றாகக் குத்திக் கிளறிய பின், இரவு பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகள் இருவரும் தூங்கி விட்டார்கள்.  

"நாம ரெண்டு பேருக்கும் நிறைய history இருக்கு, " என்றேன் நான்.  "அதான் இப்படிச் சண்டை வருது."

"நான் ஒரு article படிச்சேன். ஏதோ ஒரு unresolved issue நமக்குள்ள இருக்கு," என்றாள் அவள். "அதை நீங்க முதல்ல டாக்டர் கிட்ட போய் கண்டுபிடிக்கணும்."

"நான் எதுக்கு போகணும்? அதுவும் பையித்தியக்கார டாக்டர் கிட்ட?" என்றேன் நான். 

சில நாட்கள் சென்ற பின் மற்றொரு சண்டையில் தட்டுக்கள் எல்லாம் பறக்க ஆரம்பித்த பின் இருவரும் நிஜமாகவே ஒரு மனோதத்துவ நிபுணரை online-ல் பார்த்தோம்.  ஒரு மணி நேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய். மேலே ஒவ்வொரு அரை மணிக்கும் ஆயிரம் ரூபாய். 

"ரொம்ப பழசெல்லாம் போட்டுக் கிளர்ரா மேடம். ரெண்டு வாரம் முன்னாடி எங்க கல்யாணத்துக்கு  மறு நாள் வரைக்கும் போயிட்டா," என்றேன் நான். 

"இவருக்கு தேதி, டைம்  எல்லாம் நினைவிருக்கு மேடம். இவ்வளவு தூரம் பழசை எல்லாம் நினைவு வச்சிருந்தா அவரோட mental health-க்கு நல்லதில்லையே?" 

எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது. 

"There is some unresolved issue," என்றாள் பிரேமா மறுபடி. 

நிபுணரைச் சில முறை சந்தித்த போதும் சண்டைகள் குறையவில்லை. 

ஒரு முறை அவர் சொன்னார், "நீங்க ரெண்டு பேரும் ஒரு pattern-ல set ஆயிட்டீங்க. கல்யாணம் ஆன புதுசுலையே வந்திருந்தீங்கன்னா இவ்வளவு bad memories accumulate ஆயிருக்காது."

நாங்கள் நிஜமாகவே வருத்தமடைந்தோம். பிள்ளைகள் இருவரும் இப்போது நாங்கள் கத்திக் கொள்ளும் போது ஒரு மாதிரி வேறு ஏதோ உலகத்திற்குப் போய் விடுவது தெரிந்தது. 

"Hypnosis முயற்சி பண்றீங்களா?" என்றார் நிபுணர். 

"அதுல எப்படி இதை சரி பண்ணுவீங்க?" என்று கேட்டாள் பிரேமா. 

"புது research இது பத்தி வந்திருக்கு. உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் உள்ள தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட கசப்பான நினைவுகளை மறக்கடிக்க suggestion கொடுக்கலாம்."

பிரேமா அந்த ஆராய்ச்சிக் கட்டுரை  வாங்கிப் படித்துப் பார்த்தாள். 

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் HR, hypnosis மூலமாக வேலை பார்ப்பவர்களின் negative நினைவுகளை மறக்கடித்திருந்தார்கள். இப்போது எல்லோரும் அந்தக் கம்பெனியில் மிகவும் மகிழ்ச்சியாக  இருப்பதாகத் தெரிவித்தாள்.  எல்லோரும் ஒரு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

"எனக்கு hypnosis work ஆகாது," என்றேன்.

"ஏன்?"

"எனக்கு மனோபலம் அதிகம்." 

"ஐயே!"

மனோதத்துவ நிபுணரிடம் சம்மதம் தெரிவித்தோம். 

"Hypnosisல தேதி அடிமனதுக்குத் தெரியாது. நீங்க ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவம், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவானது, கொண்டு வாங்க. அந்த சம்பவத்துக்கு முன்னால எல்லாத்தையும் மாத்திரலாம்." 

அடுத்த வாரம் நேரில் போவதற்கு நாள் குறித்துக் கொண்டோம்.

"முடிஞ்ச வரைக்கும் latest-ஆ ஏதாவது  choose பண்ணலாம். போன மாசம் உங்க cousin வீட்டு கல்யாணம் போயிருந்தோமே?" என்றாள் பிரேமா.

நான் யோசித்துப் பார்த்தேன். 

"ஆமா, ஆனா அதுக்கு அப்புறம் வந்த sunday நான் உன்னைப் பார்த்து கெட்ட  வார்த்தை சொல்லித் திட்டினேன்."

"அதுனால?" 

"அதுக்கு முன்னால எல்லாம் மறந்திட்டா நான் தான் இப்ப கெட்டவனா ஆயிருவேன். அது தான உன்னோட plan?"

"அப்படிப் பாத்தா நீங்க கெட்ட வார்த்தை சொல்லித் திட்டாத நாளே கிடையாது. அதுக்கு நான் என்ன பண்ண?"

"நீ என்ன பெசன்ட் நகர்ல டிரைவர் முன்னாடி அசிங்கம் பண்ணியே, அது தான் என் வாழ்க்கையிலேயே நான் publicல அவமானப்பட்டது. அதை நான் மறக்கிறதா இல்லை."

"அதுக்கு காரணம் உண்டு. நீங்க அன்னைக்கு என்ன பண்ணினீங்க?"

நான் ஒரு வினாடி நிதானித்து, "என்ன பண்ணேன்?" என்றேன். 

"நினைவில்லையா?" 

"நிஜமாவே இல்லடி!"

சற்று நேரம் இருவரும் மவுனமாக இருந்தோம். 

"இந்த இழவெல்லாம் எதுவும் வேண்டாம்," என்றேன் நான்.