Monday, January 14, 2013

My Tamil story - ஒற்றாடல் - in Solvanam.com


My Tamil novella ஒற்றாடல் has been published in the online magazine Solvanam.com.
Links and short intro are below:
ஒற்றாடல் - காட்டூர் கோட்டை  - Part I
ஒற்றாடல் நரசிம்மாஸ்திரம் - Part II


காட்டூர்க் கோட்டை தரை மட்டமாகி இருந்தது..
பேச்சி மலையின் மேலிருந்து பார்க்கும் போது பெரும் புழுதிப் புகை கிளம்புவது தெரிந்தது..
என் உள்ளம் கொதித்தது. கைகள் நடுங்கின.
“போகலாமா? இப்பொழுது கிளம்பினால் பள்ளியூர் போகச் சரியாக இருக்கும்”, என்றான் வழுதி.
நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன். சற்றுத் தள்ளி, ஒரு பாறையின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்தான். வாயில் வெற்றிலை. நான் பார்க்கும்போது சத்தத்துடன் அதைத் துப்பினான்.
என் மனதில் எழுந்த கோபத்தை அடக்க முயன்று தோற்றேன்.
“என்னுடைய முதல் போர் இது”, என்றேன்.
அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான்.
“வாழ்த்துக்கள்” என்றான்.
“புறமுதுகிட்டு ஓடுகிறோம்”
அவன் எழுந்து குதிரையைத் தட்டிக் கொடுத்தான்.
“நல்ல வேளை குதிரை கிடைத்தது. இந்த மலைகளில் குதிரையில்லாமல் தப்பி ஓடுவது கஷ்டம்”, என்றான்.
“பல முறை ஓடிப்  பழக்கம் போலிருக்கிறது?” என்றேன் நான்.
அவன் ஏறிக் கொண்டான். என்னைப் பார்த்துக் கை நீட்டினான்.
நான் தயங்குவதைப் பார்த்துச் சிரித்தான்.
“ஒற்றர்கள் புறமுதுகிட்டு ஓடலாம். சாத்திரத்திலே சொல்லியிருக்கிறார்கள்”, என்றான்.
குதிரை தட்டுத் தடுமாறி காட்டுக்குள் நுழைந்தது.

Tuesday, December 25, 2012

My Tamil short story in Solvanam


One of my short stories, ரசிகன், has been published in the Tamil Online magazine - சொல்வனம் (Solvanam.com).
Link: http://solvanam.com/?p=23073
Few lines:

வர்ணம் பாடி முடித்ததில் இருந்து நானும் கவனித்துக் கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்த பத்துப் பேர் ஒருவர் ஒருவராகக் கரைந்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் எழுந்து போகும் போது முறைத்துப் பார்த்தேன். ஓங்கி ஓங்கித் தாளம் போட்டேன். பாடிக் கொண்டே உச்ச ஸ்தாயியில் முகம் சுளிக்கக் கூட முயற்சி செய்தேன்.
போனவர்கள் இன்னும் வேகமாக அகன்றார்கள்.
அலுவலக நண்பர்கள் இருவர் எழுந்து ‘தம்’ அடிக்கப் போவதாகக் கை காட்டிச் சென்றார்கள். திரும்ப வரவேயில்லை. தனி ஆவர்த்தனம் நெருங்கியது. மிஞ்சி இருக்கும் நாலு புண்ணியவான்கள் அகன்று விடுவார்களோ என்ற பயத்தில் மிருதங்கத்தானைக் கண்களால் கெஞ்சினேன். அவனோ இரக்கமேயில்லாமல் ஆவர்த்தனம் தொடங்கினான். பளார், பளாரென்று காது கிழிய அவன் அடித்த அடியில் மூன்று பேர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.
எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உட்கார்ந்திருந்த ஒருவருக்காக இன்னும் முக்கால் மணி நேரம் பாட வேண்டுமா? இல்லை நிறுத்தி விட்டு வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கவா?

Tuesday, November 13, 2012

Muslim Policemen in Gujarat story - ToI could have wrong data


A couple of days back, I found a Times of India story circulating in Facebook. The story is here:
Gujarat Tops States in number of Muslim policemen.
The story says that ToI filed a RTI inquiry to the Union Home Ministry for the number of Muslim policemen in all states and their percentage as part of the total police force in each state. When they got back the numbers, they found that Gujarat actually had the best stats among all the states for which data was available.
Gujarat, according to ToI, had 47,424 policemen in total. of them 5021 were Muslims.
This story did not pass the smell test for me.
In the past few years, Narendra Modi, CM of Gujarat, has become a controversial figure. He was CM during the 2002 Gujarat riots. Then he reinvented himself as a "growth" leader. A vocal set of supporters cheer him on (such as during the Nano deal). Some journalists have responded by showing that the Gujarat "story" is not without flaws. They cite some numbers, the other side cites some numbers and it is all confusing.
The above article's focus on Muslim policemen in a police force seemed unusual to focus on. I have a hunch that Muslims are severely underrepresented in the police force (as in many other jobs) all through India. I can understand that in different states the percentage will be different. But, Gujarat was the best in representation? Not even second or third? The very state that people were arguing over? It seemed unlikely to me. So, I did some investigation of these numbers.
First, the number of Muslim policemen and the number of total policemen in each state is available in the National Crime Records Bureau (NCRB). This is a government website. If you click on Crime 2011 in the left hand bar in that website, choose Tables and Go to the Table 17.12, you will find the breakdown of Muslim, SC, ST policemen in each state in India as of 2010.
When people quote crime statistics in India, they use the NCRB data. They supply raw data that you can analyze yourself.
In other words, Times of India need not have filed an RTI query at all. The information was at a Google search away, in a government website.

Now, take a look at the numbers for Gujarat and you will immediately see that they are different from the Times numbers.
                                                     NCRB                                       ToI
Number of Total policemen          71670                                       47424
Number of Muslim policemen      3087                                         5021
The NCRB shows a 4.3% representation in Gujarat, a lot different from the 10% they have from ToI data.
Now, I used the NCRB data and tried to see for a few states, how Gujarat held up to "the best representation. The numbers are below:
State Population(2001) Muslim Population(2001) Percent in General Size of Policeforce Muslims in Policeforce Muslim Percent in Police Difference(%)
Tamil Nadu 62405679 3470647 5.56 95745 3061 3.19 -2.3
Andhra Pradesh 76210007 6986856 9.16 89404 8933 9.99 0.82
Madhya Pradesh 60348123 3841449 6.36 72505 2583 3.56 -2.80
Gujarat 50671017 4592854 9.04 71670 3087 4.30 -4.75
Haryana 21144564 1222916 5.78 50365 415 0.82 -4.95
Kerala 31841374 7863842 24.69 45003 3567 7.92 -16.7
Karnataka 52850562 6463127 12.22 74699 4796 6.42 -5.80

In other words, Gujarat is not on top, but not on bottom either. It is certainly not the best state for Muslim representation in police force; nor does that representation EXCEED the population percentage of Muslims. Tamil Nadu, Andhra and Madhya Pradesh are better and Haryana is about the same as Gujarat.
It is possible that the NCRB numbers are wrong, and the ToI numbers are right, but I doubt it. The total numbers correspond with other data such as density of policemen in the NCRB data.
ToI should explain why they focussed on this number; and why they did not just pick it up from the NCRB website.

Sunday, November 11, 2012

How Leftist Intellectuals Got It Wrong on IAC


An year and a half after the first Anna Hazare protests, I think we can reflect on how it was perceived by intellectuals.
The first thing that we understand is how wrong our famous public intellectuals were. The Hard Left completely dropped the ball on the movement. They proclaimed the supremacy of the Parliament (Constitution is supreme in India, not Parliament. Thus, Anna's rights to protest sup
erseded Parliament's sanctity). They denounced IAC as corporate stooges.
Arundhathi Roy deserves special mention as presenting some of the dumbest criticism of IAC. She called Anna Hazare as a demogogue and then without any irony, asked the media to show porn instead of covering the protests. Meanwhile she was found cheering on protesters in Egypt and Tunisia!
How true were her comments on IAC? After an year and a half, it is obvious that her accusations of them were completely false. She presented them as Trojan Horses for corporates to subvert democracy. But IAC has actually been the most effective voice against RIL, or Tata.
P.Sainath and Justice Markendaya Katju were equally wrong and clueless about the Jan Lokpal bill itself. They accused IAC of being elitist - as if they were not elites themselves.
Why did these people, who are hailed as India's foremost public intellectuals go so wrong?
One, the mediocrity that we see all around in India is common in the "intellectual" sphere also. In other words, some of these people are probably not as smart as they are made out to be. Their arguments will be dismissed out of hand in a well-informed democracy.
Second, these people and most of the Left, for some reason, hates the middle class. They think the middle class is somehow uniquely self-centered; and years of trying to push the interests of the poor has tired them out and caused them to lose perspective (I think this is the case with P.Sainath, whom I respect enormously).
A true Marxist analysis would show that the middle class is absolutely right in looking to its interests. India's middle class is huge, and therefore their concerns may actually impact the nation favorably.
Thirdly, the Left did not make any substantive analysis of the case presented by IAC. Public corruption is, indeed, one of the most important root causes for the majority of suffering in India (others are the caste system, and gender issues, both of which can be addressed only when the government is competent and trusted). I did not see any actual, substantive, arguments from the Left that this was NOT the case. There were mostly polemics, but no actual understanding of how government works.
Government incompetence and corruption affects everyone; and hurts the poor the most. This is not an issue of trains running on time. We will cover this in a separate post.
Finally, some of "opinion" in India is structured around subtle signals. More than having a consistent political world view (such as liberal, libertarian, conservative and so on), Indian opinion makers simply signal to each other and the public on what tribe they belong to. Any issue is used for these signals, than to analyze the issue itself. Arundhathi Roy was not so much commenting about IAC, or the substance of their protests - she was instead signaling her role as a member of the Hard Left, someone who worries about the poor; as someone who was "bucking the trend"; someone who thought the middle class were mostly propagandized idiots. Most of her energies had been invested in these signals than on any real world concerns.
One example is Gail Omvedt's much circulated article linking Anna Hazare with some Manuwadi party. The entire article was structured around one single item - that a nutcase Manuwadi guy was seen in Jantar Mantar during the protests. This was then used to shower self-righteous anger at the IAC movement and denounce them as casteist. The article had no merit.
Let us assume the IAC is actually casteist. Does that have any bearing on their particular protests? Their Jan Lokpal bill was not a secret. It was out there, along with the differences with the government bill.
An overarching theme of the intellectual and public response to IAC is the social distrust that spans our nation. This distrust is mostly caused by corruption. It enables a moral judgemental view of politics, than anything based on substance.

Tuesday, October 23, 2012

Tamil Short Story - மனைவி அமைவதெல்லாம்



பத்து வருடம் முன்னால் எழுதிய கதை. 
Copyrighted to me.

My new story, a Chola period Tamil historical novella, is at Tamil Story - ஒற்றாடல் 

மனைவி அமைவதெல்லாம் 
------------------------------------
இரா.இராமையா

ரிசப்ஷனுக்கு முன்னால் ப்யூட்டி பார்லரில் கண்ணில் வெள்ளரிக்காய் வைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் மாலா. 
"என்னடி தூங்கிட்டியா?" என்று கவிதாவின் குரல் கேட்டது.
"இல்ல..என்ன சொல்லு"
"பிரதாப் உன் கிட்ட எதாவது பேசினாரா?"
"இன்னும் ஒண்ணும் சொல்லலடி."
"ஆனா எப்போதும் எதாவது சொல்ல வர மாதிரி இருக்கார்?"
"எனக்கும் அப்பிடித் தான் தோணுது. பக்கத்துல குனிவேன். பாத்தா எதுவும் சொல்ல மாட்டாரு."
"அவர் ஃபிரண்ட்ஸ் யாரும் கல்யாணத்துக்கு வரலியா?"
"அலையாத..ரிசப்ஷனுக்கு வருவாங்க."

*************

மாலை ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. பிரதாப் எல்லோருக்கும் 
கை கொடுத்தான். மாலா எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள். வீடியோ எடுப்பவர் முன்னால், பின்னால், சற்றே சாய்ந்து, தள்ளி இருந்து ஸூம் செய்து எல்லாம் படம் எடுத்தார்.
பிரதாப் அவரிடம், "அடுத்த படத்துல எனக்கும் ஒரு ரோல் குடுங்க", என்றான். மாலா சிரித்தாள்.
அவன் அவள் அருகே குனிந்தான். ஆனால் வழக்கம் போல 
எதுவும் சொல்லவில்லை.

****************

முதலிரவு அறையில் மாலா நுழையும் போது பாத்ரூமுக்குள் குளிக்கும் சத்தம் கேட்டது. வர வர தண்ணீர் எங்காவது கொட்டும் சத்தம் கேட்டால் பக்கெட்டை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் போல இருந்தது. மாலா படுக்கையின் ஓரம் உட்கார்ந்து உலக வாழ்க்கையின் அநிச்சயத்தைப் பற்றி யோசித்தாள். 
பிரதாப் பாத்ரூமில் மேலெல்லாம் சென்ட் அடித்துக் கொண்டு வெளியே வரும் போது மாலாவின் குறட்டைச் சத்தம் தான் கேட்டது.

*******************

காலையில் மாலா எழுந்த போது பாத்ரூமில் குளிக்கும் சத்தம் கேட்டது. சற்றுக் குழப்பமாக இருந்தது. பிறகு அன்று தான் புகுந்த வீட்டில் புகுகிறோம் என்கிற நினைவு வந்து மற்ற எல்லா எண்ணங்களையும் அழித்தது.
மாப்பிள்ளை வீட்டார் வரும் போது ரயிலில் வருவது போலக் கையை வீசிக் கொண்டு வந்து விட்டுப் போகும் போது லாரி போன்ற ஒரு பெரிய வேனில் கிளம்பினார்கள். உள்ளே பரிசுப் பொருள்களின் அடைசலில் மாலா காலை உயர்த்தி ஒரு அண்டாவிற்குள் வைத்தவாறே வரும் போது பிரதாப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்திருந்தான். அவன் கால்களும் ரொமான்டிக்காக
அதே அண்டாவிற்குள் இருந்தன.
"வாழ்க்கையக் கை கோர்த்திட்டுத் தொடங்காம கால் கோர்த்திட்டுத் தொடங்குறோம்", என்றான்.
மாலா சிரித்தாள். 
பின்னாலிருந்து ஒரு கனத்த குரல், "என்ன விக்குதா?" என்று கேட்டது.
"இல்ல மாமா", என்றாள் மாலா.
வேன் திடீரென்று மிக அமைதியானது. பிரதாப் மெல்லிய குரலில், "கேட்டது எங்க பாட்டி", என்றான்.
மறுபடியும் அதே கனத்த குரல், "மாமாவா? என்ன செவிடா?" என்றது.
பிரதாப்பின் அப்பா, "விடும்மா. ஏதோ தெரியாம பேசிட்டுது", என்றார்.

*****************

வீட்டுக்குள் போனதும் பிரதாப் குளிக்கப் போய் விட்டான். மாலா அறையை விட்டு ஹாலுக்கு வந்தாள். பாட்டி அவளைப் பார்த்து, "வா, இப்பிடி வந்து உக்காரு", என்றாள்.
"இல்ல...வேல எதாவது இருந்தா...", என்றாள் மாலா.
பாட்டி யோசித்து, "அதுவும் சரி தான். போய் வேலையைப் பாரு", என்றாள்.
ஏதோ சம்பிரதாயத்துக்குச் சொல்லப் போய் இப்படி ஆகி விட்டதே என்று தோன்றியது மாலாவுக்கு.
பாட்டி திடீரென்று இடிஇடி என்று சிரித்தாள். தொடையைத் தட்டிக் கொண்டே சிரித்து விட்டு, "சும்மா உக்காரு. இன்னிக்கு லீவு", என்றாள். 
பாட்டி, தாத்தாவாகப் பிறந்திருக்க வேண்டியவள்.

  **************************

அன்று இரவு பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். 
"நீங்க ஏன் ஒரு நாளைக்கு இவ்வளவு முறை குளிக்குறீங்க?" என்று கேட்டாள் மாலா.
அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்து, "எவ்வளவு முறை?" என்று கேட்டான்.
"இன்னிக்கு மட்டும் ஒன்பது முறை."
அவன் யோசித்து, "ரவுண்டா பத்து முறை குளிச்சிட்டு வரேன்", என்றான்.
அவன் வேடிக்கைக்குச் சொல்கிறான் என்று நினைத்து அவள் சிரித்தாள். அவனோ மறுபடி குளியலறைக்குச் சென்றான். தண்ணீர் சளேர், சளேரென்று விழும் சத்தம் கேட்டதும் மாலாவுக்கு முதல் முறையாகக் கவலை எழுந்தது.

***************************     

எல்லோரும் வட்டமாகத் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புது மணப்பெண் என்பதால் மாலா டி.விக்கு முதுகைக் காட்டுமாறு உட்கார வேண்டி இருந்தது. முதல் இரண்டு நாள் 'அண்ணாமலை'யைக் கழுத்தை வளைத்துத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கழுத்து வலித்தது.
பாட்டி டி.வியை விட்டுக் கண்ணே எடுக்கவில்லை. யாராவது பேசினால் அவர்களைப் பார்த்துக் கத்தினாள். எல்லோரும் பாட்டிக்குப் பயந்து பாத்திரங்களை ஸ்லோ மோஷனில் நகர்த்தினார்கள்.
விளம்பர இடைவேளை வந்ததும் பாட்டி கம்பீரமாக 'உம்' என்றாள்.
எல்லோரும் பேசத் தொடங்கினார்கள்.
"என்னடா..இன்னிக்கு ஆபீசுல என்ன ஆச்சு?" என்று கேட்டார் மாமனார்.
"ஆஃபீஸ் போலப்பா. லீவுல இருக்கேன்."
"ஓ.."
இதற்கு மேல் தந்தையும் மகனும் பேசிக் கொள்ள எதுவும் இல்லாமல் சும்மா இருந்தார்கள்.
பாட்டி மாலா மேல் கவனத்தைத் திருப்பி, "மாலா..எதுனா பேசு", என்றாள்.
மாலா தீவிரமாக யோசித்து, "வந்து..", என்று தொடங்கினாள்.
டி.வியில் மறுபடி சீரியல் தொடங்கியது. பாட்டி, "சும்மா கிட", என்றாள்.
அடுத்த விளம்பர இடைவேளைக்குள் பிரதாப் சாப்பிட்டு முடித்து விட்டு, "குளிக்கணும்", என்று கிளம்பினான்.
மாலா அவன் போன பிறகு, "ஏன் அடிக்கடி குளிக்கிறார்", என்று கேட்டாள்.
மாமனார் விட்டத்தைப் பார்த்தார். மாமியார் சாப்பாட்டைக் கவனித்தாள்.
பாட்டி, "ஏன்? உங்க வீட்டுல யாரும் குளிக்க மாட்டீங்களோ?" என்றாள்.
"இல்ல...இவ்வளவு முறை குளிக்கிறாரே..அதான்."
"அவன் தாத்தா மாதிரியே இருக்கான். அவரும் இப்பிடித் தான். ரொம்ப சுத்தம்."
மாலா சற்று நிதானித்து, "ஒரு வேள ஸைகலாஜிகல் பிராப்ளமோனு.." என்றாள்.
பாட்டி, "என்னாது அது?" என்றாள்.
"மனோதத்துவ நோய்", என்றார் மாமனார்.
"இன்னாடா சொல்ற?"
மாமியார் குறுக்கே புகுந்து, "உங்க பேரன மென்டலுன்றா", என்றாள்.
பாட்டி சிங்கம் போலத் தலையைத் திருப்பி மாலாவைப் பார்த்தாள்.
"யாரு மென்டல்?" என்று உரத்த குரலில் தொடங்கினாள்.
திடீரென்று பாட்டி, மாமியார் எல்லோரும் அமைதியானார்கள். 
சீரியல் தொடர்ந்தது. மாலாவுக்கு வயிற்றைக் கலக்கியது. இந்த உரையாடல் அவள் நினைத்ததைப் போலப் போகவில்லை. பாட்டி முகத்தை நோக்கினாள். இப்போது அதில் சாந்தம் தவழ்ந்தது. சீரியல் முடிந்த பின்னர் உயிருக்கு உத்தரவாதமில்லை.

******************************

பிரதாப் குளித்து விட்டு வந்த போது மாலா படுக்கையில்
உட்கார்ந்திருந்தாள். அழுது கொண்டிருந்தாள். அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து, "கவலப்படாத..அண்ணாமலைக்கு ஒண்ணும் ஆகாது",
என்றான்.
இதைக் கேட்டு மாலா இன்னும் பெரிதாக அழத் தொடங்கினாள்.
பிரதாப்புக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவள் அருகில் அமர்ந்து "பாட்டி எதுனா சொன்னாங்களா?" என்று கேட்டான்.
மாலா இல்லை என்று தலையாட்டினாள்.
அவன் அவளை மகிழ்விக்கும் நோக்கத்துடன், "ஹனிமூனுக்குப் போலனு வருத்தப்படாத. இன்னும் ஒரு மாசத்துல குத்தாலத்துல சீஸன். போயிட்டு சுகமா குளிச்சுட்டே இருக்கலாம்..", என்றான்.

மாலாவின் அழுகை அதிகமாயிற்று. "நீங்க ஏன் இவ்வளவு முறை
குளிக்குறீங்க?" என்றாள்.
"என்ன சொல்ற புரியல.."
"ஏன் குளிச்சிட்டே இருக்கீங்க?"
பிரதாப் மௌனமானான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பரிதாபமாக, "இந்த வெயில்ல இது ஒரு கேள்வியா?" என்றான்.
"எனக்குக் கவலையா இருக்கு. எதாவது டாக்டர் பாக்கலாமே."
"டாக்டரா? எதுக்கு? சுத்தமா இருந்தா தப்பா? எங்க தாத்தா கூட.."
"அவருக்கும் எதாவது ப்ராப்ளமோ என்னவோ.."
பிரதாப்புக்கு முதல் முறையாகக் கோபம் வந்தது. "யாருக்குப் ப்ராப்ளம்? உங்க பரம்பரையே பைத்தியம்", என்றான். மாலா மறுபடி அழத் தொடங்கினாள்.
பிரதாப் சற்று நேரம் சென்ற பின், "மாலா..இத பார். இப்பிடிப் பண்ணலாம். நாளைக்கு முழுசா குளிக்காம இருக்கேன். இருந்திட்டேன்னா டாக்டர் வேணாம்", என்றான்.
மாலா தலையாட்டினாள்.

******************************** 

மறுநாள் காலை பாட்டி கால் மேல் கால் போட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராம ஜயம் எழுதிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டி வேலைக்காரியிடம், "வீட்டுக்கு மருமவ வந்தாச்சு..நீ அடுத்த மாசத்துல இருந்து வர வேண்டாம்", என்றாள்.
பிரதாப்பின் அம்மா அவனிடம், "குளிக்காம பல் தேய்க்குற?" என்று கேட்டாள்.
பிரதாப், "இன்னிக்குக் குளிக்கல", என்றான்.
சட்டென்று அறையில் அமைதி நிலவியது. வேலைக்காரி பெருக்குவதை நிறுத்தி விட்டாள். அம்மா கவலையுடன், "ஏண்டா? காய்ச்சலா?" என்றாள்.

"இல்லம்மா. சும்மா தான்."
பாட்டி, "மாலா எதாவது சொன்னாளா? மாலா..இங்க வாடி", என்றாள்.
மாலா நடுங்கிக் கொண்டே வந்தாள்.
"அவனக் குளிக்க வேண்டாம்னு சொன்னியா?"
"இல்ல பாட்டி."
"என்ன நொள்ள பாட்டி?!" என்றாள் பாட்டி.
பிரதாப்பின் அப்பா, "விடும்மா. தண்ணி மிச்சம்", என்றார்.
பாட்டி, "எவ்வளவு நேரம்னு பாப்போம். இவங்க தாத்தா இப்பிடித் தான். வீரமா குளிக்கலடினுவாரு. மதியத்துக்குள்ள சேர்ந்து குளிக்கலாம் வாடிம்பாரு", என்றாள்.
மதியம் நெருங்க நெருங்க பிரதாப்பிற்குத் தவிப்பாக இருந்தது. தலை இடிப்பது போல இருந்தது. சாப்பிட உட்கார்ந்தார்கள். பாட்டி இன்னும் மாலாவை முறைத்தவாறே இருந்தாள். "எங்க காலத்துல புருசனுக்குச் சரியா உக்கார்ந்து பேசக் கூட மாட்டோம்", என்றாள் உரத்து.
பிரதாப் எரிச்சலுடன், "பாட்டி..சும்மா இரு. உக்கார்ந்து பேசாமலே
எட்டு பிள்ள பெத்தாச்சுல்ல", என்றான்.
அவனுக்கு வியர்த்துக் கொட்டுவது போலிருந்தது. பெரும் பாலைவனத்தில் இருப்பதாகத் தோன்றியது. பாட்டி ஏதோ இன்னும் பேசிக் கொண்டிருந்தாள்.
மாலாவைப் பார்த்தான். அவள் மட்டும் நன்றாகக் குளித்துத் தலையில் பூ வைத்து இருந்தாள்.
சட்டென்று எழுந்தான். "நான் குளிக்கப் போறேன்", என்று விட்டு 
விடுவிடுவென்று பாத்ரூமுக்குப் போனான். 
மாலாவுக்குக் கண்கள் கலங்கின.

********************************

மறு நாள் மாலை மாலாவும் பிரதாப்பும் நுங்கம்பாக்கதாதில் இருந்த ஒரு பிரபல மனோதத்துவ டாக்டரின் க்ளினிக்கில் அமர்ந்து இருந்தார்கள்.

பிரதாப் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் போய் விட்டு வர 
எண்ணியிருந்தான். டாக்டரின் நுழைவு அறையில் இவ்வளவு பேர் அமர்ந்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட இருபது பேர் மடக்கு நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
பிரதாப்புக்குத் தெரிந்தவர்கள் யாராவது பார்த்து விட்டால் என்ன
செய்வது என்று கவலையாக இருந்தது. அப்படி யாராவது பார்த்தால் மாலாவுக்குத் தான் பிரச்னை என்று சொல்லி விடத் திட்டம் தீட்டி இருந்தான்.
சுற்றி இருந்த எல்லோரையும் உற்றுக் கவனித்தான். முதலில்
மனோதத்துவ டாக்டர் அறையில் எல்லோரும் உளறிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருப்பார்கள் என்று நினைத்திருந்தான். கிட்டத்தட்ட சோட்டாணிக்கரை பகவதி கோவில் போல இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தான். ஆனால் அறை அமைதியாக இருந்தது. யாரையும் பார்த்தால் மனநோய் கொண்டவர்கள் போல இல்லை. உண்மையில் ரிசப்ஷனிஸ்ட் மட்டுமே தலைவிரிகோலமாக கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பித்து வந்தவள் போல இருந்தாள்.
ஒவ்வொருவராக டாக்டர் அறைக்குள் போய் வந்தார்கள்.
வெளியே வரும் போது சிரித்துக் கொண்டே வந்தார்கள். பிரதாப்புக்குச் சற்றுத் தைரியம் பிறந்தது.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம், "உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?", என்று கேட்டான்.
அவர் முறைத்தார்.
மாலா அவனை இடித்து, "பைத்தியக்காரத்தனமாப் பேசாதீங்க",
என்றாள்.
இப்போது எல்லோரும் திரும்பி அவளை முறைத்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்துப் பக்கத்தில் இருந்தவர், "நான் எனக்காக வரல. ஒரு ஃபிரண்டுக்காக வந்தேன்", என்றார்.
"ஓகோ"
அவர் பிரதாப்பிடம், "உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?" என்று  கேட்டார்.
"இல்ல..நானும் ஃபிரண்டுக்காகத் தான் வந்தேன்."
அவர்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் திரும்பி, "இங்க
எல்லாருமே ஃபிரண்டுக்காகத் தான் வந்திருக்கோம்", என்றார்.
பிரதாப்பின் முறை வந்தது. இருவரும் டாக்டர் முன்னால்
உட்கார்ந்தார்கள்.
"என்ன விஷயம், சொல்லுங்க", என்றார் டாக்டர்.
மாலா, "இவர் ஒவ்வொரு நாளும் நிறைய முறை குளிக்கிறார்",
என்றாள்.
டாக்டர், "குணப்படுத்திரலாம்", என்றார்.
பிரதாப் அதிர்ச்சியுடன், "டாக்டர்..நான் சொல்றதக் கேளுங்க.
இதெல்லாம் ஒரு தப்பா..?" என்றான்.
"எவ்வளவு முறை குளிக்கிறீங்க?" 
"பத்து முறை தான்."
"சின்ன வயசுல இருந்தா?"
"இல்ல டாக்டர். இருபது வயசுல இருந்து.."
"குளிக்காம இருக்க முடியல..இல்லியா?"
பிரதாப் இல்லை என்று தலையாட்டினான்.
"சில டெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு Obsessive Compulsive Disorder இருக்கலாம். கவலப்படாதீங்க. நான் குடுக்கிற மாத்திரை சாப்பிட்டா சீக்கிரமா குணமாயிடும்."
பிரதாப்புக்கு முகம் பேயறைந்தது போல ஆயிற்று.
டாக்டர் தொடர்ந்து, "நூத்துல அஞ்சாறு பேருக்கு வரது தான் இது. பரம்பரைல யாருக்காவது வந்தா உங்களுக்கும் வர ரிஸ்க் இருக்கு", என்றார்.

*******************************
மாலாவும் பிரதாப்பும் க்ளினிக்கை விட்டு வெளியே வந்தார்கள்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார்கள்.
பிரதாப் மௌனமாக நடந்தான். மாலா, "ஃபீஸ் இவ்வளவு கேப்பாங்க தெரியாது", என்றாள். அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. சாலை மஞ்சள் வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. அவன் தாண்டிப் போகும் வண்டிகளைப் பார்த்தவாறு வந்தான்.
மாலா அவன் கையைத் தொட்டு, "என் மேல கோபமா?" என்றாள்.
அவன் இல்லை என்று தலையாட்டினான். 
"கவலப்படாதீங்க..ஒரு மாசத்துலயே பலன் தெரியும்னாரே டாக்டர்."
அவன் சட்டென்று நின்றான். "நீ என்ன டைவர்ஸ் பண்ணிரு மாலா",என்றான்.
மாலா புன்னகையுடன், "அதுக்குள்ள போரடிக்குதா?" என்றாள்.
அவன் கண்களில் நீர் பளிச்சிட்டது. "டாக்டர் சொன்னாரு பாரு. 
பரம்பரையா வரலாமாம். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு", என்றான்.
மாலா, "வரலாம் தான சொன்னாரு. பிள்ளைங்கள குளிக்கவே விட மாட்டேன்..கவலப்படாதீங்க", என்று சிரித்தாள்.
"இல்ல மாலா..என்ன டைவர்ஸ் பண்ணிரு."   
"முதல்ல சரியாப் போகட்டும். அப்புறம் டைவர்ஸ் தான்", என்றாள்.
இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.
"பாட்டி கிட்ட சொல்லணுமா?" என்று கேட்டாள் மாலா.
"வேண்டாம். பெரிய ரகளையாயிடும்", என்றான் அவன்.

**********************

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மாலை வீட்டுக்குள் 
பிரதாப்பும் மாலாவும் வந்த போது பாட்டி, அம்மா, அப்பா மூவரும்
ஒரே சோபாவில் நெருக்கியடித்து அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்னை என்று தெரிந்தது.
அப்பா, "ஏண்டா..எதோ டாக்டர் கிட்ட போறியாமே?" என்றார்.
பிரதாப், "இல்லியே", என்றான்.
அம்மா விசும்பலுடன், "ஐயோ..பொய் வேற சொல்றானே", என்றாள்.
"நுங்கம்பாக்கத்துல நீ ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போன போது எங்க ஆஃபீஸ் சுப்பிரமணி பார்த்திட்டான்."
பிரதாப் கவலையுடன், "அவர் அங்க எதுக்கு வந்தாராம்", என்று கேட்டான்.
"எதோ ஃபிரண்டுக்காகப் போனானாம். நீ ஏண்டா பைத்தியக்கார
டாக்டரெல்லாம் பாக்குற?"
பிரதாப், "மாலாவுக்கு தொண்ட கட்டு. அதான் போனோம்", என்றான்.
"ஏண்டா பொய் சொல்ற?"
பாட்டி, "ஏ மாலா..இங்க வாடி. டாக்டராண்ட போனீங்களா?" என்றாள்.
மாலா தயக்கத்துடன், "ஆமாம்", என்றாள்.
"எதுக்கு?"
"இவருக்குத் தான்."
அம்மா மாலாவை முறைத்தாள்.
பாட்டி எழுந்து நின்றாள். தன் இரும்பு போன்ற கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தாள். "அதான் இவன் கொஞ்ச நாளா கம்மியாக் குளிக்கிறானா?" என்று கேட்டாள்.
"ஆமாம் பாட்டி." 
அம்மா, "அடிப் பாவி..எம் புள்ளயப் பைத்தியமாவே ஆக்கிட்டீங்களே", என்றாள்.
"தா..சும்மா கிட", என்றாள் பாட்டி.
தொடர்ந்து, "இவன் தாத்தாவும் அந்தக் காலத்துல எல்லா டாக்டரும் பாத்தாரு. அப்பல்லாம் மாத்திரை ஒண்ணுமில்லை. இப்ப இருக்கு. நல்லதாப் போச்சு", என்றாள்.
பாட்டி தங்கள் பக்கம் பேசியதும் பிரதாப்புக்கும் தைரியம் பிறந்தது.
"அம்மா, சும்மா பைத்தியம் அது இதுனாத. அங்க வர எல்லாரும் ரொம்ப டீஸன்ட். நீ வேணா வந்து பாரேன். ஜாலியா இருக்கும்", என்றான்.

மாலாவும் அவனும் அறைக்குள் சென்றார்கள். கதவைச் சார்த்தி விட்டு பிரதாப் அவளிடம் திரும்பினான். "பாட்டி வாழ்க", என்றான்.
"மெதுவாப் பேசுங்க."
அவன் அவளை நெருங்கி வந்து அணைத்தவாறு, "டைவர்ஸ் பண்ணலாமா?" என்றான்.
அவள் முகத்தைச் சுளித்தவாறு ஒரு எட்டுப் பின்னால் போனாள்.
"இப்பல்லாம் குளிக்கிறதே இல்லையா? போய்க் குளிச்சிட்டு வாங்க."

***********************************************************

My new story, a Chola period Tamil historical novella, is at Tamil Story - ஒற்றாடல் 



 









    
.

Wednesday, October 17, 2012

The Political Class in a Democracy


I had never served in a public capacity anywhere - college board, or anything. Last year, my new apartment complex wanted to get a preliminary Management Committee (MC). I became a member, with the idea that I would write about the "political" experience in my blog.
After serving 8 months, in which we went through horrible times, and things got very personal (with slander and wild accusations), I left last December - because of work considerations. It became too personal to write about.
But, one thing I learnt has relevance to the wider world.
The MC was elected. It had around 9 members and the apartment complex had 75 owners. It is a small community, which the MC was supposed to represent.
But somehow, this whole idea that we were "representatives" - a smaller group just for convenience - went out the window as soon as we were formed into the committee. Mind you, there are no benefits or money to be had, by being in the MC. Yet, almost as soon as we formed a small group, this group started discussing its own "powers". The MC formed an identity. At one point, when I suggested that we should consult with the broader association for some decisions, some members asked me to have a "team spirit". That is, they saw ourselves as a team, with separate interests and concerns from the broader association. The association members were seen as people to be "managed" - by giving selective information - so that they could be kept in line. It was a struggle to keep meeting records, because some of the items discussed were meant to be "within us". I argued in vain that whatever we did had to be transparent to everyone in the association.
It is a remarkable dynamic, and it tells us something valuable about politics in a democracy. It tells us that a political class is formed as soon as we choose representatives. This class sees itself as long-suffering and victimized(as our PM seems to feel). It has contempt in many cases for the people represented. It also controls information and propaganda.
In a representative democracy, it is inevitable that this political class has more in common WITHIN itself, than those "outside". Therefore, the differences between the ADMK and DMK; the Congress and the BJP etc, that the media focuses on is not the story at all. The real story is the differences between the whole political class and the governed citizens, the rest of us.
I am not sure there is a way to combat this.
In national politics, of course, there is real money and power involved.
This is why front page coverage of (for example) cabinet reshuffles; or "the Left leaders and BJP leaders joining hands" or Working committee meetings never made sense to me. The front page coverages would be a lot more interesting, if they had different ways in which the political class is using power against the governed.
One of the prime examples of this class pulling together, is the 2G case - even though there seemed to be improprieties, NO Congress leader even allowed that they were in the wrong. There were not even hypothetical statements. The reason is obvious - they know that they have to look out for each other. This is also why nobody talks about dynastic politics anymore.
The only way is for exerting pressure on this class by civil society. That is not revolutionary or seditious. It is the only appropriate way to manage this class.

Sunday, May 13, 2012

இந்நாட்டு மன்னர் - Tamil Short Story - 4


 காமெடி, தமிழில் எழுத வேண்டும் என்று முடிவு எடுத்த பின் நான் எழுதிய முதல் கதை இது. Back in 2002. அதற்கு முன்னால் serious கதை ஒன்று எழுதி “கல்கி” நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு வாங்கி இருந்தேன் (1995).  பிறகு எல்லோரையும் அழ வைக்க வேண்டும் என்று சில கதைகள் எழுதினேன். எதுவும் பதிப்பிக்கப்படவில்லை.
அமெரிக்கா போய் ஆங்கிலத்தில் எழுத முயற்சி செய்தேன். சகிக்கவில்லை. என்ன செய்வது என்று முழித்த போது என் மனைவி சொல்லி முதன் முதலில் காமெடி எழுதினேன்.
இது திண்ணை online இதழில் பதிப்பிக்கபட்டதாக ஒரு நினைவு. லிங்க் எதுவுமில்லை.
அரசியல் பற்றிய பார்வை எனக்கு இப்பொழுது முழுமையாக மாறி விட்டதால், இந்தக் கதை seems dated.
இதற்குப் பிறகு எழுதிய கதையான “கர்வம்” வானவில் கூட்டம் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.


இந்நாட்டு மன்னர்
----------------------
             
    எம்.எல்.ஏ தணிகாசலம், தன் பெயரை நியூமராலஜி காரணமாக தண்ணிகாச்சல்லம் என்று மாற்றி வைத்த உடன் மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்பினார். கோடம்பாக்கம் குட்டித் தெரு சோதிடர் கணிப்பு வீண் போவதில்லை என்று சட்டசபையில் கேள்வி நேரத்து அரைத் தூக்க அரட்டையில் முணுமுணுத்தார் பக்கத்து சீட் ராமநாதன் (ரம்மநாத்தன்).
பெயர் மாற்றி வைத்து கையெழுத்து போடத் தொடங்கிய ஒரு வாரத்தில் தலைவர் பி.ஏ ஃபோன் செய்தார்.
"தலைவர் பேத்தி காது குத்து விழாவோட சேர்த்து கட்சி புத்தம் புது புத்துணர்ச்சி மாநாடு நடத்துறாரு. ஆரம்ப முதல் கடைசி வரையில் நீ தான் பொறுப்பா இருந்து நடத்தி வைக்கணும்னு சொல்லிட்டாரு. உனக்கு நல்ல சான்ஸ் தணி, வெளுத்துக் கட்டு ", என்றார்.
தணிகாசலத்துக்கு உடம்பு ஆடியது. நெஞ்சம் பூரித்த்து. கட்சியில் அறுபது எம்.எல்.ஏ. தலைவர் தம்மைத் தேர்ந்தெடுத்துச் சொல்கிறார். மந்திரி பதவி நிச்சயம். மின்சார வாரியம் கிடைத்தால் போதும். ஒரு வேளை எம்.பி நியமனம் கிடைக்கலாம். மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்பு. இந்தி படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
தொகுதிக்கு ஃபோன் அடித்து தமக்கு நெருக்கமான மூவரைக் கூப்பிட்டார். வட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர், ஊர் பஞ்சாயத்து பிரஸிடண்ட் மூவரும் மன மகிழ்ந்து சென்னையில் வந்து இறங்கினார்கள்.
 "நெசமா தலைவரு என் பேரைச் சொன்னாராண்ணே?" என்று கேட்டார் வட்டம்.
 "நீ இல்லாம இது நடக்காதுனு அவருக்குத் தெரியும்வே!"
பி.ஏ சொன்னது போலவே முதலில் போஸ்டர் அடித்தார்கள். 'காது குத்த அஞ்சாத தங்கமே', 'தட்டானைத் தட்டிக் கேட்கும்   சிங்க  குட்டியே' என்று தொடங்கி, 'வருங்கால முதல்வர் பெற்ற  வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வரே' என்னும் வரை சென்னை மாநகரமெங்கும் போஸ்டர் அடித்தார்கள். 'உலகம் கண்டறியா' ஊர்வலத்துக்கு மேடை கட்டினார்கள். சிலம்பத்துக்கு ஆள் குறைய பஞ்சாயத்து சிலம்பம் சுற்றினார். பிரியாணி வாங்க கும்பலிடையே அடிபட்டு மிதிபட்டு கடைசியில் நால்வரும் களைத்துப் போய் நடந்தே எம்.எல்.ஏ ஹாஸ்டலை அடைந்தார்கள்.
இரவு ஒரு மணி.
"தலைவரைப் பார்த்து பேசக் கூட முடியலியே", என்று வருத்தப்பட்டார் வட்டம்.
"பிஸியா இருந்திருப்பாருல்ல. நான் நாளைக்குப் பார்க்கும் போது அவசியம் சொல்றேன்."
"சரி, சென்னையைச் சுத்திப் பார்த்த மாதிரி ஆச்சு", என்றார் ஒன்றியம்.
 "அண்ணே, ரொம்ப நாளா ஒரு ஆசை. சிங்கம் பார்க்கணும்", என்றார் பஞ்சாயத்து.
இப்படித் தான் சிறிய ஆசைகளில் பெரிய விபரீதங்கள் தொடங்குகின்றன.
"சும்மா தூங்குவே", என்றார் ஒன்றியம்.
"இல்லண்ணே, நெசமாவே  சிங்கம் பார்க்கணும்னு ஆசை. பொண்டாட்டி கிட்ட வேற சொல்லிட்டு வந்துட்டேன்..."
"நாளைக்கு ராத்திரி நெல்லை எக்ஸ்பிரஸ் பிடிக்கணும். எங்க போறது சிங்கத்தப் பாக்க?"
வட்டம், "வண்டலூர் ஜூ சொல்றீங்களா? எனக்கும் பாக்கணும்னு இருக்கு".
எம்.எல்.ஏ, "நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அஸெம்பிளில முக்கியமான ஓட்டு இருக்கு", என்று இழுத்தார்.
மற்றவர்கள் பொறாமையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சட்டசபை; ஒட்டு; நிகழ்கால முதல்வர்; 'சபாநாயகர் அவர்களே' ; பிடுங்கி எறிய முடியாமல் பொருத்திய மைக்; இறுக்க கட்டிய கரை வேட்டிகள்...
"என்ன விஷயம் பத்தி ஓட்டுண்ணே?"
".... கட்சி எம்.எல்.ஏ சட்டை போடாமல் சட்டசபைக்கு வரலாமான்னு கேள்வி எழுப்பி இருக்காரு. கூட்டணி கட்சியும் ஆளுங் கட்சியும் சேர்ந்து எதிர்க் கட்சிக்கு சம பலமா இருக்கு. நாளைக்கு ஓட்டுல ஒரு ஆள் குறைஞ்சாலும் ஆட்சி கவுந்துடும். எல்லாரும் இருந்தே ஆகணும்னு தலைவர் சொல்லிட்டாரு."
"நாலு மணிக்குத் தானே ஒட்டு? நாம காலையில போயிட்டு வந்துரலாம்"  என்றார் பஞ்சாயத்து.
எம்.எல்.ஏ யோசித்தார். பாவம், எல்லோரும் மாங்கு, மாங்கு என்று வேலை பார்த்து இருந்தார்கள்.
"சரி, சீக்கிரமா போயிட்டு வந்துரலாம்."

*
மறு நாள் காலையில் நால்வரும் .... தொகுதி எம்.எல்.ஏ காரை கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வண்டலூர் கிளம்பினார்கள். எம்.எல்.ஏ ஓட்டிக் கொண்டு போனார்.
"ஆத்துல தண்ணி ஓடுதாவே?" என்று கேட்டார் எம்.எல்.ஏ.
"எங்கண்ணே... மழை இல்ல, தண்ணியும் இல்ல. நம்ம ஊருல முன்ன எப்பிடி சிலு சிலுனு காத்து வரும்; இப்பல்லாம் எரியுது."
 "மாரியம்மனுக்கு பூசை போட்டா எல்லாம் சரியாயிடும்."
 "பூசைல ஒரே குளறுபடி. முன்ன கிடா வெட்டுவோம். இப்ப அதுல்லாம் வெட்டக் கூடாதுன்னா எப்பிடி மழை வரும்?"
இப்படியாக இனிமையாக பேசிக் கொண்டு போனார்கள். வண்டலூரில் டிக்கட் வாங்கி உள்ளே போன போது மணி பதினொன்று. நுழை வாயில் அருகில் இருந்த கொரில்லா கூண்டு முன்னால்  சற்று நின்றார்கள். தள்ளி இரு கொரில்லாக்கள் தெரிந்தன. ஒன்று மற்றொன்றுக்கு பேன் பார்த்துக்
கொண்டிருந்தது.
"இவ்வளவு தள்ளி இருக்கு?" என்று வியந்தார் வட்டம்.
இங்கிருந்து எம்.எல்.ஏவுக்கு  தலைவலி  தொடங்கியது. எல்லா இடத்திலும் நின்று நின்று போனார்கள். வட்டம் எதைப் பார்த்தாலும் கறி வைத்து தின்றால் நன்றாக இருக்கும்  என்று அபிப்பிராயப்பட்டார். ஒன்றியத்தின் அப்பா எல்லா மிருகங்களுடனும் சண்டை போட்டிருந்தார். பஞ்சாயத்து கேள்வி மேல் கேள்வி போட்டு சித்திரவதை செய்தார். எம்.எல்.ஏவின் பொறுமை எல்லை கடக்கும்படி கடைசியாக,  'ஒட்டகம் பெருசா,  ஒட்டகச் சிவிங்கி பெருசா?' என்று கேட்டதும் தணிகாசலம்,  "முதல்ல லயன் ஸஃபாரி போகலாம்..நேரமாச்சு", என்றார்.

*
ஒரு முப்பது வயது மதிக்கத் தக்க பெண் இரு சிறுவர்களுடன் ஸஃபாரி கிளம்பும் இடத்தில் நின்று கொண்டிருந்தாள். வேன் வந்து நின்றதும் எல்லாரும் ஏறிக் கொண்டார்கள். சரியாகப் பனிரெண்டு மணிக்கு வண்டி கிளம்பியது.
கூண்டு போன்ற வண்டி. சுற்றிப் பாதுகாப்பான இரும்பு வலை. உள்ளே வசதியுடன் உட்கார்ந்து போக இருக்கைகள் இருந்தாலும் எல்லாரும் நின்றார்கள். வழக்கம் போல முன்னால் இந்த வண்டியில் சவாரி செய்தவர்கள் தங்கள் முத்திரையை விட்டுச் சென்றிருந்தார்கள். இருக்கைகளின் பின்னால் 'மீனா, ஐ லவ் யூ...சுந்தர்', 'கருப்பம்பட்டி சுதாகர்' என்றெல்லாம் எழுதி இருந்தது.
செடிகளும் மரங்களும் அடர்ந்து இருந்த பாதையில் வண்டி சென்றது. வெறும் மண் பாதை. இரு பக்கமும் சரிந்து பள்ளத்தில் முள் செடிகளும் உதிர்ந்த இலைகளும் தெரிந்தன.
ஸஃபாரி தொடங்கியதில் இருந்து வண்டியில் மௌனம் நிலவியது. எல்லாரும் மர ஒட்டைகளுக்கு இடையே சிங்கம் தெரிகிறதா என்று பார்த்து வந்தார்கள்.
பேசும் போது முணுமுணுத்தார்கள்.
பஞ்சாயத்துக்கு  எங்கெங்கு நோக்கினும் சிங்கம் தெரிந்த்து. சில சமயம் மர உச்சியில் எல்லாம் சிங்கத்தைப் பார்த்தார். எல்லோரையும் அழைத்துக் காட்டினார். சிறுவர்கள் இருவரும் தம் அம்மாவை இறுக்கப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் கண்கள் மலர்ந்திருந்தன.
"டிரைவர், என்னப்பா சிங்கத்தையே காணோம்?" என்று கேட்டார் ஒன்றியம்.
டிரைவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் வண்டி சிறிது தூரத்தில் நின்றது.நின்ற இடத்திற்கு இரு பக்கமும் இருந்த பள்ளத்தில், இடது பக்கம் மரங்கள் இல்லை. சரிவான பள்ளத்தின் முடிவில் ஒரு சிறிய ஓடை இருந்தது.
கலங்கலான அந்த ஓடைத் தண்ணீரை நாலு சிங்கங்கள் குடித்துக் கொண்டிருந்தன. கால்களை அகற்றிக் குனிந்த நிலையில் அவற்றின் பெரிய தலைகள் மஞ்சள் நிறத்தில் பளிச்சிட்டன. ஒரு ஆண் சிங்கமும் மூன்று பெண் சிங்கங்களும் இருந்தன. அவை வண்டியைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
சற்று நேரத்தில் தண்ணீரை விட்டு விலகி நாலும் காட்டுக்குள் சென்று மறைந்தன.
"பூனை மாதிரியே இருக்கு!" என்றார் எம்.எல்.ஏ.
"எங்க அப்பா இது கூட சண்டை போட்டிருக்காரு", என்றார் ஒன்றியம்.
சிறுவர்கள் இருவரும அம்மாவிடம் சிங்கத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். எல்லோரும் சிறிது நேரம் சிங்கம் திரும்பி வருகிறதா என்று பார்த்தார்கள்.
"சிங்கம் பாக்கணும்னியே, பாத்தாச்சாவே?" என்று எம்.எல்.ஏ மீசையை முறுக்கினார்.
"வண்டியை விடுப்பா.." என்றார் வட்டம்.
"நம்ம கட்சிக்கு சிங்கம் சின்னமா மாத்தணும்ணே", என்றார் .பஞ்சாயத்து.
"என்ன இன்னும் வண்டி கிளம்பலை?" என்றார் வட்டம் உரத்து.
"தம்பி, வண்டியை கிளப்புப்பா!!" என்று டிரைவருக்கும் பயணிகளுக்கும் இடையே இருந்த வலைக் கதவைத் தட்டினார் ஒன்றியம.
டிரைவர் பக்கம் இருந்து சத்தமே இல்லை.
"என்னப்பா, வண்டியைக் கிளப்பு", என்று எம்.எல்.ஏ வலை வழியாகக் கத்தினார்.
டிரைவர் தலை ஒரு பக்கம் சாய்ந்திருந்தது. கண்கள் மூடியிருந்தன.
"ஐயையோ!" என்றார் .பஞ்சாயத்து.
எல்லோருமாகச் சேர்ந்து கதவை இடித்துக் கத்தினார்கள். ஆனால் மூடிய கண் மூடியபடி இருந்தது.
எம்.எல்.ஏ சுற்றிப் பார்த்தார். ஒன்றியத்திடம் "ஒரு நிமிஷம் சுத்திப் போய் டிரைவரைத் தட்டி எழுப்புங்கண்ணே", என்றார்.
"என்னது! வெளில போயா? வெளில சிங்கம் இருக்குவே!"
"உங்கப்பா சிங்கம் கூட சண்டை போட்டார்னீங்க?"
 "சண்டை போட்டார்னு தான் சொன்னேன். ஜெயிச்சாருன்னு
சொன்னேனா?"
"யாரும் கீழல்லாம் இறங்ிகக் கூடாது. சின்னப் பசங்க இருக்காங்க", என்றாள் அந்தப் பெண்.
"என்ன அவசரம்? நாம வரலைன்னா கொஞ்ச நேரத்துல அவங்களே தேடிட்டு வருவாங்க. இங்கயே இருப்பம். சிங்கம் வருதா பாப்போம்",  என்றார் வட்டம்.
எம்.எல்.ஏ மிரள மிரள விழித்தார். பகீரென்றது அவருக்கு. "ஐயோ, ஓட்டு.." என்று தலையில் கை வைத்து அமர்ந்தார்.
"என்ன பொல்லாத  ஒட்டு... கேட்டா சொல்லிக்கலாம்", என்றார் பஞ்சாயத்து.
"உங்க கிட்ட செல் ஃபோன் இல்லையா? அது இருந்தா ஃபோன் பண்ணி ஆளுங்களைக் கூப்பிடலாமே?"
எம்.எல்.ஏ அசட்டையாக, "அதெல்லாம் இல்லை. ஒண்ணு குடுத்தாங்க. அது சரியா வேலை செய்யலை. சும்மா கிர், கிர்னு குதிக்குது. எதோ ரிப்பேர்", என்றார்.

*
அரை மணி நேரம் சென்றது. எம்.எல்.ஏ மூலையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார். அவர் மனதில் பல காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
சட்டசபைக் கதவுகள் மூடியிருந்தன. உள்ளே சபாநாயகர் மாட்சிமையுடன் அமர்ந்திருந்தார். எதிர்கட்சி பெஞ்சுகளில் சலசலப்பு. "தணிகாசலம் வரலை; ஓட்டு நமக்குத் தான்", என்று எல்லாரும் பேசிக் .கொண்டிருந்தார்கள். எதிர்கட்சித் தலைவர் கையைக் குலுக்க பலத்த போட்டி.
ஆளும் கட்சி பெஞ்சுகளில் சோகம் கப்பியிருந்தது. "தணி கவுத்துட்டான்", என்று தலைவர்  தலையில் கை வைத்திருந்தார்.
"ஓட்டெடுப்பு தொடங்கட்டும்", என்றார் எதிர்கட்சித் தலைவர்.
"ஒரு அரை மணி கழிச்சு தொடங்கலாமே?" என்றார் ஆளும் கட்சித் தலைவர்.
"எதுக்கு?'
 "வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. காலையில இருந்து பேதி."
"அதோட இப்போ எம கண்டம்",  என்றார் கூட்டணிக் கட்சித் தலைவர்    
எதிர்கட்சித் தரப்பில் பெரும் கூக்குரல் எழுந்தது.  சபாநாயகர் சுத்தியை எடுத்துத் தட்டினார். எதிர்கட்சி அங்கத்தினர்கள்  சபை நடுவுக்கு ஓடி வந்தார்கள். ஆளும் கட்சித் தரப்பில்  வேட்டியை தூக்கிக் கட்டித் தயாரானார்கள். மார்ஷல்கள் மாண்புமிகு அங்கத்தினர்களைத் தடுக்க முன்னால் வந்தார்கள்.
படீரென்று ஒரு சத்தம்.
சட்டசபைக் கதவுகள் திறக்கின்றன. சூரிய வெளிச்சம் கண் கூச திறந்த கதவுகள் பின்னால் இருந்து ஒரே புகை. வாசலில் ஒரு நிழல் உருவம் தெரிந்தது.  .  
எல்லோரும் கண்ணை மறைத்த வண்ணம் பார்த்தார்கள். அந்த உருவம்  'கர்ரக்', 'கர்ரக்' என்று ஷூ சத்தமிட இறங்கி வந்தது.
வேட்டியை மடித்துக் கட்டியது.        
"நான் வந்திட்டேன்", என்றார் தணிகாசலம்.

*
தலையை உலுக்கிக் கொண்டார் தணிகாசலம்.
மணி ஒன்று. ஓட்டெடுப்புக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. இப்படி உட்கார்ந்து இருந்து ஒரு புண்ணியமில்லை.
வீரத்துடன் எழுந்தார்.
ஜன்னல் வழியே சிங்கம் போன திசையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவருடைய சகாக்கள் மூவரும்.
"இங்க வாங்கய்யா", ஏன்றார்.
"யாரும் வர மாதிரி தெரியலை. இந்த ஜூவே ஒரு மாதிரி. கொஞ்ச நாள் முன்னாடி ஏதோ சிங்கமோ புலியோ காணாம்ப் போனதே நாலு நாள் கழிச்சுத் தான் கண்டுபிடிச்சாங்க. நாம காத்திருந்து புண்ணியமில்லை."
"அதுக்காக... வெளியில எல்லாம் போக முடியாதுவே!" என்றார் ஒன்றியம்.
எம்.எல்.ஏ  அவரை முறைத்தார். "ஓட்டு போடாட்டி எனக்கு மட்டும் பிரச்சினை இல்லை.  சிங்கம் பாக்கணும்னு சொன்னது யாருவே? எதிர்கட்சி கூட சேர்ந்துட்டு சதியா பண்ணுறீங்க?"
மூவரும் அமைதியாக இருந்தார்கள்.
"நான் உண்மையான கட்சித் தொண்டன். நீங்க சொல்றதைச் செய்யறேன்",  என்றார் வட்டம்.
ஒன்றியம் பல்லைக் கடித்தபடி தலையை ஆட்டினார்.
பஞ்சாயத்தை யாரும் கேட்கவே இல்லை.
"என்ன பண்ணலாம்?" என்று கேட்டார் ஒன்றியம்.
எம்.எல்.ஏ  யோசித்தார்.
"நாலு பேரும் கீழே இறங்குவோம்.."
"உம்.."
"பக்கத்து மரத்துல இருந்து நாலு கிளையை உடைச்சு வேல் கம்பு செய்வோம்."
"உம்.."
"இந்தப் பாதை வழியா ஓடுவோம். எப்பிடியும் கதவுல கொண்டு போய் விடும்."
"வழியில  சிங்கம்  வந்தா?"
"வேல் கம்பு வச்சு சண்டை போட்டு விரட்டுவோம். வீரப் பரம்பரைய்யா நாம.."
"யாரும் வெளியல்லாம் இறங்ிகக் கூடாது. சின்னப் பசங்க இருக்காங்க", என்றாள் அந்தப் பெண் மறுபடி.
எம்.எல்.ஏ  அந்தப் பெண்ணை உறுத்து விழித்தார்.
"இந்தம்மா சொல்றதெல்லாம் நாம கேட்கணும்னு இல்லை", என்றார் ஒன்றியம்.
"அதானே?" என்றார் வட்டம்.
"வேல் கம்பு செய்ய ரெடியா?" என்று கேட்டார் எம்.எல்.ஏ.
அந்தப் பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.
"ஏம்மா சிரிக்கிற?" என்றார்  பஞ்சாயத்து.
"பின்ன... என்னங்க பிளான் போடறீங்க? நாலு பேர் எதுக்கு? இந்த வண்டி இருக்குல்ல? யாராவது இறங்கி டிரைவரைத் தள்ளி வச்சிட்டு வண்டியை ஓட்டிட்டுப் போறது தானே?"
எம்.எல்.ஏ யோசித்தார்.
"இது நல்ல யோசனையா இருக்குண்ணே!" என்றார்  பஞ்சாயத்து.
"எல்லாம் சரி. யாரு போறது?" என்று கேட்டார் வட்டம்.
"வட்டம், உள்ளதுல இளவட்டம்  நீ தான்.  போறியா?" என்றார் எம்.எல்.ஏ.
" ஆமாம்பா. அதோட இப்ப சிங்கத்துக்கு லஞ்ச் டைம். சாப்பிட்ட சிங்கம் யாரையும் ஒண்ணும் பண்ணாது",   என்றார் ஒன்றியம்.
 "எதோ சிங்கத்துக்கு சத்துணவு போடறாப்பல பேசுறீங்க. அந்தச் சிங்கம் எல்லாம் நாலு நாள் பட்டினி கிடந்த மாதிரி இருந்தது",   என்றார் வட்டம்.
"ஒண்ணு பண்ணலாம். யாரு போறதுன்னு குலுக்கல் முறையில தேர்ந்து எடுக்கலாம்", என்றார் எம்.எல்.ஏ
பஞ்சாயத்திடம் ஒரு பேப்பரை எடுத்து, பேனாவைக் கொடுத்தார்கள்.
"எழுதுவே...மந்திரம்..",   என்றார் ஒன்றியம்.
"என் பெயரை தண்ணிகாச்சல்லம் பி.ஏன்னு போடுப்பா", என்றார் எம்.எல்.ஏ.
பெயர்களை விரைவாக எழுதிக் குலுக்கிப் போட்டார்கள்.
"தம்பி, நீ வந்து எடுப்பா",  என்று அந்தப் பெண்ணின் பையனைப் பார்த்துச் சொன்னார்  வட்டம்.
அவன் வந்து எடுத்தவுடன், அந்தப்  பெண்ணிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.
பஞ்சாயத்தின்  பெயர் வந்திருந்தது.

*
எல்லோரும் கதவுப் பக்கம் குழுமி  நின்றார்கள். பஞ்சாயத்தின் கை கால்கள் ஆடின.
"சிங்கம் வந்தா நகராமத் தரையில படுத்துரு. இறந்துட்டனு நினைச்சு சிங்கம் ஒண்ணும் பண்ணாது." என்றார் ஒன்றியம்.
"சிங்கம் பாக்கணும்னு சொன்னேன்..இவ்வளவு பக்கத்துலன்னு சொல்லலியே", என்றார்  பஞ்சாயத்து.
பிறகு எம்.எல்.ஏவிடம், "சொத்து எல்லாமே வைப்பு மவன் வெங்கடேசனுக்குத் தான். என் மவன் அவன்  தான்.  வேற யாருக்கும் சல்லி காசு கிடையாது."
"வீடு யாருக்கு?" என்றார் வட்டம்.
"சும்மா இருய்யா..அவனே பயந்திருக்கான். கருமாரி பெயரை சொல்லிட்டுப் போவே",   என்றார் ஒன்றியம்.
"இறங்கி என்ன பண்ண்ணும்னு தெரியுமில்ல?" என்று கேட்டார்  எம்.எல்.ஏ.
'டிரைவரைத் தள்ளி வைக்கணும்", என்றார்  பஞ்சாயத்து. அவர் குரல் தழுதழுத்தது.
"பிறகு வண்டி ஓட்டிட்டுப் போகணும்..",  என்றார் எம்.எல்.ஏ.
"வண்டி ஓட்டணுமா?"  அவர் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
"ஆமா."
"எனக்கு வண்டி ஓட்டத் தெரியாதே", என்று கம்மிய குரலில் அழுதார்.
எல்லோரும் விக்கித்து நின்றார்கள். "என்னண்ணே..  வண்டி ஓட்டணும்னு நீங்க சொல்லவே இல்லியே?" என்றார் வட்டம்.
"எனக்கும் வண்டி ஓட்டத் தெரியாது",  என்றார் ஒன்றியம்.
எம்.எல்.ஏ சுற்றிப் பார்த்து விழித்தார்.

*
இந்த முறை எம்.எல்.ஏ கை, கால் நடுங்க கதவுப் பக்கம் நின்றார்.
எல்லோரும்  மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறக்கையில் திடீரென்று கையைத் தூக்கி நிறுத்தினார்.
"எங்கயோ சிங்கம் உறுமற மாதிரி இல்ல?"
வட்டம் தொண்டையைக் கனைத்தார். "காலையில சாப்பிட்டது. வாயுத் தொந்தரவு."
கதவைத் திறந்து எம்.எல்.ஏ இறங்கியதும்  பின்னால்  கதவை மடேரென்று சாத்தி மூடினார்கள்.
எம்.எல்.ஏ சுற்றி பயத்துடன் பார்த்தார். பிறகு பின்னால் திரும்பி,  வலைக் கதவு வழியே வேனுக்கு உள்ளே பார்த்து கையைக் காட்டினார். அவருடைய சகாக்கள் மூவரும் கதவருகே நின்று, "என்ன?" என்று கத்தினார்கள்.
"கத்தாதீங்கய்யா...தூங்குற சிங்கத்த எழுப்பிடுவீங்க போலிருக்கே", என்று பதிலுக்குக் கத்தினார் எம்.எல்.ஏ. "அந்த அம்மாவைக் கூப்பிடுங்க."
அந்தப் பெண் கதவருகே வந்து, "என்ன?" என்று கேட்டாள்.
"இப்ப எந்தப் பக்கம் போகணும்?"
"இப்படியே போங்க. போய் பாஸெஞ்சர் கதவைத் திறந்து உள்ளே
போன உடனே  கதவைச் சாத்துங்க. கதவு பூட்டியிருந்தா நேரா திரும்ப வாங்க.  வேல் கம்பெல்லாம் வேண்டாம்."
எம்.எல்.ஏ தலையை அசைத்து மெதுவாக நடக்கத் தொடங்கினார்.
முதல் முதல் கள்ள ஓட்டு போட்ட போது அடித்துக் கொண்ட மாதிரி அவர் நெஞ்சு அடித்துக் கொண்டது. பின்னால்  எந்த நிமிடமும் சிங்கம் பாயலாம் என்று தோன்றியதால் சற்றே குனிந்து நடந்தார். ஏனோ ஸ்லோ மோஷனில்
நடந்தார்.
பின்னால் மறுபடி உறுமல் சத்தம் கேட்டது. "நேத்து நைட்டு தின்ன பிரியாணிக்கு அப்புறமும் வட்டத்துக்கு எப்படி வாயு வருது?" என்று ஆச்சரியப்பட்ட வண்ணம் வேன் கதவைத் திறந்து உள்ளே ஏறி அமர்ந்து கதவைச் சார்த்தும் போது பின் கண்ணாடியைப் பார்த்தவருக்குத் தூக்கி
வாரிப் போட்டது.
பின்னால் ஒரு சிங்கம் மெதுவாக உறுமிய வண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தது. வேனின் பின் டயரை முகர்ந்து பார்த்தது.
எம்.எல்.ஏ கதவை மெதுவாகச் சார்த்தி விட்டு "வெங்கடாசலபதி,
வெங்கடாசலபதி", என்று முணுமுணுத்த வண்ணம் தலை முடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
சிங்கம் வேனைத் தாண்டி நடந்து சென்று மறைந்தது. அது திருப்பத்தில் மறையும் வரை அமைதி நிலவியது. பிறகு, "எம்மாம் பெரிசா இருக்கு!" என்றார் பஞ்சாயத்து.
எம்.எல்.ஏ பல்லைக் கடித்தார்.
"பேட்டை ரௌடியாட்டம் போவுது பாரு. எல்லாத்தையும் கூண்டுல பிடிச்சுப் போட்டு முட்டிக்கு  முட்டி தட்டணும்",  என்றார் ஒன்றியம்.

*
சற்று ஒல்லியான டிரைவரை ஆராய்ந்து பார்த்ததில் மூச்சு வருவது தெரிந்தது. 'தண்ணி' அதிகம் என்று தோன்றியது. அவனைத் தூக்கி வெளியே போட வேண்டும் என்ற வட்டத்தின் அபிப்பிராயத்தை ஒதுக்கி அவனைக் கஷ்டப்பட்டு இடம் மாற்றினார் எம்.எல்.ஏ.
வேன் கிளம்பியது.
சிறிது  தூரம் பாதை நேராகச் சென்றது.
"இன்னும் சிங்கக் குட்டியைப் பாக்கலியே!" என்று வருத்தப்பட்டார்
பஞ்சாயத்து.
ஒரு திருப்பத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது.
எம்.எல்.ஏ வண்டியை நடுவில்  நிறுத்தினார். "எந்தப் பக்கம்மா
போகணும்?" என்று திரும்பிக் கேட்டார்.
"அங்க ஒரு போர்டு இருக்கு. அது பக்கம் போய் நிறுத்துங்க", என்றாள் அந்தப் பெண்.
எம்.எல்.ஏ வேனை போர்டு பக்கம் கொண்டு போய் நிறுத்தினார்.
எல்லோரும் போர்டை உற்றுப் பார்ப்பார்கள். அந்த போர்டின் மேல்  'வருங்கால  முதல்வர் பெற்ற  வருங்கால முதல்வர் பெற்ற வருங்கால முதல்வரே' என்று போஸ்டர் ஒட்டி இருந்தது.
"அடக் கடவுளே!"  என்றார் வட்டம்.
"போஸ்டரை யாராவது இறங்கிக் கிழிங்கய்யா" என்றார்  ஒன்றியம்.
அந்தப் பெண் குறுக்கிட்டு, "அதெல்லாம் வேணாம். அந்த ரோடு  பிரியற இடத்துல போய் வண்டியை நிறுத்துங்க. முன்னாடி போன சிங்கம் சாப்பிடப் போவுது. அது போன திசையில தான் நம்மளும் போகணும்", என்றாள்.
ரோடில் சற்று முன் சென்ற சிங்கத்தின் தடம் தெளிவாகத் தெரிந்தது. இடது பக்கம் சென்ற பாதையில் திரும்பினார்கள். சிறிது நேரத்தில் தூரத்தில் வாசல் கதவுகள் தெரிந்தன.
எம்.எல்.ஏவின் சகாக்களுக்கு குதூகலம் தாங்கவில்லை.
"சாதிச்சுட்டோம்ல!"  என்றார் வட்டம்.
"சிங்கத்தையே ஜெயிச்சுட்டோம்", என்றார்  ஒன்றியம்.
திடீரென்று வட்டம், "அண்ணே! வண்டியை நிறுத்துங்க!  நிறுத்துங்க!" என்று அலறினார்.
எம்.எல்.ஏ என்னவோ ஏதோ என்று நினைத்து பிரேக் போட்டார்.
"என்னப்பா?!"
"இத பாருங்க, நாம வரலைன்னு தெரிஞ்சதும் வெளியில பெரிய
கூட்டமே வந்திருக்கும். பத்திரிகைக்காரங்க, டி.வி எல்லாம்
காத்திருப்பாங்க."
"அதனால?"
"அவங்க கேட்டா நாம உண்மையைச் சொல்லணும். நடந்ததை
அப்படியே  சொல்லணும்."
ஒன்றியம் புரிந்து கொண்டு,  "ஆமாவே" என்று ஆமோதித்தார்.
வட்டம் தொடர்ந்து, "நானும் இவரும் கீழே இறங்கி வேல் கம்பு
செஞ்சதைச் சொல்லணும். தணி வந்து வீரமா டிரைவரைத் தள்ளும் போது, எங்க மேல ரெண்டு சிங்கம் பாயுது..."
"நாலு", என்றார் ஒன்றியம்.
"நாலு சிங்கம் கூட சண்டை போட்டு துரத்திட்டோம்.. என்ன நான் சொல்றது?"
"நான் என்ன பண்ணிணேன், நான் என்ன பண்ணிணேன்...",  என்று குதித்தார் பஞ்சாயத்து.
"நீ இந்த அம்மாவையும் பசங்களையும் பாத்துக்கலையா.." என்றார் வட்டம்.
கதவு நெருங்கி விட்டது.
ஒன்றியம், "தம்பி, நம்புற மாதிரி இருக்கணும்னா நாம கொஞ்சம்  காயப்பட்ட மாதிரி காட்டிக்கணும்", என்றார்.
வட்டம் வேட்டியைத் தூக்கி டர்ர்ரென்று கிழித்துக் கொண்டார்.
பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து, "நீ திரும்பிக்கம்மா" என்று விட்டு இன்னும் சிறிது கிழித்துக் கொண்டார்.
ஒன்றியமும் தொடர்ந்து சட்டையைக் கிழித்து விட்டு, எம்.எல்.ஏவிடம் "நீயும்  கொஞ்சம் கிழிச்சுக்கவே",  என்றார்.
"சும்மா இருங்கண்ணே. நல்ல வேட்டி இது ஒண்ணு தான். மத்ததெல்லாம் சட்டசபையில கிழிச்சாச்சு."
வண்டி இரண்டு கதவுகளையும் தாண்டி வெளியே வந்தது. வெளியே பலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எம்.எல்.ஏ  வண்டியை நிறுத்தினார். கதவைத் திறந்து அவர் இறங்குவதற்குள் , பின்னால் வட்டம், ஒன்றியம், பஞ்சாயத்து மூவரும் வெற்றிப் புன்னகையுடனும், கிழிந்த வேட்டி, சட்டைகளுடனும் கீழே இறங்கினார்கள்.
கதவுகள் பக்கமிருந்து ஒருவன் விடுவிடென்று நடந்து  எம்.எல்.ஏ முன்னால் வந்து நின்றான்.
"ஏய்யா இவ்வளவு லேட்டு? அடுத்த ரவுண்டுக்கு இவ்வளவு பேர்
நிக்கிறாங்க இல்ல?"

*